Wednesday 28 August 2019

திருவள்ளுவர் நாணயம்

தெய்வப்புலவர் திருவள்ளுவரின்திருவு­­ருவம் பொறித்த ஒரு தங்க நாணயம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி சார்ந்த எல்லிஸ்துரை என்பவரால் சென்னையில் வெளியிடப்பட்டது என்பது ஒரு வியப்பான செய்தி..
ப்யாரீ ப்ரியனின் இலக்கிய வரலாற்று மீள்பகிர்வு...
கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலின் முதல் தொகுதியில் இந்தத் தங்க நாணயத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு முதன்முதலாகக் காணப்படுகிறது. இரட்டை வராகன் என்று அழைக்கப்பட்ட ஒரு தங்க நாணயத்தின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவரும், பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன என்று இக்குறிப்பு தெரிவிக்கிறது. இக்காசு ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியின் சென்னை அரசால் 1819-க்கு முன்னர் வெளியிடப்பட்டது என்றும், இது புத்தம் புதியதாகக் காணப்படுவதால் அச்சிடப்பட்டும் புழக்கத்திற்கு வெளியிடப்படாத நாணயமாக இருக்க வேண்டும் என்றும், இதே போன்று நான்கு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும், அவற்றில் இரண்டு லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்திலும், மற்ற இரண்டு கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்திலும­­் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் இக்குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அரசு சென்னையிலிருந்து 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளியிட்ட "நட்சத்திரப் பகோடா" அல்லது 'வராகன்' என்று அழைக்கப்பட்ட பல தங்க நாணயங்களில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது. மேலும் இக் காசு இயந்திரத்தின் மூலம் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளத­­ு. கும்பினி அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவி தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது. 1817-ம் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இக்காசு 1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். மேலும், 1616-ம் ஆண்டும் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினியார் கல்கத்தாவில் வணிக மையம் நிறுவி, 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாட 1816-ம் ஆண்டு சில சிறப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம்.
எல்லிஸ் துரையும் திருக்குறளும்
அக்கால கட்டத்தில் ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் ஆங்கிலேய அதிகாரி சென்னை மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி வந்தார். 1796-ம் ஆண்டு ஆட்சிப் பணியில் சேர்ந்த அவர் சில ஆண்டுகளிலேயே தமிழ் முதலிய தென்னிந்திய மொழிகளிலும் வடமொழியிலும் பெரும் புலமை பெற்றுவிட்டார். தமிழ் நூல்கள் அச்சேறிராத அக்காலத்திலேயே அவர் ஏட்டுச் சுவடிகளிலிருந்து முறையாகத் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ் முதலிய திராவிட மொழிகள், சம்ஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்ற உண்மையை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெருமை இவரையே சாரும்.
எல்லிஸ் துரைக்கு திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அளப்பரிய பற்று இருந்தது. திருக்குறளிலிருந்து பல குறள்களை தேந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தெளிவான உரையுடன் ஓர் அரிய நூலை இவர் எழுதினார். இதுவே திருக்குறளின் முதல் ஆங்கில மொழி பெயர்ப்பாகும்.
#ப்யாரீப்ரியன்..

Friday 23 August 2019

மகாபாரதமும் அறிவியலும்

#மகாபாரதம்...
இன்று இருக்கும் அறிவியலை விட மிக மேம்பட்ட அறிவு அன்று இந்தியாவில் இருந்திருக்கின்றது ஏதோ ஒருகாலத்தில் அது தொடற்பற்று போய் மீண்டும் ஐரோப்பாவில் மலர்ந்தது என அவர்களே சொல்கின்றார்கள்

ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் மகாபாரதம் மற்றும் கண்ணணோடு ஒப்பிட்டு அவர்கள் சிலாகிப்பதே வேறு ரகம்

அணுகுண்டு வெடிக்கும் பொழுது ஓப்பன் ஹைமர் எனும் யூதன் அது கீதையில் கண்ணன் சொன்ன வடிவம் என்கின்றான்

இன்றைய #அணுகுண்டு அன்றைய பிரம்மாஸ்திரம் சந்தேகமில்லை ஆனால் மகாபாரதம் அதை கட்டுபடுத்தும் வித்தை அர்சுனனுக்கு தெரிகின்றது அதனால் எங்கோ ஒரு வித்தை உண்டு என நம்பிக்கையோடு ஆய்வினை தொடர்கின்றது மேற்குலகம்

#பிரம்மாஸ்திரம் இப்படி என்றால் பாசுபத கணை எப்படி இருக்கும் என்கின்றது இன்னொரு ஆய்வு

கண்ணனின் சக்கராயுதம் இன்றைய #ட்ரோனின்  மாடல் என்கின்றது இன்னொரு ஆய்வு, கவனியுங்கள் பொருந்தும்

பார்வையிலே எரிக்கும் #லேசர் போன்ற சக்தி காந்தாரிக்கு இருந்திருகின்றது, ஒளி கதிரில் ஒருவரை எரிக்கலாம் என்பதன் தத்துவம் அது

கர்னணின் பிறப்பு கிட்டதட்ட #குளோனிங் மற்றும் நவீன விஞ்ஞான விஷயங்களை சொல்வதாக சொல்கின்றது மருத்துவம்

பலராமன் பிறப்பும் அதையே சொல்கின்றது

பாரதத்தை படித்த மேற்குலகம் அதன் நுட்பம் எல்லாம் இன்று கண்முன் நிற்பதை பார்த்து அதிசயிக்கின்றது

மந்திரம் சொன்னால் சில கணைகள் இயங்கும் என பாரத போர் சொல்வதை இன்று நாம் #வாய்ஸ்_பாஸ்வேர்ட் என்கின்றோம் என்கின்றது ஒரு ஆய்வு

இன்றைய ஏவுகணை எதிர்ப்பு #ஏவுகணைகள் எல்லாம் அன்றே பாரத போரில் பயன்பட்டன, ஏவுகணை எதிர்ப்பு கணைகள் சாத்தியம் என முதலில் சொன்னது

அர்ஜூனன் கழுத்தை குறிவைத்த நாகஸ்திரம் இன்று உலகை மிரட்டும் #உயிரியல் ஆயுதத்தின் வடிவம் என்கின்றது ஒரு ஆய்வு

ஆம் விஷத்தை ஆயுதமாக்கலாம் என இன்றைய உலகின் மிரட்டலை முதலில் சொன்னது பாரதமே

விண்வெளியின் ரகசியங்களை மகாபாரதம் சொல்லிதருவது போல் இன்னொரு காவியம் சொல்வதில்லை என்கின்றது இன்னொரு ஆய்வு

துரோணரும் துருபதனும் அமைத்த #வியூங்களை இன்றளவும் சிலாகிக்கின்றனர் ராணுவ தளபதிகள்

பாரதத்தை யார் ப்ரியமாக படிக்கின்றார்களோ இல்லையோ மிக நுட்பமாக படித்தவர்கள் இஸ்ரேலியர்

ஆம் யுத்தத்தில் மனநலமும் உற்சாகமும் முக்கியம். சோர்ந்துவிட்ட அர்ஜூனனை மனநலமாக எழவைத்த கண்ணனின் உரையே கீதை

அந்த பலமே அங்கு வெற்றியினை தீர்மானித்தது, இன்றளவும் தங்கள் வீரர்களின் மனநலத்தை காப்பதில் இஸ்ரேலின் கவனம் அதிகம்

அதே அளவு தந்திரம் எதிரியினை மனதால் குழப்புவது, அதை கண்ணன் செய்தான், இஸ்ரேல் அரபு போர்களில் அட்டகாசமாக செய்தது

பாரத போரில் பலமிக்க துரியன் படை ஒரேநேரத்தில் வந்தால் சிக்கல் , ஆனால் ஒவ்வொருவராக வந்து செத்தார்கள்

அரபுலகில் இன்று எல்லாவற்றையும் கடந்து ஈரானை மட்டும் சந்திக்க இஸ்ரேல் கிளம்புவது அப்படித்தான்

இஸ்ரேலிய வெற்றி ஒவ்வொன்றையும் பாருங்கள் அவர்கள் கண்ணனை அப்படியே படித்திருப்பார்கள்

அவர்களின் ராஜதந்திரி கீட்ஸேயாகட்டும் , தளபதி மோசே தயானாகட்டும் எல்லாவற்றிலும் கண்ணன் தெரிவான்

சிறிய படைகுழு பெரிய சேதத்தை செய்ய வேண்டும் என்பதை அபிமன்யுவிடம் இருந்து நுணுக்கமாக கற்றனர் இஸ்ரேலியர், மோசே தயான் அதில் தன்னிகரற்று இருந்தார்

போர் ஆயத்தம், நட்பு படை,  தலமை, குழு மனப்பான்மை, உளவு படை, அர்ப்பணிப்பு , தகவல் தொடர்பு என எல்லாவற்றையும் போதிக்கின்றது மகாபாரதம்..

ஆம் ராணுவம், உளவு, ராஜதந்திரம்,நிர்வாகம் என எல்லாவற்றிலும் வென்றவர்களை பாருங்கள், அதில் எல்லாம் கண்ணனின் முத்திரை இருக்கும்...
#ப்யாரீப்ரியன்...
படித்ததில் பிடித்தது....

Wednesday 14 August 2019

தேசியக்கொடி ஏற்றுதல் குறித்து

#தேசியக்கொடி... குறித்து..

*சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......*

*#முதல்_வித்தியாசம்......*

பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,

இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று
கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்  இதை கொடியை பறக்கவிடுதல்  அதாவது flag unfurling என்பார்கள்..

*#இரண்டாவது_வித்தியாசம்

சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head  கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால்  அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..

*#மூன்றாம்_வித்தியாசம்.......

சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ்  பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது.......
#ப்யாரீப்ரியன்...

Friday 9 August 2019

தமிழகத்தில் அரியலூர் பகுதியில் வாழ்ந்த டைனோசர் இனம்

அரியலூர் படுகையில்  வாழ்ந்த #டைனோசார்கள்.

அரியலூர் படுகையில் டைனோசார் முட்டை கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், 19ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலேயே, டைனோசார் எலும்பு ஃபாசில்களும், பல்  ஃபாசில்களும், இந்திய புவியியல் ஆய்வுத் துறையை (G S I) சேர்ந்த புவியியலாளர்  WILLIAM THOMAS BLANFORD (1860) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அப்போது இந்த விலங்குகளுக்கு டைனோசார் எனும் பெயர் இல்லை. இவை MEGALOSAURAS என்றே அறியப்பட்டன. MEGA என்றால் ‘பெரிய’  SAURAS  என்றால் ‘ஊர்வன’. பின்னாளில் 1941ஆம் ஆண்டு, RICHARD OWEN  என்பார் DINOSAUR எனும் பெயரை அறிமுகம் செய்தார்.
கல்லமேடு கிராமதிற்கருகே சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானப் படிவப்பாறைகளில் கிடைத்த எலும்பு ஃபாசில்கள் மிகவும் சிதைந்திருந்தன. தனியாக  ஒரு பல் மட்டும்  நல்ல நிலையில் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து,1870 இல்,GSI ஐ சேர்ந்த RICHARD LYDEKKER, கல்லமேடு பகுதியிலும், CHARLES MATELY 1928 இல் கல்லமேடு மற்றும் ஓட்டக்கோவில்  பகுதியிலும் டைனோசார் ஃபாசில்களை கண்டறிந்தனர். MATELY அவர்களுக்கு உருவத்தில் மிகப் பெரிய TITANOSAURAS, சிறிய உருவமுடைய STEGOSAURAS ஆகியவற்றின் ஃபாசில்கள் கிடைத்தன. இதன் மூலம் இங்கே, ஒருவகையல்ல, பலவகை டைனோசார்கள் வாழ்ந்திருந்தன என அறியமுடிகிறது.

TITANOSAURAS போன்ற தழைத் தின்னிகள்  மட்டுமல்லாமல், ABELISAURAS போன்ற ஊன் தின்னி டைனோசார்களின் பாசில்களும் இங்கே கண்டறியப்பட்டுள்ளன.

அரியலூர் படுகையில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும், டைனோசார் எலும்பு பாசில்களை விட, டைனோசார் பல் பாசில்களே அதிகம் கிடைக்கின்றன.

“ வந்தீங்க, வந்துட்டுப் போனீங்க, போய்ட்டு வந்தீங்க, அப்புறமா போனீங்க, அதுக்கப்புறம் வரவேயில்லையே “ இது மனிதனின் பல்லுக்கான விடுகதை.
ஆனால், இது டைனோசார்களுக்குப் பொருந்தாது, ஏனெனில், இவைகளுக்கு பற்கள் விழுந்து கொண்டே இருக்குமாம், விழ விழ முளைத்துக் கொண்டே இருக்குமாம். அதனால்தானோ என்னவோ, பல் பாசில்கள் அதிகம் கிடைக்கின்றன. 

GSI ஐ சேர்ந்த, யாதகிரி மற்றுன் அய்யாசாமி ஆகிய புவியியலாளர்கள் 1987 ஆம் ஆண்டு , CARNOSAURAS பாசில்ககளை கண்டறிந்தார்கள். இதைத் தொடர்ந்து, 2013 இல்,TROODON வகை டினோசாரின் பல்லும் இங்கே கிடைத்தது,

நன்றி : பெரும்பாலான படங்களும், தகவல்களும், SCIENTIFIC THAMIZHAN விழியத்திலிருந்து                   
எடுக்கப்பட்டவை.
திரு.நிர்மல்ராஜா, திரு.சிங்கராஜன் சம்பந்தம் அவர்களுக்கும் நன்றி.
#ப்யாரீப்ரியன்...