Thursday 27 June 2019

ஆதிச்சநல்லூர் மண்பாண்ட பெண் ஓவியம்

ஆதிச்சநல்லூர் மண்பாண்ட ஓவியம்..
பெல்லாரி பாறை ஓவியம்...
இரண்டும் ஒன்று போலவே இருப்பது ஆராய்ச்சிக்குரியது...

Monday 17 June 2019

தமிழினம் விழிக்க....குடும்ப கட்டுப்பாடு

#விழிப்புணர்வு_தகவல்

"மெல்ல அல்ல விரைவாகவே இனி சாகும் தமிழினம்!

#பெர்ட்டிலிட்டி_ரேட் என்ற ஒரு எண் உன்டு. அதாவது சராசரியாக ஒரு பெண் எத்தனை குழந்தை பெறுகிறாள் என்ற கணக்கு அது. இறப்புவிகிதத்தை எல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு இனம்/நாடு/மாநிலம் என எதுவாக இருப்பினும் அதன் தற்போதைய ஜனத்தொகை குறையாது இருக்கவேண்டுமெனில் ஒரு பெண் குறைந்தது 2.1 பிள்ளைகளையாவது சராசரியாக பெறவேண்டும். ஏனெனில் ஒரு ஆண்/ஒரு பெண் இணைந்து 2.1 குழந்தைகளையாவது சராசரியாக பெற்றால் தான் அந்த இனம்/நாடு/மாநிலத்தின் ஜனத்தொகை வளர்கிறதோ இல்லையோ, அழியாமலாவது இருக்கும். (2.1 என்பது சராசரி. அதனால் 0.1 குழந்தையை எப்படி பெறுவது என குழம்பவேண்டாம்

தமிழ்நாட்டின் ஜனதொகை பெருக்கம் நெகடிவில் உள்ளது. ஆம் சராசரியாக ஒரு தமிழ்ப் பெண் 1.7 குழந்தைகளையே பெறுகிறார். இந்தியாவின் அதிக மக்கள் தொகை உள்ள உபி, பிகாரில் இது 3.5. ஆம் சராசரி உபி, பிகார் பெண் 3.5 குழந்தைகளை பெறுகிறார்.

அதாவது இந்த தலைமுறையில் 2 கோடி தமிழர்கள் இருந்தால் அவர்கள் பிள்ளைகளாக 1.7 கோடி தமிழரே இருப்பார்கள். ஜனதொகையில் 15% ஒவ்வொரு தலைமுறையிலும் காணாமல் போகும். அதே சமயம் இந்த தலைமுறையில் 2 கோடியாக இருக்கும் பிகாரிகள் அடுத்த தலைமுறையில் 3.5 கோடியாக இருப்பார்கள். அத்தனை பேர் பிகாரிலும், உபியிலும் எப்படி வசிக்க முடியும்? அதனால் தான் நாடு, முழுக்க பரவுகிறார்கள். தென்னகத்தை நோக்கி பிரியமாக படையெடுக்கிறார்கள்.

இதனால் தான் தென்மாநிலங்களில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டு பீகார், உபி என வடமாநில தொழிலாளிகளை இறக்குமதி செய்யும் நிலை உருவாகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தேசிய மொழி இந்தியாகவும், அகிலேஷ் சிங் யாதவின் பேரன் தமிழக முதல்வராகவும் இருக்கலாம். தமிழை கேட்கவேண்டுமெனில் எங்காவது மியூசியத்தில் போனால் ஒலிப்பதிவுகளை வைத்திருப்பார்கள் கேட்டுகொள்ளலாம்.

இந்த அவலநிலை எப்படி உருவானது, ஏன் உருவானது?

1970 களில் தான் இந்த குடும்பக்கட்டுப்பாடு திட்டம் இந்திரா காந்தி அரசால் கொன்டுவரப்பட்டது.

"நாம் இருவர் நமக்கு மூவர்" எனதான் அப்போது ஆரம்பித்தார்கள். இப்போது அது "நாம் இருவர். நமக்கு ஒருவர்" என மாறியுள்ளது. இனி "நாம் இருவர். நமக்கெதுக்கு இன்னொருவர்" என மாறினாலும் மாறலாம்.

தமிழக கட்சிகள் மொழியுரிமையை பேசினாலும், ஜனத்தொகை கட்டுப்பாடு எனும் நாசகர விசயத்தில் மத்திய அரசு "போடு தோப்புகரணம்" என்றால் "எண்ணிக்க" என சொல்லும் படித்தான் நடந்து கொண்டுள்ளன. சத்துணவு ஆயாக்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷனுக்கு ஆள்பிடிக்க எல்லாம் டார்கெட் வைத்து அவர்களில் பலர் ஆள் கிடைக்காமல் தாமே ஆபரேசன் செய்து கொண்ட கதை எல்லாம் நடந்ததுண்டு. குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசனுக்கு 500 ரூபாய் பணம், மஞ்சள் பையில் ஐந்து கிலோ அரிசி என எல்லாம் கொடுத்த கதை 80களில் வளர்ந்த பலரும் அறியலாம்.

இப்படிப்பட்ட நாசகரமான குடும்பக்கட்டுப்பாட்டு திட்டம் ஒரே தலைமுறையில் தமிழக ஜனத்தொகை வளர்ச்சி விகிதத்தை நெகட்டிவுக்கு கொண்டு வந்து விட்டது. எத்தனையோ தமிழ்ச் சாதிகளில் கல்யாணம் செய்ய பெண் இல்லை.  ஒரு குறிப்பிட்ட சாதியில் பெண் கிடைக்காத பையன்கள் படும் அவதியை முன்பு எழுதியிருந்தார். இந்த அவலத்துடன் ஆணாதிக்கமும் சேர்ந்து பெண் குழந்தைகளை கருவிலேயே அபார்ட் செய்து, பையன்களை மட்டும் பெற்றுக்கொள்ள வைத்து ஆண்-பெண் விகிதமும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

இதுமட்டுமின்றி ஜனத்தொகை குறைந்தால் நாடாளுமன்றத்தில் நமக்கான சீட்டுகளில் எண்ணிக்கை குறைந்து தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவமும் குறைந்துவிடும். மாநிலங்களுக்கு ஒதுக்கபடும் நிதியும் குறையும்.

ஜீவாதாரமான இந்தப் பிரச்சனையை எந்த தமிழக அரசியல்கட்சியும் ஏனோ பேசுவதே இல்லை. அவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே தெரியவில்லையா அல்லது சோஷலிச போர்வையில் கொண்டு வரப்படும் "ஜனத்தொகை கட்டுப்பாட்டு சூழ்ச்சியை" அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா என தெரியவில்லை.

இனியாகிலும் விழித்துக்கொள்வோம்....அதிக அளவில் குழந்தைகளை பெறுவோம். ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது 2 குழந்தைகளையாவது பெறுவது என உறுதி எடுக்கவேண்டும். இல்லையெனில் அண்ணன்/தம்பி, அக்கா/தங்கை, மாமா/சித்தப்பா/அத்தை போன்ற உறவுகள் எல்லாமே அழிந்துவிடும்.

பிள்ளைகள் செல்வங்கள். அவர்கள் சுமைகள் அல்ல.

விழிப்புடன் இல்லையெனில் மொழியும், இனமும், நாடும் அழிந்துவிடும்."
#ப்யாரீப்ரியன்..

- நன்றி:நியண்டர் செல்வன்