Wednesday 2 December 2020

தமிழகநதிகள்,

 #தமிழகநதிகள்??  1.கடலூர் மாவட்டம்  a)தென்பெண்ணை, b)கெடிலம், c)வராகநதி, d)மலட்டாறு, e)பரவனாறு,                          f)வெள்ளாறு, g)கோமுகி ஆறு, h)மணிமுக்தாறு, i)ஓங்கூர்  2.விழுப்புரம் மாவட்டம்  a)கோமுகி ஆறு, b)மலட்டாறு, c)மணிமுத்தாறு  3.காஞ்சிபுரம் மாவட்டம்  a)அடையாறு, b)செய்யாறு, c)பாலாறு, d)வராகநதி, e)தென்பெண்ணை,                   f)பரவனாறு     4.திருவண்ணாமலை மாவட்டம்  a)தென்பெண்ணை, b)செய்யாறு, c)வராகநதி, e)வெள்ளாறு  5.திருவள்ளூர் மாவட்டம்  a)கூவம், b)கொஸ்தலையாறு, c)ஆரணியாறு, d)பாலாறு  6.கரூர் மாவட்டம்  a)அமராவதி, b)பொன்னை  7.திருச்சி மாவட்டம்  a)காவிரி, b)கொள்ளிடம், c)பொன்னை, d)பாம்பாறு  8.பெரம்பலூர் மாவட்டம்  a)கொள்ளிடம்  9.தஞ்சாவூர் மாவட்டம்  a)காவிரி, b)வெட்டாறு, c)வெண்ணாறு, d)கொள்ளிடம்,  e)அக்கினி ஆறு  10.சிவகங்கை மாவட்டம்  a)வைகையாறு, b)பாம்பாறு, c)குண்டாறு, d)கிருதமல் ஆறு,  11.திருவாரூர் மாவட்டம்  a)காவிரி, b)வெண்ணாறு, c)பாமணியாறு, d)குடமுருட்டி  12.நாகப்பட்டினம் மாவட்டம்  a)காவிரி, b)வெண்ணாறு  13.தூத்துக்குடி மாவட்டம்  a)ஜம்பு நதி, b)மணிமுத்தாறு, c)தாமிரபரணி, d)குண்டாறு,       e)கிருதமல் ஆறு, d)கல்லாறு, e)கோராம்பள்ளம் ஆறு  14.தேனி மாவட்டம்  a)வைகையாறு, b)சுருளியாறு, c)தேனி ஆறு, d)வரட்டாறு, e)வைரவனாறு  15.கோயம்புத்தூர் மாவட்டம்  a)சிறுவாணி, b)அமராவதி, c)பவானி, d)நொய்யலாறு, e)பாம்பாறு f)கெளசிகா நதி  16.திருநெல்வேலி மாவட்டம்  a)தாமிரபரணி, b)கடனா நதி, c)சிற்றாறு, d)இராமநதி, e)மணிமுத்தாறு, f)பச்சை ஆறு, g)கறுப்பா நதி, h)குண்டாறு, i)நம்பியாறு, k)கொடுமுடிஆறு,   l)அனுமாநதி, m)கருமேனியாறு, n)கரமணை ஆறு ~~~~~|~~~~~~~~ தாமிரபரணி துணை ஆறுகள் (சேர்வலாறு. மணிமுத்தாறு. கடனா ஆறு. பச்சையாறு. சிற்றாறு. பேயனாறு. நாகமலையாறு, காட்டாறு.சோம்பனாறு,கௌதலையாறு. உள்ளாறு.பாம்பனாறு. காரையாறு.நம்பியாறு கோதையாறு. கோம்பையாறு. குண்டாறு = இவை அனைத்தும் தாமிரபரணியின் ப்ரியமான துணையாறுகள் )  17.மதுரை மாவட்டம்  a)பெரியாறு, b)வைகையாறு, d)குண்டாறு, e)கிருதமல் ஆறு,   f)சுள்ளி ஆறு, g)வைரவனாறு, h)தேனியாறு, i)வாட்டாறு, j)நாகலாறு, k)வராகநதி, l)மஞ்சள் ஆறு, m)மருதாநதி, n)சிறுமலையாறு, o)சுத்தி ஆறு, p)உப்பு ஆறு  18.திண்டுக்கல் மாவட்டம்  a)பரப்பலாறு, b)வரதம்மா நதி, c)மருதா நதி, d)சண்முகாநதி e)நங்கட்சியாறு, f)குடகனாறு, g)குதிரையாறு, h)பாலாறு, i)புராந்தளையாறு,                      j)பொன்னை, k)பாம்பாறு, l)மஞ்சள் ஆறு  19.கன்னியாகுமரி மாவட்டம்  a)கோதையாறு, b)பறளியாறு, c)பழையாறு, d)நெய்யாறு, e)வள்ளியாறு  20.இராமநாதபுரம் மாவட்டம்  a)குண்டாறு, b)கிருதமல் ஆறு, C)வைகை, d)பாம்பாறு,          e)கோட்டகரையாறு, F)உத்திரகோசம் மங்கை ஆறு  21.தருமபுரி மாவட்டம்  a)காவிரி, b)தொப்பையாறு, c)தென்பெண்ணை    22.சேலம் மாவட்டம்  a)காவிரி, b)வசிட்டாநதி, c)வெள்ளாறு  23.விருதுநகர் மாவட்டம்  a)கௌசிகாறு, b)வைப்பாறு, c)குண்டாறு, d)அர்ஜுனா நதி, e)கிருதமல் ஆறு ~~மக்களால் காலகாலமாக பயன்பாட்டிவ் ப்ரியமான இருத்த மேற்கண்ட ஆறுகளில் தற்போது எவையெவை உள்ளன/இல்லை. என்பதை அந்தந்த மாவட்டத்தில் வசிப்போர்  அறிந்து கொள்ளவும்.. #ப்யாரீப்ரியன்.மீள் .. தொகுப்பு...

Sunday 23 August 2020

Love Dictionary

 அகராதி...

#பால்யகாதலில் - பக்குவமின்மை

#பள்ளிக்காதலில் - பருவமின்மை..

#பருவக்காதலில் - இனக்கவர்ச்சி..

#பார்த்தகாதல் - சுவாரசியம் குறைந்தும்..

#பார்க்காமலேகாதல் - பார்த்து உண்மையை புரியவைக்கும் வரையிலும்..

#சொல்லியகாதல் -நிறைவேறியும்

#சொல்லாதகாதல் -நிறைவேறாமலும்..

#ஊர்சுற்றும்காதலில் - ஊரார் தூற்றலிலும்

#உண்மைக்காதல் -அழியாமலும்

#உரிமையானகாதல் - உறவுகளை மேம்படவைப்பதிலும்.

#தைரியகாதல் - நிச்சயதிருமணத்திலும்

#தில்லாலங்கடிகாதல் - ஒருமுறை அடையும் வரையிலும்.

#திருட்டுகாதல் - அடுத்தவர் அறியும் வரையிலும்..

#இருட்டுகாதல் - காமம் அடங்கும் வரையிலும்..

#கடுதாசிகாதல் - பதில் கடிதம் வராத வரையிலும்..

#குறுஞ்செய்திக்காதல் - மற்றவர் பார்க்காத வரையிலும்..

#செல்போன்காதல் - அவரைவிட உயர்ந்தவர் கிடைக்கும் வரையிலும்..

#வலைதளகாதல் - புதிய அறிமுகம் கிடைக்கும் வரையிலும்..

#விலைமாதர் காதல் - பணம்தீரும் வரையிலும்..

#வேலைக்காரிக்காதல் - மனைவிக்கு தெரியாமலும்

#வேலைசெய்யுமிடக்காதல் - வேலையின் ஓய்வு நேரங்களிலும்..

#சினிமாகாதல் - கனவுலகின் ஆசையாலும்

#கவிதைகாதல் - கவிஞராகும் வரையிலும்..

#காவியக்காதல் - காதலில் வெற்றி பெறும் வரையிலும்..

#கல்யாணகாதல் - திருமணம் முடியும் வரையிலும்..

#கணவன்மனைவிகாதல் -கல்லறைக்கு போகும் வரையிலும்..

#ஒருதலைக்காதல் - மீண்டும் துணைக்கான வாய்ப்பு கிடைக்கும் வரையிலும்..

#காலம்கடந்தகாதல் - பயன்தந்து இனிக்கும் வரையிலும்..

#கடைசிகாலக்காதல் - உறவின் உன்னதத்தை எண்ணும் போதும்.

#கற்பனைக்காதல் - உண்மையாக மாறும் வரையிலும்.. 

#கண்மூடிக்காதல் - தகுதியை உணரும் வரையிலும்..

கண்டு...கண்ட பின் #அன்பினால் உண்மையாக உணர்வு பூர்வமாக உணருவதே..

#காதல்

அன்புடன்...

#ப்யாரீப்ரியன்...

Wednesday 19 August 2020

போர் நுணுக்கங்களை அறிவோம்..

 போர்நுணுக்கம்-2 .


வரலாற்றில் மன்னர்கள் தங்களுடன் போர்புரிய வரும் எதிரிநாட்டு வீரர்களை அழிக்க எவற்றை எல்லாம் எப்படியெல்லாம் ப்ரியமாக பயன்படுத்தி வந்தனர் என்பதை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இளைய தலைமுறையினரும் அறியவே இப்பதிவு

(இணையத்தொகுப்பு)...


#தூண்டில்/ பெருங்கொக்கு- கொக்கு போன்று இதன் நுனியில் ஒரு கொளுக்கி இருக்கும். இதன் மூலம் அகழியினுள் உள்ள எந்த பொருளையும் இலகுவாக வெளியில் தூக்கி வீசி விடலாம்.


#ஆண்டலையடுப்பு - 


இது ஆந்தையின் தலை போன்ற அமைப்புள்ள பாத்திரமாகும்.


→ காய்பொன் உலை- உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு, செப்புக் குழம்பு


→ பாகடு குழிசி- சூடான தேன் கொண்ட பாத்திரம்.


→ பரிவுறு வெந்நெய்- சூடான எண்ணெய் கொண்ட பாத்திரம்.


→ காடி/ மிடா - கீழே உள்ளதைப் போன்ற ஓர் பெரிய அடுப்பில்தான் மேலேயுள்ள மூன்றும் காச்சப்படும்.


#விதப்பு- இதிலிருந்துதான் எதிரி மீது எண்ணெய் போன்றவை ஊறப்படும்.


#கவண்/ இடங்கணிப்பொறி (இடம் + கணி + பொறி ) :


#கல்லிடுகூடை- எதிரிகள் மீது வீசுவதற்கு கோட்டை மதில் மேல் வைக்கப்பட்டிருக்கும் எறிகற்கள் கொண்ட கூடை.


#தொடக்கு/ நூக்கியெறி பொறி - இதன் நுனியில் ஒரு கயிறு/ சங்கிலி இருக்கும்.இதன் மூலம் எதிரி வீரனின் கழுத்தினுட் செருகி அவனைப் பிடித்து கழுத்தில் பிடித்து தூக்கி கொன்று வீசி விடலாம்.


#கவை/ நெருக்குமர நிலை- மதில் மீது ஏறுவோரை மறித்துத் தள்ளும் ஆயுதமிது. மிக நீண்ட கைப்பிடி கொண்டது.


#புதை- அம்புக்கட்டு


#ஏவறை/ சூட்டிஞ்சி - சிறுசிறு துளைப் பொந்துகள் போலிருக்கும் இவற்றிலிருந்து எதிரி நோக்கி அம்பு எய்யப்படும்.


#ஆரல்/ குருவித்தலை - மதிற்சுவரின் மேல் மறைப்பு


#ஞாயில்/ நாயில்/ ஞாஞ்சில்/ ஏப்புழை - கோட்டை சுவரில் உள்ள இரு குருவித்தலைகளுக்கு இடையிலான இடம். இங்கிருந்து எதிரி மீது தாக்குதல் தொடுப்பார்கள்.


#கைப்பெயர்ஊசி- எந்தப்பக்கம் குத்தினாலும் சங்குதான். கோட்டை மதிலின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அல்லது மதிலில் இருந்து எறியப்படும்…..ஒருவேளை எதிரிகள் மதில் மேல் எறி மதிலின் உச்சியைப்பிடிப்பவர் இதன் மேல் கை வைத்தால் இது அவர்களின் கையினைக் கிழித்துவிடும்.


#சென்றெறிசிரல்/ கையம்பு - இது கையால் எறியும் ஆயுதம்தான்.


#பணை- பருமையான மூங்கில்


#எழுவுஞ்சீப்பு - சிறைக் கதவு போன்று இரும்பால் செய்யப்பட்ட ஓர் வாயிற்கதவு. அவ்வளவு இலகுவில் இடித்து உடைக்க இயலாதது. ஐயவித்துலாம் கீழே இறக்கப்பட்டால் இது மேலே எழும்பும் ; ஐயவித்துலாம் மேலே தூக்கபட்டால் இது கீழே இறங்கும்.(கோட்டையின் பாதுகாப்பிற்காகத்தான்)


#கவர்தடி- இரு பக்கமும் கூரான எறிபடை… எறியவும் செய்யலாம்; குத்தவும் செய்யலாம்.


#கழு/ கழுக்கோல்/ யானைத்தடை -கோட்டைக்கு முன்னால் எதிரிப் படைகளின் மதிற்போர்க்கருவிகள், போரானைகள் உள்நுழையாமல் இருக்க வைக்கப்பட்டிருக்கும்.


#எந்திரவில் / வளைவிற்பொறி/ வேலுமிழ்ப் பொறி/ அம்புமிழ்ப் பொறி:

இதில் வைத்து எதிரி நோக்கி எய்யப்படும் எறிபடையின் பெயர் நாளிகம்


#ஐயவித்துலாம் /ஐயவி- கோட்டை வாயிலையும் அகழி தொடக்கத்தையும் இணைக்கும் ஓர் தூக்கு பாலம்.


#வல்லயம் - கோட்டையின் மதிலில் இருந்துகொண்டு கீழே உள்ள வீரரை குத்த பயன்படும் ஈட்டி. முனையில் கூரிய இரும்புள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஈட்டி ஆய்தம்.


#தாமணி-பொருட்களைக்கட்டி வைக்க உதவும் கயிறு.


#நாராசம் -இது ஒரு இரும்பால் ஆன அம்பு.& தீயம்பு..


#சலாகை - இது ஒரு இரும்பால் ஆன சிறு அம்பு.


#மிளை/ காவல்காடு - கோட்டை அகழிக்கு முன்னுள்ள செயற்கைக் காடு.


இங்கு தோட்டி எனப்படும் இரும்பு முட்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். காவல்காட்டினுள் வேலியாக நொச்சிமரங்களும் முள்வேலிகளும் அமைந்திருந்தன. இதனை வாழ்முள்வேலி,இடுமுள்வேலி எனப் பகுத்து காட்டரணைப் பலப்படுத்தியுள்ளனர்.


#வாழ்முள்வேலி - என்பது முள் செடிகளையும் மரங்களையும் வளர்த்து அவற்றால் ஆக்கிய வேலியைக் குறிப்பது. 


#இடுமுள்வேலி - முள்ளை வெட்டிக்கொண்டு வந்து பிற இடத்தில் இடப்படும் வேலி எனப்படும்.

காட்டரணை முற்றுகையிடும் பகைவர்களின் உயிரைக் கவரும் வகையில் பல நிறம் கொண்ட தவளை, பூராண், நண்டு, கம்பளிப்புழு, பல்லி, பூதிப்புழு, கவுதாரி ஆகியவற்றுடன் கீழாநெல்லியின் பட்டை, இலை, மலர், கனி, வேர், தண்ணீர்முட்டான் கிழங்கு, சேங்கொட்டை மரம், எருமையாட்டம் கொடிகளின் சாற்றுடன் சோர்த்துப் புகையை உருவாக்கினால் அப்புகை பகைவர்களின் திறனை அழித்து அவர்களின் கண்களைக் குரடாக்குவதுடன் பகைவர்களைக் கொல்லும் திறன் உள்ளது.—


அகழி/ கிடங்கு /உடுவை/ அகப்பா/ கயம்/ காடி/ உடு/ ஓடை/ இனைடயம் /உவளகம்/ நீரரண் / அகப்பா/ கிடங்கில்- (moat) கோட்டையைச் சுற்றியுள்ள நீரரண்.


எதிரிகள் அகழியில் உள்ள நீரை அருந்தும் பொழுது அவர்களை அழிக்கும் வகையில் அவர்கள் அறியாவண்ணம் சேங்கொட்டை, அரங்கன்,நாயுருவி, மருதமரம் ஆகியவற்றின் மலர்களுடன் ஏலமரம், தானிமரம், குங்கிலியம், ஆலாலம் ஆகியவற்றின் சாறும் செம்மறியாட்டின் குருதியுடன் மக்களின் குருதியையும் சேர்த்து நன்கு அரைத்து அதனைப் பிண்ணாக்குடன் நீரில் கலந்து விட்டால் இந்நிரை அருந்துபவனும் தொடுபவனும் உடனே இறந்துவிடுவான். 


#செய்கொள்ளி - கொல்லனால் காய்ச்சப்பட்ட செந்தீயான இரும்பு


#சுறட்டுக்கோல்/ தொரட்டி- இழுத்து விழுத்தும் கோல்.


#சுண்டுவில்


#கூர்ந்தரி நுண்ணூல்- தொட்ட கையை அறுக்கும் நுண்ணூல்= மாஞ்சா நூல்


#கற்பொறி - அவிழ்த்துவிட்டால் கீழே வந்து வீழ்ந்து எதிரியைத் தாக்கும்.. மீண்டும் இதனை சுழற்றி எடுத்துப் பயன்படுத்தலாம்.


#அடிப்பனை- கோட்டை மதிலில் இருந்து எதிரிகள் மீது இதனை எறிவார்கள்.


#விடுசகடம்- உருட்டி விடப் படும் தீச்சக்கரம


#முட்செடி- இக்கொடி கோட்டை மதில் மீது படரவிடப்பட்டிருக்கும்.


#நச்சுக்கொடி- இக்கொடி கோட்டை மதில் மீது படரவிடப்பட்டிருக்கும்.


#பதணம் /பரிகை /கற்பு / மதிலுண் மேடை/ அகப்பா /மஞ்சிவர் - கோட்டை மதிலில் நடக்கும்படி ஏற்படுத்தப்பட்ட மேடு.. இங்கு நிண்டபடி எதிரி மீது போர்புரிவார்கள்


#உக்கடம் - கோட்டை உயரத்திலிருந்து எதிரி இடராளிகளை காணும்படி உக்கடம் (watch tower) எனும் கட்டுமானம்.


#நிலவரண்


காட்டரணையும் நீரரணையும் கடந்து வெற்றி பெற்ற மன்னர்கள் அதனை அடுத்து தண்டை நிலப்பகுதியில் அமைந்துள்;ள நிலவரணை முற்றுகையிடுகின்றான். “நிலவரண் இருநிலைகளில் அமைந்திருக்கும். பகைவர்கள் புறமதிலைப் பற்றாமை பொருட்டு அதன் புறத்தேயுள்;ள வெள்ளிடை நிலமும் பகைவர் முற்றுகை நீடித்திருக்கும் போது அகத்தாருக்கு வேண்டும் உணவுப்பொருள்களைப் பயிர் செய்யும் வகையில் மதிலின் உட்புறமாக விடப்படும் தண்டை நிலம் நிலவரணாகும்


அகழிக்கும் மதிலுக்கும் இடைப்பட்ட இடமான புறநகரினை நிலவரண் என்பர். இங்கு காவல் வீரர்கள் தம் பாசறையை அமைத்துக் காவல் காட்டினையும் அகழியையும் அழித்துக்கொண்டு வரும் பகைவர்களின் படைகளை எதிர்த்துத் தடுத்து நிறுத்துவர். கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் தத்தம் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றும் கழிவுநீரும், மழைக்காலத்தில் கோட்டையில் இருந்து வெளியேறும் நீரும் அகழியைச் சென்று அடைவதற்கு முன்பாக இந்நிலவரணைக் கடந்து செல்கிறது. கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் இந்நீரை பயிர்செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்வர். இதனால் பகைவர்களின் நீண்ட நாள் முற்றுகையைச் சமாளிக்க இயலும். இத்தகைய சிறப்பிற்குரிய இவ்வரணைப் பாதுகாக்காவிடில் மக்கள் முற்றுகைக்காலங்களில் துயர்பட நேரிடும்.


#முடக்கறை- வாயிலுக்கு மேலுள்ள அம்பு வரும் துளைகள் .


#யாநகம் - ஒரு கயிற்றால் மதிலின் உச்சியில் இருந்து கீழ்நோக்கி இறக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கும். எதிரி வீரர்கள் வந்தால் அவர்கள் மீதிதை அவிழ்த்து விடுவார்கள்.


#சாலம்- தொடக்ககாலத்தில் கோட்டைகளை வெறுங்கல்லால் அன்றி, மரமுஞ் சேர்ந்தே கட்டினர்.


#அட்டாணி/ அட்டாலகம் / இதணம் / மேவறை / அலங்கம் - கோட்டை மதிலுக்கு மேலே ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் காவலரண். உள்ளே இருப்பவருக்கு வெளியே உள்ளவர்கள் தெரியக்கூடியவகையிலும் சிறு துளைகள் கொண்டு இருக்கும் போர்க் காலங்களில் இதன்மூலம் ஈட்டி, வில்லம்பு கொண்டு வெளியே உள்ளவர்களை தாக்க வசதியாக இருக்கும். வெளியில் இருப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்களைக் காண இயலாது என்ன செய்கிறார்கள் என்றும் அறிய இயலாது.


#அட்டாலை / இதண்/ பணவை - அட்டாலகத்தில் காவலுக்கு இருக்கும் வீரனை குறிக்கும் சொல்.


#வாயில் / கௌனி/ ஆத்தானம்/ அரிகூடம்/ கோட்டி- இது கோட்டைக்கான போக்குவரத்து வாசல்.


#ஒலிமுகவாயில்/ ஆசாரவாயில்/ தலைவாயில் - கோட்டையின் முக்கிய வாயில்.


நகரவாயிற் கதவை விட்டு புகும் வழி- புதவு/ புதவம்


நகரவாயிற்றிணையின் பெயர்- அளிந்தம்


நகரவாயிற் படிச்சுறுள்- அத்திகை


கவாடம் - கதவு

சிறுவாயில், பதவு, பூழை


#சுருங்கை/ கற்புழை/ மூடுவழி- கோட்டையிலிருந்து வெளியேறும் இரகசிய வழி.


#சிகரி / துருக்கம்/ அருப்பம்- மலைமேலுள்ள கோட்டை.


#கணையமரம் /துஞ்சுமரம் / தாழக்கோல் - மதிற்கதவுக்கு வலிமையாக உள்வாயிற்படியில் குறுக்கேயிடும் மரம்.


#புழை - புழை என்பது ஒரு கோட்டைக்கு பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு வழியாகும். இது முக்கிய நுழைவுவாயிலில் இருந்து வேறு ஒரு இடத்தில் இருக்கும்.


#பரிசை/ தட்டி - இடைவெளி இல்லாமல் வைரம் ஏறிய மரங்களால் அமைக்கப்பட்டு கோட்டை மதிலில் வைக்கப்பட்டிருக்கும். பகைவர் எய்யும் அம்புகளை இது தாங்கும்.


#நூற்றுவரைக்கொல்லி - ஒரே நேரத்தில் பல பேரை கைலாயம் காண வைக்கலாம்.


#நீர்வாளி- ஏற்பட்ட நெருப்பினை அணைக்க உதவும் நீர் கொண்ட வாளி.


#அரணி/ கடகம்/ பாவை/ பீலி/ புரிசை/ புறம்/ வண்சிறை/ வரணம்/ வரைபடி/ வாடம்/ வேணகை/ தூரியம்/ முத்தகம்/ பெருங்காரம்/ நொச்சி/ பாவை / ஆரம்/ வேலி / அரணம்/ வேதி/ சாலம்/ அல்/ அரணாம்பரம்/ ஓதை - மதில்


கடிமதில் - காவல் மிகுந்திருந்த மதில்

இறைப்புரிசை, நெடுமதில் - மிகவும் உயர்ந்த மதில்

மதிலரண் வகைகள்-


அகன் மதிலரண்

உயர் மதிலரண்

திண் மதிலரண்

அருமதிலரண்.

இவ்வாறு அமைந்த மதிலைப் புறமதில்,இடைமதில், அகமதில் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியிருந்தனர்.


இடைமதில் பகைவர்களின் முற்றுகை நீடித்து இருப்பினும் உள்ளே இருப்போர் உணவிற்கு எவ்விதக் குறையும் இல்லாமல் தமக்கு வேண்டிய உணவினை விளைவித்துக் கொண்டும் வாழும் வகையில் பரந்த நிலப்பரப்பினை உடையது.புறமதில் வளைந்த இடங்களை உடையதாகவும்

அகமதில் என்பதுதன் கடைசி மதிலாகும்

மதிலுக்குள் உள்ள நிலம்- காப்பு

கோட்டைக்குள் நகர்- அகநகர்

திண்ணம்- குறடு, அளிந்தம்

அடிமணை- நிலைக்களம்

மண்டபம்- களம் , தளம்

அரசர் வீதி- பூரியம்

அரசிருக்கை- அரியாசனம், அத்தாணி, வேந்தவை

சித்திரக்கூடம் - தெற்றியம்பலம்

அம்பலம்- மன்றம், பொது அவை, பொதி

அரசரில்லம்- சாலை, மாளிகை, குலம், அரண்மனை, பவனம், கோவில்.

வாரி - சுற்று மதில்

ஓதை/ ஆள்வாரி நிலம்- மதிலைக் காப்பாற்றும் படையினருக்கு மதிலையொட்டினாற் போல் உள்ளசாலை  

உவளகம்- கோட்டையின் உட்பக்கம்.

கோசம் - மதிலுறுப்பு

பெருகாரம்- இது கோட்டையினுள்ளே சுற்றிவரும் பெரியபாதை.

இஞ்சி - பெரும்பாலும் செம்பு புனைந்தியற்றியதாகவும் சிறுபான்மை அரைத்த சாந்திட்டமைத்ததாகவும் பகைவரால் எளிதில் தாக்க முடியாதவாறு திண்ணிதாகக் கட்டப்பட்ட மதில் ஏனை வகை மதில்களிலும் மிக இறுகியிருத்தல் பற்றி இஞ்சி எனப்பட்டது.


#பதப்பாடு - கோட்டையரணுக்கு பாதுக்காப்பாக வெளியே கட்டப்பட்டிருக்கும் மற்றோர் மதில்.


#கொத்தளம்/ தோணி/ குடிஞை - கொத்தளம் என்பது, கோட்டை மதில்களில் இருந்து வெளித் துருந்திக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு ஆகும்.


#கருவிரலூகம்/ குரங்கு- கோடை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் . பெரும்பாலும் தாட்டான் வகை குரங்குளே அங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும். இவை மேலே வரும் எதிரியினைக் கடித்துக் குதறும்.


#கோண்மா - புலி , சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள் கோட்டை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மதிலை தொடுவோரை இவை கவனித்துக் கொள்ளும்.


#முதலை, காராம், விடங்கர்- இவை எல்லாம் அகழிக்குள் இருந்தன.


#கழுகு&கூகை -போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்ல  பயன்படுத்தப்பட்டன


#குடப்பாம்பு/ கத நாகம்- எதிரி வீரர்கள் மீது எறிய குடத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் பாம்புகள்.


#பாவை- உண்மையான வீரர்கள் போன்று செய்யப்பட்ட பொம்மை பொய் வீரர்


#கரும்பொன்னியல் பன்றி: - இரும்பு நிறம் கொண்ட பன்றி- காட்டுப்பன்றி.


இவற்றினை கோட்டைக் கொத்தளங்களில் கட்டி வைத்திருப்பதால் இவை எழுப்பும் ஒலியினைக் கேட்டு எதிரியின் யானைப் படை திணறி ஓடும்.. மேலும் இவற்றிற்கு மேலே எண்ணெய் பூசி நெருப்பினை வைத்து எதிரியினை நோக்கி ஓட விடுவதால் அவை எதிரியினைக் குழப்புவதோடு மட்டுமல்லாமல் அவனின் யானைப்படையினை மிரள வைக்கும். இவ்வாறு பல போர்கள் வரலாற்றில் நடைபெற்றுள்ளன.


#தோற்றமுறு_பேய்களிறு - அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட யானை -

இவ்யானைகளானது மதிலின் பின் புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவை மதிலை கடந்து வருபவர்களை சிதறடிக்கும்.


#துற்றுபெரும் பாம்பு - மலைப்பாம்பு


இது எதிரிகளை அச்சமுறுத்தவும் சில வேளைகளில் அவர்களை விழுங்கவும் செய்திருக்கும்.


#ப்யாரீப்ரியன்...இணையத்தொகுப்பு..

Saturday 15 August 2020

பழந்தமிழரின் போர் ஆயுதங்கள் சில..

 பழந்தமிழரின் போராயுதங்களில் சில:


வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்தகைய போராயுதங்களைப் ப்ரியமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாகவே அமைந்துள்ளது .


தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும்.


கைக்கொள்படை/ கைப்படை: - (hand hold weapons)

கைவிடுபடை/ எறிபடை

கைவிடாப்படை

கைக்கொள்ளாப்படை: - ( siege & defense tools)


தோய்த்தல் - ஆயுதங்களைக் காய்ச்சி நனைத்தல்

துவைச்சல் (படைக்கருவி) - tempering (weapons)

பணைத்தல் - AIM MISS

இலக்கு, மச்சை - target

ஆயுதப்பயிற்சி செய்யுமிடம் - சரம்புச்சாலை, பயிற்சிப்பாசறை

சரம்பு - ஆயுதப்பயிற்சி

பணிக்கன் - படைக்கலம் பயிற்றுவிப்போன்.

சலகுபிடித்தல் - படைப் பயிற்சி எடுத்தல் (to practice drill)

ஆயுதங்கள் வைத்திருக்குமிடம் - ஆயுதசாலை, படைவீடு, ஆயுதக்களஞ்சியம், தில்லெரி.

எஃகம் / துப்பு / படைக்கலம் / ஆய்தம்/ ஏதி/ தானை/ கடுமுள்/ துழுமுள் / படை/ கூர்த்திகை/ அரி -ஆயுதப்பொது

ஆய்தம் என்பது தமிழே. இச்சொல்லே பிற்காலத்தில் 'ஆயுதம்' என்று சமற்கிருததில் திரிந்தது 


எஃகம் - எஃகில் இருந்து செய்யப்பட்டதே எஃகம் .

ஆய்தங்களின் கூர்மையின் பெயர் - வல், வள், வசி , வை, அள், பூ, ஆர் (sharpness, pointedness)

ஆயுதத்தின் நுனி - முனை (tip of a weapon)

அலகு - ஆயுதத்தின் கொல்லும் கூர்மை கொண்ட பகுதி (blade of a weapon or instrument)

ஆயுதத்தின்பல்- கரு

கழி - ஆயுதப்பிடி

அடைப்பம்- போர்க் கருவிகள் வைக்கும் பை/ பேழை.

தடறு- ஆயுதவுறை / படையுறை/ கருவிப்புட்டில்

காரோடன் - ஆயுதவுறை செய்வோன்.

வாளுறை - புட்கரம்/ வாளலகு /கட்காதாரம்/வள் / இடங்கம்

வாண்முட்டி - வாளின் பிடி (handle or hilt of a sword)

கிண்ணி- வாளின் கைப்பிடி உறை (cover of the hilt of the sword)

வாண்முகம் - வாளின் வாய் (edge of the sword)

சொருகுவாள் - உறையினுள் வைக்கப்பட்ட வாள்

ஆணி - வாளின் அலகு (blade of sword)

கத்திப் பிட்டல் - கத்திக் கூடு

தாங்கு - வேல் / ஈட்டியின் பிடி (The staff of the spear)

பிடங்கு - வேல் / ஈட்டியின் பிடியானது இலையுடன் சேருமிடம் (The part of a lance to which steel is fixed.)

தரங்கு - வேல் / ஈட்டியின் நுனி {The point of in spear (end tip)}

இலை - வேல் / ஈட்டியின் அலகு (blade of a spear or lance or javelin)

காம்பு - கோடாரிகளின் அலகு (blade of the battle axe)

தலை - செண்டு அ கரளாக்கட்டை போன்றவற்றின் தலைப்பகுதி (head part of a mace or club)


தமிழ் அகராதிகளில் முத்தலைச்சூலம்/ முக்குடுமி (பெரியபு. உருத்திர. 10) என்னும் வித்தியாசமான சூலத்தைக் குறிக்கும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சூலம் என்றால் நாம் அறிந்தது..

இரண்டு பெயர்களும் தலையினையே குறிக்கின்றன. மேலும் இந்த ஆய்தத்தினை தலையில் மணிமுடி போல தாங்கியபடி ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற ஓர் முத்திரையானது சிந்துசமவெளி ஆய்வில் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றது.

ஆகவே இவை ஏதேனிலும் ஒன்று அதற்கான பெயராக இருக்கலாம் என்பது பதிவரின் கருத்து.


#சூலம் / காளம் / மும்முனை/ நல்வசி/ சூல் - இதில் பல வகையுண்டு.

எரிமுத்தலை - நெருப்பினைக் கொண்ட சூலம்

சத்தி - சிறு சூலம்

"தாமேற் றழுத்திய சத்தி வாங்கி" (பெருங். மகத. 20, 63)

"ஊனக மாமழுச் சூலம் பாடி"(திருவாச. 9:17)


#முக்கவராய்தம் / முக்கவர்தடி / முக்கப்பு / முக்கவர்சூலம்/ முத்தலைக் கழு - இதன் குத்தும் பகுதியானது சூலத்தின் குத்தும் பகுதியைக் காட்டிலும் நீளமாக இருக்கும். இது வேட்டைக்குப் பயன்படும் ஓர் ஆய்தம். தேவைப்பட்டால் களத்திலும் சுழலும்.


#முத்தலைக்கழு - கழு போன்ற நீண்ட குத்தும் அலகூகளைக் கொண்ட சூலம்.

"பருமுக் கப்பினரே"(தக்கயாகப். 98)

"முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில்மிகும் காராரிந்த மேனி"


"கழு முள் மூவிலை வேல் முத்தலை கழு…சூலப் படை என வழங்கும்" (நிக.தி:7:2)


#சூலவேல்/ மூவிலைச்சூலம் / இலைத்தலைச் சூலம்- மூன்று வேலின் இலை போன்ற முனைகளைத் அலகாகக் கொண்ட சூலம்.


#மூவிலைவேல் / முத்தலைவேல் - வேல் என்பது ஓரிலை போன்றது. மூவிலை வேல் என்பது மூன்று இலைகளால் ஆனது. 

முருகனின் கையில் இவ்வாய்தம் உண்டு.


#வேல்/ உடம்பிடி/ ஞாங்கர்/ விட்டேறு : முக்கோண இலைவடிவ கூரிய முனை கொண்ட ஆய்தம். இதனை கையில் வைத்தே சண்டையிடுவர்... கூடியவரை எறிவதில்லை!

வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! வேலின் கீழ் நுனி வட்டமாக முடியும்!

வடிவேல் - மிகவும் கூர்மையான வேல்


#சிறியிலை எஃகம் - சிறிய ஒடுங்கிய இலையினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்..


#ஏந்திலை/ முகட்டுவேல் - இலை நீளமாக இருப்பது போன்ற வடிவினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!

ஏ → ஏந்து = உயரம்

இலை - இலை

ஏந்திலை = நெடிய இலை


#தூரியம் - தூரிகை போன்ற ஒரு வகையான வேல் . இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!


#முத்தகம் - முத்தக இலை போன்ற அமைப்பினை உடைய வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும். கூடியவரை எறிவதில்லை!


#அயில்/ அயில்வேல் - கோரைப்புல் போன்று கொஞ்சமாக அகண்டு மிகவும் நீண்டிருக்கும் ஓரு வகையான வேல்.


#சங்கு / சங்கம்- இலையானது ஒரு பக்கம் வளைந்து இருக்குமான ஆய்தம். கூடியவரை எறிவதில்லை!

சுல்- சல்- சழி - சருக்கு- சக்கு- சங்கு- சங்கம


#பூந்தலைக்குந்தம் -  இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை.


#சவளம் :- சவண்ட வாள் போன்ற தோற்றம் உடைய ஆய்தம். கூடியவரை எறிவதில்லை! இதில் இரு வகை உண்டு:

சுவள்→ சவள் → சவளம்

சிறுசவளம் - சிறிய சவளம்

பெருஞ்சவளம்/பீலி - நன்கு சவண்ட பெரிய சவளம்.


#உழவாரம் - அலகானது கொஞ்சம் பார்பதற்கு நேராக்கி நிறுத்திய மண்வெட்டி போல இருக்கும். முன்பக்கம் மட்டுமே சப்பையாக்கப்பட்டு கூராக இருக்கும்!


#சல்லியம்- ஆணி/ முள் போன்ற அலகினை உடைய எறிபடை !

சுல் = குத்தற்கருத்து வேர்.

சுல் → சல் = கூரிய முனையுள்ளது, குத்தும் கருவி.

சல் + இயம் = சல்லியம் → ஆணி/ முள் போன்ற கூரிய முனை

கீழ்க்கண்ட சல்லியமானது தென்தமிழ்நாட்டு அரசர் ஒருவரால் பிரித்தானிய பேரரசர் ஒருவருக்கு ப்ரியமான அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதாகும்


#அரணம் - அரணத்தின் வடிவினை ஒத்த இலையினைக் கொண்ட வேல் .

இதே பொருள் கொண்ட செருப்பு மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றினதும் வடிவத்தினைக் காண்க. அனைத்தும் ஒரே வடிவமே!


#வல்லயம் / குத்துவல்லயம் - இது அதிநீளமான ஓர் ஆய்தமாகும்; முனையில் கூரிய கூர்மையுள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஆய்தம். எட்டத்தில் நின்றபடியே எதிரியை குத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. இதனைக் கூடுதலாக யானைமேல் உள்ளவர்கள் பயன்படுத்துவார்கள்!


#கழுக்கடை -குச்சியில் நீளமான கூர்மையான முனையினைக் கொண்ட ஈட்டி.


#நேரிசம்- நீண்ட முள்போன்ற மெல்லிய தலையினைக் கொண்ட ஈட்டி. இது எறிபடை வகையே.

நேர்- நேரான

இல்>இளி>இசி - முள் / குத்துவது

அம் -விகுதி


#திருகுதடி- திருகுவது போல இருக்கும் ஈட்டி அலகு. இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. இது எறிபடை வகையே.


#தோமரம்/ கைவேல்/ கப்பம்/ கப்பணம்/ கற்பணம் - சிறிய படை.. இது பார்ப்பதற்கு சிறிய வேல் போன்று இருக்கும்.. இதே போன்ற சிலதினை முதுகில் ஓர் தூணி போன்று ஒன்றினை அமைத்து அதனுள் வைத்து செருக்களம் நோக்கி எடுத்துச் செல்வர். தேவைப்படும் போது எதிரி நோக்கி விட்டெறிவர் இல்லையேல் கையில் வைத்து சண்டையிடுவர்..

இப்படை வீரர்களை அக்காலத்தில் தோமரவலத்தார் என்றழைத்தனர்.


#கவர்தடி- இருபக்கமும் கூரான எறியாய்தம்.


#பொத்திரம் -

பொள்- துளையிடுவது போன்ற

திரம்- தகரைச்செடியின் கொத்துப் பூப்போல குண்டாக இருக்கும் கூர்மையான அலகு.


#இட்டி / ஈட்டி/ எறியீட்டி/ வண்டம்/ தரங்கம்/ குந்தம்- எறிபடை …

ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும் ; ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்.

இல் > இள் > ஈட்டு > ஈட்டி

துளங்கு → தளங்கு → தரங்கு → தரங்கம்

குல் > குன் > குந்து > குந்தம்

வண் - மிகுதி

வண்டம் - மிகுதியாக இருக்கும் ஆய்தம்.. (வேலினை விட ஈட்டி / குந்தம் தானே போர்க்களத்தில் அதிகமாக இருக்கும்!)


#இரட்டைக்கருவீட்டி- நீண்ட கைபிடி காணப்படும்.


#பட்டிசம் - இது சிங்களத்தில் பட்டிச்தான என்றுள்ளது


#சாக்கத்தி


#கணுவாளி- முள்கொண்ட முட்டி


#வயிரமுட்டி - இடிப்பதற்கான முளைகளை உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆயுதம்.


#இடிக்கட்டை - மாட்டுக்கொம்பால் செய்த கையில் வைத்து சண்டையிடும் ஆய்தம்.


#குத்துக்கட்டை - குத்துவதற்கான கூர்களையும் இடிப்பதற்கான முளைகளையும் உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆயுதம்.


#வில்லம்பு -

வில் என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள்- சிலை/ சாபம்/ குணி/ கேகயம்/ வேணு/ சிந்துவாரம்/ முனி/ தவர்/ தடி/ தண்டாரம்

வில்வட்டம் - archery

வில்லை தயாரிப்பவர்- வில்செய்வோன்

வில்லில் நாண் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வில் குலைவில் எனப்படும்.

வில்லின் நாணோசை - இடங்காரம்

குலை - வில்லின் குதை (notch in a bow to keep the string in check.)


 நாண் என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள் - பூரி , தொடை, ஆவம், பூட்டு, சிஞ்சினி, நரம்பு, நாரி, வடம், குணம், கப்பம்.


#அம்பு: (இதில் பல வகையுண்டு)

அம்புகளை தயாரிப்பபவர்- அம்பன்

→ அம்பு என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள் - கதிரம், கலி, சாயகம், பீலு, சாரகம், பூதை, சிரி, சிருகம், வண்டு, சாசம், சிலீமுகம், தொடை, தோணியம், அங்கூடம், அத்திரி, வணகம், விக்கம், ஈ,விடூசி, வேந்திரம், ஐமை, சாயகம், பகழி, சரம், வாளி, கோ, அரி, ஏ, காண்டம், அப்பு, வாசம், வாணி


இரும்பினால் செய்யப்பட்ட அம்பு - நாராசம், சலாகை

அம்பின் வகைகள்

கோரை

பாரை

ப்ரியம்

கங்கபத்திரம்

தாமரைத் தலை

வச்சிரப் பகழி

முச்சிரப் பகழி

அஞ்சலி

குஞ்சரக்கன்னம்

எரிமுகப் பகழி

உரும் இனப் பகழி

நெருக்கி மற்று அனந்த கோடி

முருக்கின் உற்று அனந்த கோடி

பல்லம்

பிறைமுகவாளி

சூகம் ,சூபம்

விசிகம்

கத்திவாளி அம்பு

.மொட்டம்பு - உதண்

அம்புக்கட்டு - புதை, கட்டு, கற்றை (sheaf of arrows)

அம்பின் நுனி - குதை, பகழி (pointed end of an arrow)

அம்புத் திரள் கட்டுங் கயிற்றின் பெயர்- பற்றாக்கை

அம்பு விடும் போது கையில் போடும் உறை- காழகம்

அம்புக்கொண்டை - உடு, புழுகு, குப்பி (head part of an arrow)

அம்பின் ஈர்க்கு- உடுவம், கோல் (shaft of an arrow)

அம்புத்தலை - புங்கம் (butt end of an arrow)

கைப்புடை- அம்பு பிடித்து இழுத்து விடும் இடம் (சிறகிற்கு பின்னால் இருக்கும் அந்தச் சிறிய இடம்)

அம்பின் சிறகு - பக்கம் (feather of an arrow)

உடுவும் உடுவமும் இணையும் இடம் - குழைச்சு (joining area of head and shaft of an arrow)


படிமப்புரவு : சொந்தமாக உருவாக்கியது'


→ அம்பு வைக்குமிடம் - (quiver) அம்பறாத்தூணி/ அம்புறைத்தூணி/ இடுதி/ புட்டில்/ கோக்குஞ்சம்/ கலாமிடம்/ அம்புக்கூடு/ தூணீரம்/ ஆவநாழி/ ஆவம் /அம்புறை/ புழுகு /கலாபம்/ வட்டில்/ அம்புயம்


#வரிவில்-வரிபோன்றமைந்த வில்

வலுவான வளைந்த மரக்கிளையின் கொம்பால் ஆகிய வில்- கொடுமரம்


#கார்முக வில் / அமைவில் - மூங்கிலால் செய்யப்பட்ட கார்காலமேகத்தில் தோன்றும் வானவில் போன்ற வில்.


#வாங்குவில் - நடுவில் நன்கு வளைந்திருக்கும் வில்.

இத்தகைய போராயுதங்களைப் ப்ரியமாக பயன்படுத்தி சிறப்பாக வீரத்துடன் வாழ்ந்தது நமக்கு பெருமையே... 

~~#ப்யாரீப்ரியன்...

இணையத்தொகுப்பு..

Saturday 8 August 2020

சங்கேதமொழி

 #நுஷுமொழி..

சீனப்பெண்களின் சங்கேத மொழி'.-

மனித நாகரிக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்களை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெண்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். இதை புரிந்து கொண்ட பெண்கள் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண்கள் போல் நடிக்கத் தொடங்கினார்கள்.


சீனப் பெண்கள் ஒருபடி மேலே போய் தங்களுக்கு எழுதப் படிக்கக் கூட தெரியாது என்பது போல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல. பல நூற்றாண்டுகள் இந்த நடிப்பு தொடர்ந்தது. அப்போது பெண்கள் தங்களுக்கு என்று தனி எழுத்து வடிவம் பயன்படுத்த தொடங்கினார்கள்.

பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள். நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று அர்த்தம்.p.p

தங்கள் பெண்கள் இப்படி எழுத்துரு கொண்ட மொழியை பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்பதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் சொன்னார்கள் பெண்களால் ரகசியத்தை காப்பாற்றமுடியாது என்று.

சீன மொழி எழுத்துக்கள் பெரிதாகவும் கம்பீரமாகவும் இருக்கும். 'நுஷு' எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடு கிறுக்கியது போல் இருக்கும். ஓவியங்களிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம். பார்டர் போல் எழுத்துக்களை பயன்படுத்தி தகவலை சொல்லிவிடுவார்கள்.

பெண்கள் ஆண்களின் கண்ணில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போன பெண்கள் அங்கு தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாக தெரிவித்தார்கள்.

ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும் பேத்திக்கும் கற்று தந்து வழிவழியாக காப்பாற்றி வந்தார்கள். பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களை கூசாமல் பேசிய மொழி இது.

தற்போது நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை என்பது வேதனையான ஒன்று. யாங் ஹுஅன்ய் என்ற 98 வயது பெண் 2004-ம் ஆண்டு இறந்த போது நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழி தெரிந்த கடைசி பெண்.

பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட திகட்ட சொன்ன ஒரு மொழி இன்று உயிர்ப்போடு இல்லை. நூற்றாண்டுகள் கடந்து ரகசியமாக வளர்ந்த மொழியை இப்படி சாக விட்டுவிட முடியுமா..! அதற்காகத்தான் சீன அரசு நுஷு மொழியை பாரம்பரிய மொழியாக அறிவித்து அதற்காக ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.

ஏகப்பட்ட கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் இருக்கும் இன்றைய பெண்கள் கூட இப்படி ஒன்றை உருவாக்கமுடியுமா என்பது சந்தேகமே! 

#ப்யாரீப்ரியன்... மீள்...

Friday 7 August 2020

படை அளவீடுகள்

 

#படைகள்..
மன்னர்கள் காலத்தில் இருந்த படை வகைகள்..
படை அளவுகள்..

தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, ஆகிய நாற்படைகள்.

#பதாதி .
ஒரு யானையும், ஒரு தேரும், மூன்று குதிரையும், ஐந்துகாலாட்களும் கொண்ட சேனைத்தொகுதி பதாதி என குறிப்பிடப்படுகிறது.

பதாதி  மும்மடி (மூன்று மடங்கு) கொண்டது  - சேனா முகம் எனவும்

சேனா முகம் மும்மடி கொண்டது - குமுதம் எனவும்

குமுதம் மும்மடி கொண்டது - கணகம் எனவும்

கணகம் மும்மடி கொண்டது - வாகினி எனவும்

வாகினி மும்மடி கொண்டது பிரளயம் எனவும்

பிரளயம் மும்மடி கொண்டது சங்கம் எனவும்

சங்கம் மும்மடி கொண்டது -சமுத்திரம் எனவும்

சமுத்திரம்  மும்மடி கொண்டது -சங்கமம் எனவும்

சங்கமம் மும்மடி கொண்டது - அநிகம் எனவும்

அநிகம் மும்மடி கொண்டது- அக்குரோணி எனவும் அளவீடு கொண்டதாக  அறியப்படுகிறது.

ஒரு அக்குரோணி என்பது
21,870 தேர்கள்,
21,870 யானைகள்,
65,610 குதிரைகள்,
1,,09,350 காலாட்படை வீரர்கள் கொண்ட படையாகும்.

இதுபோன்று கௌரவர்
அணியில் 11 அக்குரோணி படைகளும்,
பாண்டவர் அணியில் 7 அக்குரோணி படைகளும் இருந்தன்.
இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.

பாரதப்போரில்  பயன்படுத்திய பாண்டவர் அணி மற்றும் கௌரவர்கள் அணி கொடி சின்னங்கள்

#பாண்டவர்கள்

தருமன் - கிரகங்கள் சூழ்ந்த சந்திரன்

அர்ஜுனன் - குரங்கு

பீமன் - சிங்கம்

நகுலன் - தங்கத்திலான முதுகையுடைய சரபம்

சகாதேவன் - அன்னம்

அபிமன்யு - சாரங்கப் பறவை

பீமனின் மகன் கடோத்கஜன் - கழுகு

கண்ணன் - கருடன்

பிரத்யும்னன் - மகரம்

#கௌரவர்கள்

பீஷ்மர் - ஐந்து நட்சத்திரங்களுடன் கூடிய தாலக்கொடி (தாலம் பனை)

துரியோதனன் - சர்ப்பம்

துரோணர் - பீடத்தின் மீது மான் தோல் பொருத்தப்பட்டு அதன்மேல் வில்லும், கமண்டலம்

கிருபாச்சார்யர் எருது காளை)

அஸ்வத்தாமன் சிங்கவால்

கர்ணன்- யானை கட்டும் கயிறு

ஜெயத்ரதன் - கரடி

சல்லியன் - கலப்பை

கடோத்கஜன் - கழுகு இரத்தம் தோய்ந்த நிலை..
________________________________

மூவேந்தர்களுக்கும்  உரிய சின்னங்கள்

1 யானை
2 காளை
3சேவல்
4 குரங்கு
5 சிங்கம்
6 யாளி
7 கருடன்
8 பன்றி
9 சேல் ( மீன்)
10 மகரம்
11 புலி( வேங்கை)
12 அரவம் ( யரவம் பாம்பு)
13 ஒட்டகமும்
14 சங்கு (வலம்புரி)
15 கப்பல்
16 சிப்பி
17 கிளி
18 அன்னம் ( பறவை)
19 தொனி முரசு
20 மயில் ( தங்கமயில்)
21 கொடிய தாலம் மரம் ( தாலம் பனை)

இவை அனைத்தையும்  அறிந்து தங்களுக்குரிய பல நன்மை திண்மைகளை வென்று இந்த முத்திரைகளை விருதாக கொண்ட விருத்த பாடலை
தேடி அறிந்து ப்ரியமாக தகவல் அளித்தவர்..
#ஜான்_மில்டன்_பர்னாந்த் ஐயா அவர்கள்...

"திங்கள்வம் மிசதிகை பரதகுல பாண்டியர் தம்
ஜெயவிடால் #மூவேழ்வகை
செப்பிவாம் விவரமா யானையுங் காளையுஞ்
சேவலோடனு மந்தனனும்
சிங்கமும் யாளியுங் கருடனொடு பன்றியுஞ்
சேல் மகரம் வேங்கை யரவம்
திகழ் கனகமகனுடன் சங்கமுங் கப்பலுஞ்
சிப்பியங் கிளியன்னமும்
மங்கலாகார தொனி முரசு பைம்பொன்னுரூப
மயிலோடு கொடியதாலம்
மரமுமாகிய  விவைகளாகுமிவைகளையிவர்கள்
மகிமையோடுலகறியவே
தங்களுக்குரிய பல நன்மை தின் மைக்கெலாந்
தனி விருதென நடாத்திக்
கார்தலத்தேப பவனி வர தன்மாபழமையாய்ச்
சாற்றுவார் போற்றுவாரே"

உலக அளவில் அனைத்து அரசர்களை விடவும், மூவேந்தர்களான சேர, சோழ,பாண்டிய மன்னர்களில் அதிகப்படியான படைபலத்தை பெற்றவராக 1000 வருடத்திற்கு முன்பே உலகின் பெரும்பகுதிகளை வசமாக்கிய இராஜேந்திர
சோழனது போர் படையில் சற்றேறக்குறைய
12 -14 லட்சம் வீரர்கள்,
லட்சத்திற்கும் மேற்பட்ட
குதிரைகள்,
50,000 க்கும் மேற்பட்ட
யானைகள் இருந்துள்ளதாக
அறியப்படுகிறது.
#ப்யாரீப்ரியன்...
~~இணையத்தொகுப்பு.
https://m.facebook.com/story.php?story_fbid=3244038485679133&id=100002190405617

Sunday 2 August 2020

இதுதான் எங்கள் தமிழ்

இது தான் #தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம் 
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா 
5. திருப்பாவை 
6. திருவெம்பாவை 
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி 
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 
5.முல்லைப்பாட்டு 
6.மதுரைக்காஞ்சி 
7.நெடுநல்வாடை 
8.குறிஞ்சிப் பாட்டு 
9.பட்டினப்பாலை 
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 
2.நாலடியார் 
3.நான்மணிக்கடிகை 
4.இன்னாநாற்பது 
5.இனியவை நாற்பது 
6.கார் நாற்பது 
7.களவழி நாற்பது 
8.ஐந்திணை ஐம்பது 
9.திணைமொழி ஐம்பது 
10.ஐந்திணை எழுபது 
11.திணைமாலை       நூற்றைம்பது 
12.திரிகடுகம் 
13.ஆசாரக்கோவை 
14.பழமொழி 
15.சிறுபஞ்சமூலம் 
16.முதுமொழிக் காஞ்சி 
17.ஏலாதி 
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 
2.மணிமேகலை 
3.சீவக சிந்தாமணி 
4. வளையாபதி 
5. குண்டலகேசி 
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம்  
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 
4.நன்னூல் 
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம் 
2.முக்கூடற்பள்ளு 
3.நந்திக்கலம்பகம் 
4.கலிங்கத்துப்பரணி 
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 
3.பொதுமைப் பண்புகள் 
4.நடுவுநிலைமை 
5.தாய்மைத் தன்மை 
6.கலை பண்பாட்டுத் தன்மை 
7.தனித்து இயங்கும் தன்மை 
8.இலக்கிய இலக்கண வளம் 
9.கலை இலக்கியத் தன்மை 
10.உயர் சிந்தனை 
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

சமய குரவர்கள்
----------------------------

1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்

12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்   
2. இராமதேவர் 
3. கும்பமுனி 
4. இடைக்காடர்
5. தன்வந்திரி  
6. வான்மீகி
7. கமலமுனி 
8. போகநாதர் 
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி, 
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல்.  

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி 
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40. நவநாதர் 
(அ. சத்ய நாதர்,  
ஆ. சதோக நாதர்,  
இ. ஆதி நாதர், 
ஈ. அனாதி நாதர், 
உ. வகுளி நாதர்,  
ஊ. மதங்க நாதர்,  
எ. மச்சேந்திர நாதர், 
ஏ. கஜேந்திர நாதர், 
ஐ. கோரக்க நாதர்)
41. அஷ்ட வசுக்கள்
42. சப்த ரிஷிகள்.

இப்படிச் சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...
பெருமை கொள்வோம் தமிழரென்று.. 
~தொகுப்பு.
#ப்யாரீப்ரியன்...

Tuesday 21 July 2020

பூட்டு தோன்றிய வரலாறு

#பூட்டுகள் ஆயிரம் வந்தாலும் #புவிசார்_குறியீட்டை பெற்ற நம்ம திண்டுக்கல் பூட்டுக்கு ஈடாகுமா??...

பூட்டுச்சாவியின் வளர்ச்சியின் ஆரம்பப்புள்ளி தனக்குரிய பொருள்களை பாதுகாக்க கயிறு அல்லது அதைப்போன்ற ஒரு கட்டுமான பொருள்கொண்டு அவற்றைக் கட்டிவைக்கத தொடங்கியது தான்...

வரலாற்று ஏடுகளில் முதல் பூட்டுச்சாவி, அந்தக்கால மெசபடோமியா நாட்டின் அஸிரியாவில் உபயோகத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் இயந்திர பூட்டுக்களைச்செய்யத் தொடங்கிய கலாச்சாரம் எது என்று தெரியாததால் , எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமாபுரியில் ஒரே சமகாலத்தில் வேறு வேறு விதமான பூட்டுக்கள் செய்யத் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எகிப்தில் பின்லாக் எனும் வகை பூட்டுகளும், சாவிகளும் மரக்கட்டையால் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்களாலும், ருமேனியர்களாலும் இந்தப் பின் லாக் பூட்டுக்கள் கொஞ்சம்கொஞ்சமாக புதிய உருவம் பெறத்தொடங்கின.

கிரேக்கர்களின் பூட்டு பாதுகாப்புக் குறைவாக கருதப்பட்டது. இதனால் ருமேனியர்கள் உலோகங்களினால் பூட்டுக்கள் செய்யத்தொடங்கினார்கள். , அதன் சாவியையும் பாதுகாக்க கைகளிலேயே அணிந்து கொள்ளும் விதமாகச் சாவி வடிவமைக்கப்பட்டு, பொருட்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கினார்கள்.

முதலாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்தபின் பூட்டின் வளர்ச்சி தடைபட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பூட்டுக்களின் புதிய வளர்ச்சி ஆரம்பமானது.
ராபர்ட் பரோனின் 1778 ம் வருடம் கண்டுபிடித்த டபுள் ஆக்டிங் டம்ப்ளர் லாக்,

1784 ம் வருடம் ஜோசப் பிரம்மைய்யாவின் பூட்டு,

1818 ம் ஆண்டு ஜெர்மையாவின் பூட்டுக்கள்,

1848ல் லினெஸ் ஏலின் பின் டம்ப்ளர் பூட்டு,

1857 ல் ஜேம்ஸ் சர்ஜெண்டின் தானே பூட்டிக்கொள்ளும் பூட்டு,

1916ல் சாம்வேல் சேகலின் ஜெமி ப்ரூஃப் பூட்டு,

1924ல் ஹாரி சோரெஃப்பின் முதல் பாட்லாக்.....

இயந்திர வகையிலிருந்து தற்போது மின்னணுவிற்கு பூட்டின் தன்மை மாறுபடத் தொடங்கி உள்ளது.

இந்தியாவைப் பொறுத்த
வரையில் பூட்டு என்றாலேயே நினைவில் வருவது அலிகார் பூட்டுக்கள் மற்றும் திண்டுக்கல் பூட்டுக்கள்.

அலிகார் பூட்டுக்கள் புதிர் பூட்டு,அலங்காரப் பூட்டு, கைவிலங்கு பூட்டு, என்று பல வகையில் தயாரிக்கப்பட்டன. மிக அதிக அளவில் இவை ஏற்றுமதியும் செய்யப்பட்டன.

செட்டிநாட்டுப் பகுதிகளில், இன்றைக்கும் பல வீடுகளில், கதவுடன் கொண்ட பூட்டு பொருத்தப்பட்டிருக்கும். அதன் சாவி ஒரு உள்ளங்கை நீளத்தை விட பெரிதாகவே இருக்கும். தவிர, அந்தச் சாவி கனமாகவும் இருக்கும்.

திண்டுக்கல்லில் இருந்து வந்த மேங்கோ பூட்டுக்கள் அவற்றுடன் நம் வாழ் நாள் முழுவதும் பயன்படுத்தும் நிலையில் வந்தன.

திண்டுக்கல் பூட்டுக்கள் கைவேலைப்பாடுகளாலும்,
அலிகார் பூட்டுக்கள்  அச்சு இயந்திரங்களாலும் தயாரிப்பதாலும் திண்டுக்கல் பூட்டுக்களின் விலை அதிகமே.
அக்காலங்களில் அரசு அலுவலகங்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன..
#ப்யாரீப்ரியன்..
இணையத்தொகுப்பு...
https://m.facebook.com/story.php?story_fbid=3185816178168031&id=100002190405617



Sunday 19 July 2020

இராஜேந்திரசோழனின் பிறந்த நாள் எது??


#ஆடிஆதிரை_இராஜேந்திரச்சோழன்_பிறந்தநாள்
என்பதை குறிப்பிடும் #கல்வெட்டு

மாமன்னன் இராசேந்திரன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரையா?
மார்கழித் திருவாதிரையா? எனும் குழப்பத்தை தீர்த்த கல்வெட்டு...

திருவாதிரை என்பதில் யாருக்கும் குழப்பம் இல்லை.
நீலகண்டசாஸ்திரியாரும்,
சதாசிவபண்டாரத்தாரும் திருவாதிரை எனத்தான் அறிந்தனர்.

ஆனால் நீலகண்டசாஸ்திரிகள் மாதத்தை உறுதிப்படுத்தி கூறவில்லை.
பண்டாரத்தார் அதை மார்கழி என்று திருவெற்றியூர் கல்வெட்டை துணைகொண்டு கூறினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~
ஆனால்-
#திருவாரூரில் தியாகராசர் மூலஸ்தானத்தின் குமுத வரியில் உள்ள இராசேந்திரசோழனின் 31 வது ஆட்சியாண்டின் 244-ம் நாள் அவர் பிறப்பித்த #அரசுஆணையில் தன் தந்தையின் பிறந்த நாளுக்கும், அவரின் பிறந்த நாளுக்கும் ஈசனாரின் திருவாதிரைக்கும் நடக்கும் விழாவுக்கான நிவந்தம் பற்றி கூறுகிறார். அக்கல்வெட்டு இந்தியத் தொல்லியல் கல்வெட்டு இதழில் 1919-ம் ஆண்டு 674 எண்ணில் குறிப்புரைக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு ஏன் முழுமையாக ஏற்புடையாக இருக்கிறது என்றால்,
1.இது இராசேந்திரசோழனின் அரசாணை.

2.அவரே" யாம் பிறந்த ஆடி ஆதிரைக்கும் அய்யனின் ஐப்பசி சதயத்திலும் அய்யரின் மார்கழி திருவாதிரைக்கும்"என மூன்று நிகழ்ச்சிகளின் மாதம்,நட்சத்திரமும் குறிப்பிடப்படுகிறது.மார்கழியை பிறந்த மாதமாகக் குறிப்பிடும் பிற கல்வெட்டுகளில் இப்படி பிரித்து மூன்றையும் சுட்டவில்லை.அதோடு அவை அரசு ஆணையில்லை.

3.இராசேந்திரனுக்கு அணுக்கமான தியாகேசர் சன்னதி மூலஸ்தானத்தில் உள்ளது.

எனவே ஆடித்திருவாதிரை -  பார்போற்றும் வேந்தன்
எங்களது நாயகன் #இராஜேந்திரச்சோழன்
பிறந்த நாள்....
#ப்யாரீப்ரியன்

Thursday 2 July 2020

பூம்புகார் - ஆய்வுகள்



#பூம்புகார்_உண்மைகள்
(Poompuhar)
பெங்களூர் மிதிக் சொசைடியில் 2015ல் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.

பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.

வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.

''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ 
(தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.

கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் ப்ரியமான பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.

இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.

இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.

இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.

சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.

மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.

மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்

1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

2.  மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும் அறியப்படுவதால் 
திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.

3.  சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.

4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5.  குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.

6.  கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.

7.  புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.

12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு          வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில   தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச்      செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6.  தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில்             வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து      நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.

17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்
தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத் தன்மையற்றவைகளாக
உள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார்.  இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் ப்ரியமான சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.
#ப்யாரீப்ரியன்..(2015 மீள்பகிர்வு)
https://m.facebook.com/story.php?story_fbid=3116641711752145&id=100002190405617
நன்றி-தமிழக தொல்லியற் களங்கள்



Sunday 28 June 2020

மாமல்லபுரம் ஆய்வு

#மகாபலிபுரம்.....ஆய்வு...

மாமல்லபுரத்து ஏழு கோவில்கள் (Seven Pagodas of Mahabalipuram) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மாமல்லபுரத்தில் தற்போது கடற்கரையில் எஞ்சியுள்ள கலையழகுமிக்க கோவில் பகுதிகள் தவிர கடல்கோள் ஏற்பட்டு மூழ்கிப்போன வேறு கோவில் தொகுதிகளும் உண்டு என்பதைக் குறிக்கும் சொற்பயன்பாடு ஆகும்.

மாமல்லபுரத்தில் மறைந்துபோன கோவில்கள் பற்றிய மரபுச் செய்தி

இன்று மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடலோரக் கோவில் தவிர வேறு ஆறு கோவில்கள் கடல்நீருக்குள் மூழ்கிப்போயின என்னும் மரபுச் செய்தி தமிழகத்தில் பல காலமாக வழங்கிவருகிறது. அச்செய்தியையும் உள்ளடக்கிய விதத்தில் 1914இல் ஜே.டபிள்யூ ஜோசையா வாட்டர்சு (J.W. Josaiah Water) என்ற பிரித்தானியர் “ஏழு கோவில்கள்” (The Seven Pagodas) என்ற தலைப்பில் இலண்டனில் ஒரு நூல் வெளியிட்டார்.

1931இல் டி.ஆர். ஃபைசன் (D.R. Fyson) என்பவர் “மகாபலிபுரம் அல்லது ஏழு கோவில்கள்” (Mahabalipuram or Seven Pagodas) என்ற தலைப்பில் சிறியதொரு நூலை வெளியிட்டார். ஃபைசன் நெடுங்காலம் சென்னையில் வாழ்ந்த ஒரு பிரித்தானியர். அவர் எழுதிய சிறுநூல் ஐரோப்பிய பயணியருக்கு மாமல்லபுரம் பற்றிய செய்திகள் வழங்குகின்ற ஒரு பயணக் கையேடு. தாம் எழுதிய சிறு நூலின் கடைசிப் பக்கங்களில் அவர் தமிழ்நாட்டில் மாமல்லபுரக் கோவில்கள் பற்றி வழங்கிவந்த புராதனச் செய்தியையும் குறிக்கிறார். அதாவது, சீரும் சிறப்புமாகப் பல கோவில்களைக் கொண்டு விளங்கிய மாமல்லபுரத்தைப் பார்த்து இந்திரன் பொறாமை கொண்டு, பெரியதொரு புயலை அனுப்பி அந்நகரை அழித்துவிட்டாராம். கடற்கரைக் கோவில் மட்டும் தப்பியது. கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் கடலலைகளின் கீழே கோவில்கள் “ஒளிர்ந்து மிளிர்வது” பற்றிக் கூறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு மூழ்கிப்போன ஆறு கோவில்கள் உண்மையிலேயே உள்ளனவா என்பது குறித்து ஃபைசன் ஆய்வு நிகழ்த்தவில்லை. மாறாக, ஏழு கோவில்கள் பற்றிய மரபினால் மாமல்லபுரம் புகழ்பெற்றதே அவருக்கு முக்கியமானதாயிற்று.

இருப்பினும், இன்றைய மாமல்லபுரத்தை அடுத்த கடல்பகுதியில் வேறு கோவில்களும் கட்டடங்களும் கடலுக்குள் மூழ்கிய நிலையில் உள்ளனவா என்பது பற்றிய அறியும் ஆர்வம் மக்கள் நடுவிலும், அகழ்வாளர் நடுவிலும் தொடர்ந்து இருந்துவந்துள்ளது.

ஆய்வாளர் முயற்சிகள்

இந்திய வரலாற்று அறிஞர் என்.எஸ். இராமசுவாமி (N. S. Ramaswami) 1993இல் வெளியிட்ட “தென்னிந்தியக் கோவில்கள்” (Temples of South India) என்ற நூலில் 13ஆம் நூற்றாண்டு பயணி மார்க்கோ போலோ மாமல்லபுரம் சென்ற செய்தியைக் குறிப்பிடுகிறார். மார்க்கோ போலோ மாமல்லபுரத்தை நிலப்படத்தில் காட்டினார்.

ஐரோப்பியர் பலர் பிரித்தானிய இந்தியாவுக்குச் சென்று திரும்பியதோடு “ஏழு கோவில்கள்” பற்றியும் பேசினர். 18-19 நூற்றாண்டுகளில் சென்னையில் வாழ்ந்த பிரித்தானிய வானியல் ஆய்வாளர் ஜான் கோல்டிங்காம் (John Goldingham) என்பவர் 1798இல் மாமல்லபுரம் சென்றது பற்றியும் கடல்கோளால் மறைந்த மாமல்லபுரக் கோவில்கள் பற்றிய மரபுச் செய்தி குறித்தும் உரைக்கிறார். அவர் கூறியவற்றை மாற்கு வில்லியம் கார் (Mark William Carr) என்பவர் தொகுத்து தாம் வெளியிட்ட நூலில் அளித்தார். அந்த நூலின் பெயர் “சோழமண்டலக் கரையில் அமைந்த ஏழு கோவில்கள் பற்றிய விளக்க மற்றும் வரலாற்று ஆய்வுகள்” (Descriptive and Historical Papers Relating to the Seven Pagodas on the Coromandel Coast) என்பது. அது 1869இல் வெளியானது.

கோல்டிங்காம் பெரும்பாலும் மாமல்லபுரத்துக் கலைப்பொருள்கள், சிலைகள், கல்வெட்டுகள் பற்றிப் பேசினார். கல்வெட்டுகள் பலவற்றையும் அவரே தம் கைப்பட பிரதி எடுத்து வெளீட்டார். அவருடைய விளக்கப்படி, அக்கல்வெட்டு படவடிவ எழுத்துக்குறிகளைக் கொண்டவை, அவற்றின் வடிவம் பார்த்து அவை எப்பொருள் தருகின்றன என்று காண வேண்டும். மேற்கூறிய நூலில் பெஞ்மின் கி பாபிங்டன் என்பவர் தாம் எழுதிய கட்டுரையில் மாமல்லபுரக் கல்வெட்டுகளில் தெலுங்கு எழுத்துக்கள் உள்ளன என்றார்.

பிரித்தான எழுத்தாளர் ஜே.டபிள்யூ. கோம்ப்ஸ் (J.W. Coombes) என்பவர் மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய மரபுச் செய்தியையும் ஐரோப்பிய கருத்தையும் 1914இல் எடுத்துரைத்தார். மாமல்லபுரத்துக் கடற்கரையில் ஒருகாலத்தில் பலகோவில்கள் இருந்தன என்றும், அக்கோவில்களின் கூரையில் வேய்ந்த தாமிரத் தகடுகள் கதிரவனின் ஒளியில் ஒளிர்ந்து கடல் பயணிகளுக்குக் கலங்கரை விளக்கமாக அமைந்தன என்றும், மக்கள் பொதுவாக ஏழுகோவில்கள் இருந்ததாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

என்.எஸ். இராமசுவாமி கருத்துப்படி, மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய கருத்து எழுவதற்கு முக்கிய காரணம் 1810இல் ராபர்ட் சவுதி (Robert Southey) என்பவர் வெளியிட்ட “கேகமாவின் சாபம்” (The Curse of Kehama) என்னும் காப்பியமே. அக்கவிஞர் தமது படைப்பில் மாமல்லபுரத்துக் கடலின் கீழே கோவில்கள் உள்ளன என்றார்.

ஆய்வாளர் இராமசுவாமி கருத்து

என்.எஸ். இராமசுவாமி மாமல்லபுரத்தில் கடல்கொண்ட கோவில்கள் உண்டு என்னும் செய்திக்கு வரலாற்று ஆதாரம் இருந்ததாகக் கருதவில்லை. இருப்பினும், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் மாமல்லபுரத்தின் பல வரலாற்றுக் கட்டடங்கள் மணலுக்குள் அழுந்திக் கிடந்தன என்றும், பிரித்தானியக் குடியேற்றத்தாரும் அவருடைய குடும்பத்தாரும் தம் ஓய்வு நேரத்தில் உழைத்து அந்த வரலாற்றிடங்களை வெளிக்கொணர்ந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார். மாமல்லபுரத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்ததும் பிரித்தானியர் கோலின் மாக்கென்சி (Colin Mackenzie) போன்ற அறிஞரின் துணையோடு அகழ்வாய்வில் ஈடுபட்டனர்.

மறைந்துபோன வரலாற்று ஆதாரம்

2004, திசம்பர் 26இல் ஏற்பட்ட சுனாமிக்கு முன்னால் மாமல்லபுரத்து மறைந்த கோவில்கள் பற்றிய செய்தி, ஆதாரங்களோடு உறுதியாக நிறுவப்படவில்லை. கடற்கரைக் கோவில், இரத வடிவிலான குடைக்கோவில்கள் மற்றும் கட்டுக்கோவில்கள் ஆகியவை ஒரே இடத்தில் காணப்பட்டது அந்த இடத்தின் சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தின. எனவே, மேலதிக கோவில்கள் அங்கு இருந்திருக்கலாம் என்ற ஊகம் உறுதியாகவே இருந்தது.

மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய மர்மம் தோன்றியதற்கு என்.எஸ். இராமசுவாமி அளித்த விளக்கம்: ”2000 ஆண்டு தொன்மை வாய்ந்த கலாச்சார அறிகுறிகள், மாமல்லபுரத்தில் தற்போதுள்ள சுமார் 40 கட்டடங்கள், வெளியே அமைந்துள்ள சிற்பத்தொகுதிகள் இவை எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு மக்கள் மனத்தில் மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய கருத்து எழுந்தது. அதற்கு ஐரோப்பியர்கள் ஊக்கமளித்தார்கள். ஆனால் உண்மையிலேயே மாமல்லபுரத்து மறைந்த கோவில்களுக்கு வரலாற்று ஆதாரம் இல்லை.”

ஆனால், வாய்மொழிச் செய்தியும் சில வேளைகளில் உண்மையாகலாம் என்பது விரைவில் தெரிந்தது.

2002ஆம் ஆண்டு ஆய்வு

மாமல்லபுரத்துக் கடலோரத்தில் மீனவர்கள் நீருக்கடியில் கட்டடங்கள் பகுதிகளைக் கண்டதாகக் கூறிய இடத்தில் 2002இல் அறிஞர்கள் ஆய்வைத் தொடங்கினர். அந்த ஆய்வுத்திட்டம் இந்திய தேசிய கடலாய்வு நிறுவனத்தாலும் (National Institute of Oceanography) ஐக்கிய இராச்சிய “அறிவியல் ஆய்வுக் கழகத்தாலும்” (Scientific Exploration Sociey) இணைந்து மேற்கொள்ளப்பட்டன.

அந்த இரு குழுக்களும் கண்டுபிடித்தவை: கடற்கரையிலிருந்து சுமார் 500-700 மீ. தொலைவில் 5-8 மீ. நீருக்கும் மணல்படுகைக்கும் அடியில் சுவர்ப் பகுதிகள். அவை பரந்து விரிந்து கிடந்த அமைப்பைக் கண்டபோது அவை பல கோவில்களின் பகுதிகளாக இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. அந்தக் கட்டடங்கள் பல்லவர் காலத்தவை என்றும், முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் காலத்தவை என்றும் அறிஞர் கருதுகின்றனர். மேலும் பல கண்டுபிடிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறினர்.

சுனாமி வெளிக்கொணர்ந்த கட்டடப் பகுதிகள்

2004, திசம்பர் 26இல் நிகழ்ந்த சுனாமியின் விளைவாக மாமல்லபுரத்துக் கடல் பகுதியில் கடல்நீர் சுமார் 500 மீ. பின்வாங்கியது. அப்போது ஊர்மக்களும் சுற்றுப்பயணிகளும் கடல் மண் பகுதியில் நீண்ட தூரம் வரிசையாக அமைந்த பெரிய பாறைகள் தோன்றியதைக் கண்டனர். கடல் நீர் மீண்டும் கரைநோக்கி வந்து மணல்பகுதியை மூடியதும் அப்பாறை வரிசைகளும் நீருக்குள் மூழ்கின.

ஆயினும், பல நூற்றாண்டுகளாகப் படிந்த மணல் படுகைகளை அலைநீர் அடித்துச் சென்றுவிட்டிருந்தது. சுனாமியின் விளைவாக மாமல்லபுரக் கடலோர எல்லையிலும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் கடலடியிலிருந்த பல சிலைகளும் கட்டடப் பகுதிகளும் கண்ணுக்குத் தென்படலாயின. [5]

மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய ஆய்வைத் தொடர்கையில் சுனாமியின் விளைவாக வேறு கண்டுபிடிப்புகளும் வெளிவந்தன. கல் பாளங்கள் அமைந்த பகுதிக்குக் கீழே செங்கல்லால் ஆன கட்டடப் பகுதிகள் தெரியவந்தன. இந்த இருவகைக் கட்டுமானப் பொருள்களும் வெவ்வேறு காலத்தவை என்பது தெளிவு. கல் பாளங்கள் அமைந்த பகுதி பல்லவர் காலத்தது என்று கொண்டால் அதற்கு அடியில் உள்ள செங்கல் பகுதிகள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவை என்பது அறிஞர் கருத்து.

சங்ககாலக் கோவில் பகுதிகள் கண்டுபிடிப்பு

சங்ககாலக் கட்டடங்களும் குடியிருப்புகளும் சுனாமி கடல்கோள் காரணமாக மறைந்திருக்க வேண்டும். இந்திய அகழ்வாய்வு ஆராய்ச்சிக் கழகத்தின் (Archeological Survey of India) சார்பாக நடந்த ஆய்வுமுடிவுகள் பற்றி டி. சத்தியமூர்த்தி இவ்வாறு கூறினார்: “சுனாமி அலைகள் வெளிக்கொணர்ந்த ஒரு பெரிய பாறைக் கல்வெட்டுகள் கி.பி. 935ஆம் ஆண்டைச் சார்ந்தவை. அவற்றில் மூன்றாம் கிருஷ்ணா என்ற கர்நாடக வம்ச மன்னன் கோவிலில் அணையா விளக்கு எரியும் வகைக்காகக் கோவிலிக்குப் பொன் கொடுத்த செய்தி உள்ளது. எனவே நாங்கள் இன்னும் ஆழமாக அகழ்ந்தோம். அங்கு நாணயங்கள், மண்பாண்டத் துண்டுகள், சுண்ணத்தால் ஆன சிறு உருவங்கள், பித்தளை விளக்குகள் போன்றவை கிடைத்தன. விரைவிலேயே 9ஆம் நூற்றாண்டு பல்லவ காலத்துக் கோவில் பகுதிகளைக் கண்டுபிடித்தோம்.”

அகழ்வாய்வு தொடர்ந்தபோது பண்டைய சங்கக் காலக் கோவில் பகுதிகள் தோன்றின. செங்கல் கட்டடப் பாணியிலிருந்து கருங்கள் பாளங்கள் அமைந்த கட்டடப் பாணிக்கு மாற்றம் ஏற்பட்டது தெளிவாகத் தெரிந்தது. சங்ககாலக் கோவில் தகர்க்கப்பட்டபின், அதன் அடித்தளத்தின் மீதே பல்லவர்கள் கோவிலை எழுப்பியுள்ளார்கள்.

சங்ககாலத்து சுனாமி

அகழ்வாய்வின் போது தெரிந்த மற்றொரு உண்மை, பல அடுக்குகளாக அமைந்த கடல் சிப்பிப் பரப்புகள் மற்றும் இடிமானங்கள். அவற்றின் அடிப்படையில் ஆய்வாளர்கள் அந்த இடத்தில் சுனாமி இரு முறை நிகழ்ந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். பல்லவர் காலத்துக் கட்டடங்கள் 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சுனாமியில் அழிந்தன. அதற்குக் கீழே மணலுக்கு அடியில் தெரிந்த செங்கல் கட்டடப் பகுதிகளைப் பார்க்கும்போது சங்ககாலத்தில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னிருந்த கோவிலும் சுனாமிக்கு இரையாகியிருக்க வேண்டும். இவ்வாறு இந்திய நில ஆய்வுக் கழக முன்னாள் இயக்குநர் எஸ். பத்ரிநாராயணன் கூறினார்.

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு உட்பட் 1,200 கி.மீ. தூரம் இந்த சுனாமி அழிவு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.

2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு கடற்கரையிலிருந்து கடலுக்குள்ளாக சுமார் 1 கி.மீ. தூரத்திலும் பெரிய கட்டடங்கள் அழிவுப் பகுதிகள் கிடைத்துள்ளன. அவை முற்காலத்து மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்களின் பகுதிகளாக இருக்கலாம் என்று ஆழ்வியலார் கருதுகின்றனர்.

சுனாமி வெளிக்கொணர்ந்த சிங்கச் சிலை

2004ஆம் ஆண்டு சுனாமியால் கடலிலிருந்து வெளிப்பட்ட வரலாற்று ஆதாரங்களுள் மிகச் சிறப்புவாய்ந்தது பெரியதொரு சிங்கச் சிலை ஆகும்.மணற்கல்லால் ஆன இச்சிங்கம் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று அறிஞர் கருதுகின்றனர். இது பல்லவர் காலத்ததே என்பதற்குத் தெளிவான அடையாளங்கள் உள்ளன.

பிற கண்டுபிடிப்புகள்

2005 ஏப்பிரல் மாதத்தில் இந்திய அகழ்வாய்வுக் கழகமும் இந்திய கடற்படையும் மாமல்லபுரக் கடல்கரைப் பகுதியில் நீருக்குள் ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு (sonar) நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்ந்தனர். அதன்போது, 2004ஆம் ஆண்டு சுனாமி வெளிக்கொணர்ந்த பாறைக் கூட்டம் என்பது ஆறடி உயரமும் 230 அடி நீளமும் கொண்ட சுவரின் பகுதிகள் என்று கண்டனர். மேலும், கடற்கரையிலிருந்து 500 மீ. தூரத்தில் கடலுக்கடியில் வேறு இரண்டு கோவில்களின் பகுதிகளும் ஒரு குகைக்கோவில் பகுதியும் காணப்பட்டன. மேலும் கடலில் மூழ்கிய 25 மீ. நீளம் மற்றும் 28 மீ. அகலம் கொண்ட கோவிலின் கர்பகிரகம் (ஒவ்வொரு பக்கமும் 2.6 மீ. கொண்ட சமசதுரம்), அதைச் சூழ்ந்த பகுதி, பிரகாரம் ஆகியவையும் தெளிவாகத் தெரிந்தன. இடிந்து விழுந்த கோவில் சிகரம், கலசம் போன்றவையும் மாமல்லபுரக் கடற்கரைக் கோவிலில் உள்ளதுபோலவே உள்ளன.

கர்பகிரகப் பகுதியில் காணப்பட்ட கருங்கல் பாளங்களில் கட்டடக் கலைஞரின் கையெழுத்துப் போல ஒரு பறவை வரையப்பட்டுள்ளது. மேலும் அம்பும் வில்லும் உள்ளன. குறுக்கு நெடுக்காக இரு முக்கோணங்கள் ஒரு வண்ணத்துப் பூச்சி வடிவைக் காட்டுகின்றன. இத்தகைய ப்ரியமான சின்னங்கள் பல்லவர் காலக் கட்டடங்களில் இதுவரை காணப்படவில்லை என்று தெரிகிறது என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

இப்பொருள்கள் பற்றியும் அகழ்வில் கிடைத்த கல்வெட்டுகள், பல்லவர் காலத்திற்கு முற்பட்டதாகத் தெரிகின்ற சுடுமண்ணால் (terracotta) கட்டப்பட்ட கிணறு போன்றவற்றைப் பற்றி டி.எஸ். சுப்பிரமணியன் ஃப்ரண்ட்லைன் இதழில் விரிவான தகவல்கள் தருகின்றார்

http://www.frontline.in/…/fl2…/stories/20050520005812900.htm

மாமல்லபுரத்தின் ஏழு கோவில்களா?

மாமல்லபுரத்தில் ஏழு கோவில் அமைப்புகள் இருந்தன என்ற புராதனச் செய்தி முற்றிலும் உண்மையே என்று கூறமுடியாவிட்டாலும், மேற்கண்ட கண்டுபிடிப்புகளின் விளைவாக, மாமல்லபுரம் பகுதியில் மாபெரும் கோவில் வளாகம் இருந்தது என்றும் கடல்கோள் காரணமாக அது பெரும்பாலும் மறைந்துவிட, இன்று ஒருசில கட்டடங்களே எஞ்சியுள்ளன என்பதும் தெளிவாகிறது.
#ப்யாரீப்ரியன்...
இணையத்தொகுப்பு..
https://m.facebook.com/story.php?story_fbid=120656368269815&id=105541249781327