Thursday 15 October 2015

தஞ்சை பெரிய கோவில்..

பலகோடி நூறாண்டு நம் தஞ்சை
கோயில் வாழ வேண்டும் ! ! !
இதை படிப்பதற்கே தலை
சுற்றுகிறது ,
இது எப்படி சாத்தியமானது ? ? ! !
கோயில் எப்படி கட்டப்பட்டது ????
என்ற தகவல் உங்களுக்காக.
படிப்பதற்கு பெரியதாக உள்ளது
என பாதியில் நிறுத்திவிட
வேண்டாம்.. இதை ஒவ்வொரு
தமிழனும் தெரிந்து
கொள்ளவேண்டும் .
தஞ்சாவூர் பெருவுடையார்
கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள்
பல உண்டு. இரண்டு அல்லது
மூன்று தளங்களை மட்டுமே
கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு
வந்த காலத்தில், கற்களே
கிடைக்காத காவிரி சமவெளிப்
பகுதியில், 15 தளங்கள் கொண்ட
சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு
கற்கோயிலை ராஜராஜன்
எழுப்பியது என்பது மாபெரும்
சாதனையே. அது மட்டுமன்றி,
கல்வெட்டுகள், சிற்பங்கள்,
ஓவியங்கள், வழிபாட்டுக்கான
செப்புத் திருமேனிகள் என்று பல
புதிய அம்சங்களையும் இத்
திருக்கோயிலில் புகுத்தி கோயில்
கட்டும் கலையில் ஒரு புரட்சியை
ஏற்படுத்தியவன் ராஜராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப்
பற்றிப் பல நூல்கள்
வெளிவந்துள்ளன. ஆயினும்
இவற்றில் முரண்பாடுகள்
காணப்படுகின்றன. கோபுரத்தின்
உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85
மீட்டர் வரை குறிப்பிடப்பட்ட
ுள்ளன. எனவே சோழர் கால
அளவுகளின்படி கோயிலின்
திட்டமிடப்பட்ட உயரம் என்ன,
கடைக்கால்கள் எந்த
அடிப்படையில் திட்டமிடப்பட்டன.
கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள்
முதலியன இல்லாத ஒரு காலத்தில்
சுமார் 60 மீட்டர் உயர கோபுரம்
எவ்வாறு கட்டப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு விடைபெற
நாம் ராஜராஜன் காலத்தில்
கையாளப்பட்ட அளவு
முறைகளைப் பற்றிச் சற்று
தெரிந்து கொள்ளவது அவசியம்..
பெரிய கோயில் அளவுகோல்...
எட்டு நெல் கதிர்களை
அகலவாட்டில் ஒன்றோடொன்று
நெருக்கமாக அமைத்து அந்த
நீளத்தை விரல், மானாங்குலம்,
மானம் என்று அழைத்தனர்.
இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை
முழம் என்று அழைக்கப்பட்டது.
ஒரு முழமே இருவிரல் நீட்டித்து
பதினாறு விரல் அகலத்து,
ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு
விரலோடு ஒரு தோரை உசரத்து
பதுமம் என்ற திருமேனி பற்றிய
குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு
விரல் என்பது 33 மில்லி
மீட்டராகும். கருவறை
வெளிச்சுவர்களில் காணப்படும்
கலசத்தூண்களின் அகலம் 10
விரல்களாகும், அதாவது 0.33
மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர்
பெரிய கோயிலின் அடிப்படை
அளவாகும். இதனை நாம் அலகு
என்று குறிப்பிடலாம். இந்த
அடிப்படையில் விமானத்தின்
திட்டமிட்ட உயரம் 180 அலகுகள்.
அதாவது சுமாராக 59.40 மீட்டர்.
சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12
அலகுகள். இதைப்போன்று 15
மடங்கு உயரமான 180 அலகுகள்,
அதாவது 59.40 மீட்டர் என்பதே
கோபுரத்தின் திட்டமிடப்பட்ட
உயரம். கருவறையின் இரு
தளங்களிலும் விமானத்தின்
பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து
15 தளங்கள் என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது. அலகுகளின்
அடிப்படையில் கருவறை 24
அலகுகள் கொண்ட ஒரு சதுரம்.
கருவறையின் உட்சுவரும்,
வெளிச்சுவரும் முறையே 48
அலகுகள், 72 அலகுகள்
அளவுடைய சதுரங்களாகும்.
பிரகாரத்தில் நாம் காணக்கூடிய
விமானத்தின் அடிப்பகுதி (உபானா)
90 அலகுகள். இந்த அடிப்படையில்
விமானத்தின் கடைக்கால் 108
அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க
அளவு கொண்ட பெரிய சதுரமாக
இருக்கலாம் என யூகிக்க
முடிகிறது. சரியான அளவுகள்
தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த
ஆழத்திலேயே, அதாவது 5
அலகுகள் ஆழத்தில்
அமைக்கப்பட்டுள்ளது எனத்
தெரியவந்துள்ளது. கோயில்
வளாகத்தின் அருகே பாறை
தென்படுகிறது. ஆயினும் சுமார்
42,500 டன் எடையுள்ள
விமானத்தை பாறையின் தாங்கு
திறனைச் சோதித்துப் பார்க்காமல்
கட்டியிருக்க மாட்டார்கள் என்று
தோன்றுகிறது. சுமார்
1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ
ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை
ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு
கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக்
கொண்டே போய் பாறையில்
எப்போது விரிசல்கள் விழுகின்றன
என்பதைக் கவனித்த பின்னரே
கடைக்காலின் அளவுகள்
தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
பாறையின் மேல் வரும் அழுத்தம்
குறித்த சோதனைகள் இக்கோயில்
நிர்மாணித்த சிற்பிகள்
மேற்கொண்டனர் என்பது
இக்கோயிலின் மற்றொரு
சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான
வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட
கோயில் விமானம் எவ்வாறு
கட்டப்பட்டது என்பது குறித்த
குறிப்புகள் எதுவுமில்லை. சில
சாத்தியக் கூறுகள் மட்டுமே
பரிசீலிக்கலாம். கருவறையின்
உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட
உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த
இடைவெளி படிப்படியாகக்
குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர்
உயரத்தில் இரு சுவர்களும்
இணைக்கப்பட்டன. இங்கிருந்து
விமானம் மேலே எழும்புகிறது.
சுவர்களை இணைத்ததன் மூலம்
72 அலகுகள் பக்க அளவு கொண்ட
(சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய
சதுர மேடை கிடைக்கப் பெற்றது.
விமானம் 13 தட்டுகளைக்
கொண்டது. முதல் மாடியின்
உயரம் சுமார் 4.40 மீட்டர்,
பதின்மூன்றாவது மாடியின் உயரம்
சுமார் 1.92 மீ. பதின்மூன்று
மாடிகளின் மொத்த உயரம் 32.5
மீட்டராகும். பதின்மூன்றாவது
மாடியின் மேல் எண்பட்டை வடிவ
தண்டு, கோளம், கலசம் மூன்றும்
உள்ளன. இதன் மொத்த உயரம் 30
அலகுகள். அதாவது
பிரகாரத்திலிருந்து விமானத்தின்
13-வது மாடி சரியாக 150
அலகுகள் (50 மீ) உயரத்தில்
உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த
உயரத்தை மூன்று சம உயரப்
பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி
உயரம் 50 அலகுகள், விமானத்தின்
முதல் மாடியிலிருந்து 5-வது
மாடி வரை 50 அலகுகள்,
விமானத்தின் 6-வது
மாடியிலிருந்து 13-வது தளம்
வரை 50 அலகுகள். இந்த மூன்று
பகுதிகளுக்கும் அதன்
உயரத்துக்கேற்ப தனித்தனியான
சார அமைப்புகள் அமைக்கத்
திட்டமிட்டிருந்தர் என்று
தெரிகிறது.
சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு
மேல் தளமும் உள்ளன. மேல்
தளத்தின் கூரை சரியாக 50
அலகுகள் (16.5 மீ) உயரத்தில்
உள்ளது. இங்கு தான் முதல்கட்ட
சாரம் - ஒரு சாய்வுப் பாதை
முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட
சாய்வுப் பாதைகள்
உபயோகப்படுத்தப்பட்டுள்ளது
தெரிகிறது. இவை பல
ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்
வகையில் அமைக்கப்பட்டன.
சாய்வுப் பாதையின்
இருபக்கங்களிலும் கற்கள் -
சுண்ணாம்புக் கலவை கொண்டு
கட்டப்பட்ட உறுதியான சுவர்கள்
இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு
நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5
மீ அகலம் இருக்கலாம்) பெரிய
மற்றும் சிறிய உடைந்த கற்கள்,
துண்டுக் கற்கள் ஆகியவற்றால்
நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல.
யானைகள் செல்வதற்கு ஏற்ற
மிதமான வாட்டத்துடன்
அமைக்கப்பட்டன. மழைநீர்
வடியவும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. கோயிலின்
திருமதில் சுவரும் (சுமார் 1 மீ
குறுக்களவு கொண்டது) இதே
பாணியில் கட்டப்பட்டிருந்தது
என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல்
100 அலகுகள் வரை (சுமார் 16.5
மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம்
வரை) விமானம் கட்டுவதற்குச்
சற்று மாறுபட்ட சாரம்
தேவைப்பட்டது. இது அமைப்பில்
சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர்
அரண் மதில் சுவர் அமைப்பாக
செங்குத்தான இரு சுவர்களையும்,
அதன் நடுவே முதல்கட்ட
சாரத்தைப் போல் யானைகள்
செல்வதற்கேற்ற வழித்தடத்தையும்
கொண்டிருந்தது. விமானத்தின்
நான்கு பக்கங்களையும் சுற்றிச்
செல்லுமாறு அமைந்திருந்த இந்த
அரண் மதில் சாரம், கோபுரம் உயர
உயர தானும் உயர்ந்து கொண்டே
சென்றது. முதல் கட்ட சாய்வுப்
பாதையின் இறுதிகட்ட மேடைச்
சுவர்களுடன் இந்த இரண்டாம்
கட்ட சாரத்தின் சுவர்கள்
இணைக்கப்பட்டிருந்தன. இந்த
கட்டுமானத்தின் அமைப்பில்
மிகுந்த கவனம் தேவைப்பட்டது.
இதுமட்டுமன்றி இந்த அரண்
சுவர்களுக்கு நிறைய கற்களும்
தேவைப்பட்டன. முதல் கட்ட
சாரங்களில் சில கலைக்கப்பட்டு,
அவற்றின் கற்கள் முதலியவை
செங்குத்தான அரண் சுவர்கள்
கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்
பட்டன என்று நம்புவதற்கு
இடமிருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150
அலகுகள் வரையிலான விமானப்
பணிகளுக்காக மரத்தினாலான
வலுவான சாரம்
அமைக்கப்பட்டது. சவுக்குக்
கழிகள், சணல் கயிறுகள்
தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல
உறுதியான மரங்களிலான தூண்கள்
நேர்ச்சட்டங்கள்
குறுக்குச் சட்டங்கள்
அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம்
இணைக்கப் பெற்றன. இவை
இரண்டாவது கட்ட மதில் அரண்
சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன.
செங்குத்தான தூண்களும் நேர்
சட்டங்களும் மேடைகளை
விரும்பிய விதத்தில் அமைத்துக்
கொள்ள உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்த
ு மேடைகளுக்குக் கற்களையும்
சிற்பிகள் மற்றும் ஏனைய
தொழிலாளர்களையும் எடுத்துச்
செல்ல சாய்வுப் பாதைகள்
அமைப்பது இந்த முறையில்
எளிதாகவிருந்தது.
மேலே கூறிய அமைப்பு ஒரு
சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட
அரண் மதில் சுவர் சாரத்துக்கு
முதல் கட்ட சாய்வுப் பாதைகள்
கலைக்கப்பட்டு, அதன் கற்கள்
பயன்படுத்தப்பட்டன. விமானக்
கட்டுமானப் பணிகள் அனைத்தும்
முடிவுற்றதும் சாரங்கள்
கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம்
அனைத்தும் கோயில் மதில் சுவர்,
மதில் சுவர் உள்புறத்தில்
காணப்படும் துணைக் கோயில்கள்,
நுழைவுவாயில்கள், சாலைகள்
அமைப்பது முதலிய
கட்டுமானங்களில் எவ்வித
சேதாரமுமின்றி முழுமையாகப்
பயன்படுத்தப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment