Saturday 31 October 2015

Curving technics of our ancestors

உங்கள எந்த அளவு இம்ப்ரெஸ் பண்ணும்னு தெரியல இருந்தும் நான் பாத்து மிரண்ட சில விஷயங்கள உங்களுக்கு சொல்றேன், அதே ஆங்கெல்ல நீங்களும் பாருங்க.

1) ரொம்ப க்ளோசா வாட்ச் பண்ணுங்க அரையடிக்கு அரைஅடி அளவே இருக்குற இந்த சிற்பத் தொகுப்பு ஒரே கல்லுல செஞ்சது கிடையாது ரெண்டு கல்லோட ஜாயிண்ட், வலது பக்கம் ஓரத்துல லேசா ஒடஞ்சிருக்காட்டி நம்மால நிச்சயமா கண்டு பிடிச்சிருக்க முடியாது. இதுல பெரிய சேலஞ் என்னன்னா ரெண்டு கல்லும் ஒண்ணு மேல ஒண்ணு உக்காரும் போது ஒரு நூல் அளவு வெலகினாலும் பாக்க நல்லா இருக்காது..மொத்த உழைப்பும் வீணாகும். ஆனா நான் சொன்ன பிறகு தான் அது ரெண்டு கல்லுன்னே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்!. இப்போ கேள்வி என்னன்னா..What Calculations they have used to bring this perfection?

2) கிரானைட் ஒரு முரட்டுத் தனமான கல்லு. இன்னைக்கு அத கட் பண்ணவே பெரிய ப்ளேட் கொண்ட ராட்சஸ சைஸ் மஷினும் பல கேலன் லிட்டர் தண்ணியும் தேவைப்படுது. அந்த கல்லுல வெறும் சுத்தியலும் உளியும் மட்டுமே வெச்சி அந்த பூ, மாலைத் தொங்கல், முத்துத் தோரணம், அந்த முத்துத் தோரணம் சாதாரணமா கூட இல்ல.. மூணு சிங்கத்தோட வாயில இருந்து வருது, அதுல நடுவுல இருக்குற சிங்கத்த முழுசாவும், இடது, வலது பக்கம் இருக்குற சிங்கத்த பாதியாவும் காட்டி இடுக்குறது தான் வித்தை! அப்டியே மறக்காம 2 இன்ச் சைஸ்ல மேல இருக்குற அந்த அந்த பூதகனன்களோட முகங்களையும் பாருங்க!! இப்போ கேள்வி என்னன்னா..Did they used a needle to carve these things?

3) இதுல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம்னா, படத்தோட இடது பக்கம் ஆடிட்டு இருக்குற அந்த பெண்ணோட முகம்! கிரானைட கட் பண்ணுறதே சவால்னா! அதுல இந்த "Graceful Face" ன்னு சொல்லுவாங்களே அந்த வார்த்தைய அந்த பெண்ணோட முகத்தோட ஒப்பிட்டு பாருங்க! இன்னும் கொஞ்சம் க்ளோசா வாட்ச் பண்ணோம்னா நம்ம உடம்ப அப்படி வளைக்குறதே சிரமம், அப்படியே நாம செஞ்சாலும் உடம்ப அந்த அளவுக்கு வளைக்கும் போது முகத்துல கஷ்டத்த தான் நாம காட்டுவோம், அந்த வளைவுக்கு மத்தியில அவ்வளவு அழகான ஒரு expression கொடுக்கக் முடிஞ்சிருக்குன்னா! அந்த அளவுக்கு Trained
Artist அன்னைக்கு இருந்திருக்காங்கன்னு தான அர்த்தம்!. அத பாத்து..பாத்து..பாத்து..உள்வாங்கி இருந்தாதானே அத கல்லுல கொண்டு வந்திருக்க முடியும்?

4) இன்னும் கொஞ்சம் ஜூம் பண்ணி உள்ள போங்க..படத்தோட வலது பக்கம் இருக்குற பெண் நேரா ஆடிட்டு இருக்கா..அதனால அவ கழுத்துல இருக்குற சங்கிலி நேரா தொங்குது..இடது பக்கம் இருக்குற பெண் ரொம்ப வேகமா Cross Leg ல ஆடிட்டு இருக்கா..வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அந்த சங்கிலி எப்படி ஆடிட்டு இருக்குன்னு பாருங்க..சிற்பமே ரொம்ப ரொம்ப சின்னது..அதுலயும் இந்த சங்கிலிய கூட இந்த அளவு மெனக்கெட்டு காட்டி இருந்திருக்காங்கன்னா.. என்ன ஒரு தொழில் பக்தி இருந்திருக்கணும். வடிச்சி முடிக்க எத்தன மாசம் கஷ்டப்பட்டிருபாங்கன்னு தெரியல..ஆனா அவங்களோட Final Ultimate Aim நாம பாத்து ஒரு நொடி ரசிக்கனும்குறது மட்டும் தான்!

ஆதித்த கரிகாலன் காலம்.
1100 வருடங்கள் கடந்தது.

No comments:

Post a Comment