Wednesday 25 April 2018

மனித மனம்

ஒரு குட்டி கதை.....

ஒரு ஊரில் பெரிய *கோயிலில் கோபுரத்தில்*
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,

திடீரென்று *கோயிலில் திருப்பணி* நடந்தது

அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு
இடம் தேடி பறந்தன

வழியில் ஒரு *தேவாலயத்தை கண்டன*

அங்கும் சில புறாக்கள் இருந்தன

அவைகளோடு இந்த புறாக்களும்
குடியேறின.

சில நாட்கள் கழித்து *கிறிஸ்துமஸ்*
வந்தது.

தேவாலயம் புதுப்பிக்க தயாரானது

இப்போது இங்கு இருந்து சென்ற
பறவைகளும்
அங்கு இருந்த பறவைகளும்
வேறு இடம் தேடி பறந்தன .

வழியில் ஒரு *மசூதியை கண்டது*

அங்கும்
சில புறாக்கள் இருந்தன.
அவைகளோடு
இந்த புறாக்களும் குடியேறின

சில நாட்கள் கழித்து *ரமலான்*வந்தது
வழக்கம் போல்
இடம் தேடி பறந்தன.

இப்போது மூன்று இடத்திலும் உள்ள
புறாக்களும் கோயிலில் குடியேறின...

*கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.*

ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவிடம் கேட்டது
"ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"
என்று...

அதற்கு அந்த தாய் புறா சொன்னது

"நாம்
இங்கு இருந்த போதும் புறா தான்,

தேவாலயத்துக்கு போனபோதும் புறா
தான்,

மசூதிக்கு போன போதும் புறா தான் ",

"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"
சர்ச்க்கு போனால்
கிறிஸ்த்தவன்"
மசூதிக்கு போனால்"முஸ்லிம்" என்றது;

குழம்பிய குட்டி புறா"
*அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும்* "என்றது.

அதற்கு தாய் புறா "

இது புரிந்ததனால்
தான் நாம் *மேலே இருக்கிறோம்,*

அவர்கள் *கீழே இருக்கிறார்கள்"* என்றது..

Monday 9 April 2018

ஜடை...

#ஜடைப்பின்னலின்_மகத்துவம்..
பின்னல் உறவைக் குறிக்கிறது. முடியை விரித்துவிடுவது(free hair) அமங்களமானது.
எவ்வுறவும் வேண்டாம் என்பதை குறிக்கிறது.
ஆகையினால் தான் இறந்தவர் வீட்டிலும் பிணத்தின் பின்னும் தலைவிரி கோலமாகச் செல்வர்.
அதன் பொருள் "என்னவரே சென்ற பின் எனக்கேது உறவு.
இனி எந்த உறவும் எனக்கில்லை" என்பதாகும்.
மேலும் தலை முடியின் நுனி வழியாக ஆத்ம சக்தி வெளியேறுகிறது.
நல்ல / தீய உணர்வுகள் (அ) அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் (medium) போன்றது முடியின் நுனி... மேலும் துறவிகள் மொட்டை அடித்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஏனெனில் வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை... நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை...
என்பதை உணர்த்துவதற்காக.
ஆகையினால் தான் முற்காலத்தில் நுனி முடி வெளியில் தெரியாமல் இருக்க நார் அல்லது குஞ்ஜலம் கட்டிக் கொள்வர்...
ஆகையால் தலைவிரி கோலத்தைத் தவிர்ப்போம்.
இது உறவின் மீதான பிடிப்பை அறுக்க கூடியது.
ஜடைப் பின்னல்
இதன் அமைப்பு த்ரிவேணி சங்கமத்தை ஒத்தது.
மூன்று நதிகள் சேரும் போது இரண்டு நதிகள்(கங்கை,யமுனை) கண்களுக்கு புலப்படுகின்றன. ஒரு நதி (சரஸ்வதி) புலப்படுவதில்லை.
இதைப் போலவே பின்னலின் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.
ஜடைப்பின்னலின்
வலது- பிறந்த வீடு
இடது-புகுந்த வீடு
நடுப்பகுதி-பெண்
தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும்.
தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும்
தன் குலத்தை முன்னிறுத்துபவளே உயர்ந்தவள் ஆவாள்.
ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல வாழ்வின் தத்துவமாகும்.
#ப்யாரீப்ரியன்.அறிவோம் தெளிவோம் தொகுப்பிலிருந்து....

Thursday 22 March 2018

என்னென்ப...

🍁 *உணவு*
என்பது மருந்து
🍁 *ஆடை*
என்பது  மானம்
🍁 *பணம்*
என்பது  தேவை
  🍁 *ஆங்கிலம்*
என்பது மொழி
🍁 *தமிழ்*
என்பது உயிர்
🍁 *அம்மா*
என்பது  பாசம் 
🍁 *அப்பா*
என்பது ஆசான்
🍁 *ஆனந்தம்*
என்பது ஆயுள்
🍁 *சினம்*
என்பது நோய்
🍁 *துன்பம்*
என்பது பரீட்சை
🍁 *தோல்வி*
என்பது  பாடம்
🍁 *வெற்றி*
என்பது தற்காலிகம்
🍁 *நட்பு* 
என்பது  இளமை
🍁 *குடும்பம்*
என்பது பற்று
🍁 *கர்மா*
என்பது தொடரும்
🍁 *எண்ணம்*
என்பது வாழ்க்கை
🍁 *உலகம்*
என்பது மாயை
🍁 *நான்* 
என்பது அறியாமை 
🍁🍁🍁🍁🍁🍁
இதை உணர்ந்து
கொண்டால்
மனிதன்..
~~~