Saturday 4 February 2017

வரலாற்று மரபுநடை(HERITAGE WALK)-அத்திமுகம்

வரலாற்று சின்னங்களையும்,
வரலாற்று தடயங்களையும், அழிவின் விளிம்பிலிருந்து
காப்பாற்றி ,பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும்,
பள்ளிமாணவர்கள், பொதுமக்கள், வரலாற்று ஆர்வலர், என அனைவரிடமும் வரலாற்றின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு அனைவரையும் ஒன்றிணைத்து மாவட்டத்தின் 2 வது
மரபு நடையை (Heritage Walk) மேற்கொள்ள இருக்கிறோம்.
இந்த மரபு நடையை (Heritage Walk) அறம் இலக்கிய அமைப்பும் மற்றும் ஒசூர் மக்கள் சங்கமும் (THE PEOPLES SOCIETY OF HOSUR) இணைந்து நடத்தயிருக்கிறோம்.
அத்திமுகம் மரபு நடைப்பயணம்
நாள்; 12.02.17 ஞாயிற்றுக்கிழமை
நேரம்-காலை 9 மணி
இடம்-ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானம்
வரலாற்று ஆய்வாளர்கள்
வரலாற்று ஆர்வலர்கள்
பள்ளி மாணவ,மாணவிகள்
ஓசூர் பொது மக்கள்
அத்திமுகம் பொதுமக்கள்
வரலாற்றின் மீது ஆர்வமுள்ள
அனைவரும் கலந்து கொள்ள
அழைக்கிறோம் .
வாருங்கள்
வரலாற்றை நேசிப்போம்
வரலாற்றை வாசிப்போம்
வரலாற்றை பாதுகாப்போம்..
தொடர்புக்கு
அறம்கிருஷ்ணன்-9578468122
இராசு (அறம் )-9443598816
பிரசாத்( TPSOH )- 9894755315
ப்யாரீப்ரியன் (அறம்)-8124481600
சரவணன்( TPSOH )-9894156802
மஞ்சுநாத்(அறம்) -9750980795
ஜெகன் (TPSOH )-9787357054

கடல் ஆமைகளின் ரகசியம்

ஆமை சொல்லும் இரகசியம் !.
#ப்யாரீப்ரியன் பகிர்வு ..
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில்
போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?
தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள்
நிறைய.
கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல
இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!
மத்திய
தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை
அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்
மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில்
ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.
உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,
கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்
மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.
கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.
சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்
இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்
பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்
அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.
போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்
உண்மை!
கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன்
தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ்
கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட
வழித்தடமும் ஒன்றுதான்!
ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க
இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும்
ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம்
தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.

விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம்
உண்டு. தான் பிறந்த
இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.
தமிழ்கத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. இதில்
பல ரகசியங்கள் இருக்கும் போல!...
#ப்யாரீப்ரியன் பகிர்வு..

சந்திர கலை

சந்திரகலை என்றால் என்ன?
இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.
'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.
நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .
இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.

Friday 3 February 2017

புராண காலத்தின் விமானம்...

இராமாயணத்தில் இராவணன் பயன்படுத்தியது எந்த வகை விமானம்.?
#ப்யாரீப்ரியனின் தமிழர் சிறப்பு பகிர்வு..
என்ன 1500 வருடங்களுக்கு முன்பு விமான ஓடுதளமா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?
அருகில் இருக்கும் படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். அந்த பெரிய மலைச் சிகரங்கள் அழகாக தட்டி, தட்டையாக்கி விமானம் தரையிறங்கத் தேவையான நீளம், அகலம் என்று மிகத் தெளிவாக ஒரு விமான ஓடுதளத்தையே உருவாக்கியிருக்கிறார்கள்.
இது தானாக உருவானதல்ல என்று புவியியல் ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள். அப்படியானால் யார் இதனைச் செய்திருப்பார்கள்? இங்கே வாழ்ந்த பண்டைய மக்களா? எதற்காக செய்தார்கள்? அவர்கள் கடவுள் (வேற்றுக்கிரகவாசிகள்) இங்கே தரையிரங்கியிருப்பாரோ? ஒருவேளை அவர்கள்தான் இந்த விமான ஓடுதளத்தை நிறுவியிருப்பார்களோ? அப்படியானால் உலகின் பழமையான விமான ஓடுதளம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
அப்படியானால் விமானம் கண்டுபிடிப்பை பற்றிய நமது வரலாறு மாற்றியமைக்கப்படவேண்டும். ஏனெனில் விமான ஓடுதளம் விமானத்திற்காகத்தானே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.
பண்டைய காலத்திலேயே விமானங்கள் பற்றியச் செய்திகளை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை இங்கே தெரியப்படுத்த விரும்புகிறேன். தென் அமெரிக்காவில் 2” நீளம் கொண்ட தங்கத்தால் ஆன சிலப் பொருட்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். இதன் சரியான காலத்தைக் கணிக்க முடியாவிட்டாலும் குறைந்தது 1000 வருடங்களுக்கு மேல் பழமையானது என்பது மட்டும் உறுதி.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவைகளில் சில பார்ப்பதற்கு இன்றைய நவீன விமானங்களின் உருவத்துடன் ஒத்துப்போகிறது. விமான தொழில்நுட்பவியலாளர்கள் 1997ல் இதன் அளவுகளை அப்படியே பெரிதாக்கி செயல்பாடுகளை ஆராய்ந்தார்கள். எஞ்சின் மற்றும் ஏனைய அத்தியாவசியப்பொருட்கள் இணைத்தல் இது விமானத்திற்கான சரியான வடிவம்தான் என்று கூறினார்கள்.
சில மறுப்பாளர்கள் இது விமானத்தின் வடிவம் அல்ல, பறவை அல்லது மீனின் வடிவம் என்று கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இதனை ஏற்க மறுப்பவர்களும் வாயடைத்துபோகும் ஆதாரம் தான் எகிப்தில் கிடைத்தது.
எகிப்தில் உள்ள ஒரு கோவில் சுவரில் இருக்கும் கல்வெட்டில் ஹெலிகாப்டர், போர்விமானம், உளவுவிமானம், நீர்முழுகிக் கப்பல், பறக்கும் தட்டு என்று பார்ப்பவர்களுக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றிவிடும் அளவில் தெளிவாக செதுக்கியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு எப்படி விமானங்கள் பற்றிய அறிவு கிடைத்திருக்கும்? என்று யோசிப்பவர்களுக்கு இங்கே ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
ராமாயணகாலத்திலேயே (கிட்டத்தட்ட 17,000 வருடங்களுக்கு முன்பு) விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்று ராமாயணத்தில் பார்த்தோம். அன்றைய இலங்கையை ஆண்ட இராவணன் என்ற தமிழ் மன்னன் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர், இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்கோ, சீதையுடன் இலங்கைக்கு திரும்பிசெல்வதற்கோ இராவணன் எந்த சிரமமும் படவில்லை. ஆகாய மார்க்கமாக வந்து சென்றுள்ளார்.
அதற்காக அவர் பயன்படுத்திய விமானத்தை நினைக்கும் இடத்தில் தரையிறக்க முடியும், எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் செங்குத்தாக மேலே ஏறி பறக்க செய்ய முடியும்.
உண்மையில் அந்தவகைத் தொழில்நுட்பம் இன்றுவரை நம்மால் கண்டறியப்படாத ஒன்று.

அப்படியானால் இராவணன் எவ்வளவு பெரிய அறிவியலாளராக இருந்திருக்க வேண்டும்? அந்தத் தகவலை ஏன் வரலாறு ஏந்திவரவில்லை? எந்த இங்கேதான் நம் மக்கள் கோட்டைவிட்டனர், இராவணனுக்கு பத்துத்தலை என்பதை எண்களின் அடிப்படையில் பக்கவாட்டில் பத்துதலைகளை அடுக்கி பார்த்து இராவணனை அரக்கனாக்கிவிட்டோம்
.உண்மையில் அந்த உவமைக்கு அதுதான் அர்த்தமா?
உதாரணமாக அதிகம் பேசும் ஒருபெண்ணை “இவளுக்கு வாய்நீளம்” என்பார்கள், உண்மையில் அந்தப் பெண்ணின் வாய் நீளமாக இருக்காது அவள் அதிகம் பேசுகிறாள் என்பதையே குறிக்கவே அப்படி ஒரு உவமைச் சொல். அதேபோல பத்துத்தலை என்பது பத்துபேரின் சிந்தனைத் திறனை கொண்டவன் அல்லது சாதாரண மனிதனை போல பத்துமடங்கு புத்திசாலி என்பதை குறிக்கலாமல்லவா? அப்படியானால் இராவணனால் இப்படி ஒரு விமானத்தை கண்டிப்பாக செய்திருக்க முடியும். இங்கே வரலாற்றில் பிழையில்லை நம் புரிதலில்தான் பிரச்சனை.
பண்டைய விமானம் பற்றிய செய்தியே பலருக்கு நம்பமுடியாமல் இருக்கும், அடுத்து நாம் பார்க்கப்போகும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளிவீரர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்.
அந்த படத்தில் காட்டப்பட்டுள்ள சிற்பங்கள் அனைத்தும் இன்று நேற்று செதுக்கப்பட்டதல்ல, மிகவும் பழமையானது.
நவீன அறிவியலுக்கும் இதற்கும் வெகுதூரம் அப்படி இருக்க இவ்வளவுகச்சிதமாக விண்வெளிவீரர் உருவத்தை எப்படி இவர்களால் உருவாக்கியிருக்கமுடியும். ப்யாரீ ப்ரியனின் கேள்வி..

தலைக்கவசம், உடல்கவசம், முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க், பின்புறம் ஆக்சிஜன் சிலிண்டர் என்று மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய விண்வெளிவீரர்களின் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கவும்.
மாயன் நாகரிக மக்களிடம் மனிதன் விண்வெளியில் பயணம் செய்வதற்கான தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் சிற்பக்கலையில் அதனைக் காணமுடிகிறது. ஒரு மனிதன் விண்வெளி ஓடத்தில் அமர்ந்திருப்பதைப் போல செதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இறக்கையுடன் கூடிய மனிதர்கள் என்று புராணக்கதைகளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிருஸ்தவர்கள் அவர்களை இறைத்தூதர்கள் அல்லது தேவதைகள் என்று அழைக்கிறார்கள்.
இயற்கையாக அப்படியான உடலமைப்பு சாத்தியமில்லை. ஆனால் செயற்கையில் இறகுடன் கூடிய சிறிய விமானத்தை பொருத்தி பறக்கமுடியும் (Jetman). அந்த தேவதைகள் (வேற்றுக்கிரகவாசிகள்) இப்படியாக ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?

விஷ்ணு அவரது வாகனமான கழுகில் ஏறிப் பயணம் செய்வாராம், உண்மையில் கழுகு மனிதனை சுமந்துகொண்டு பறந்து செல்லமுடியுமா? என்றால் அதற்கு கண்டிப்பாக சாத்தியம் இல்லை.
ஆனால் மனிதன் பயணிக்கும் விமானம் கழுகைப் போன்ற வடிவத்தில் இருக்கலாம் அல்லவா? அந்தப் படத்தில் இருப்பது ஜெர்மனின் நாசி உளவு விமானம், கீழிருந்து பார்ப்பவர்களுக்கு கழுகு போல் தோற்றமளிக்கும். பறந்துவந்தவர் எல்லா தொழில்நுட்பமும் அறிந்த கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசியாக இருந்தால் அவரால் இதனை உருவாக்கியிருக்க முடியும்.
சரி நாம் நாஸ்காவுக்கு வருவோம், இந்த ஓடுதளங்களின் மர்மமே தலையை பிய்த்துகொள்ளும் அளவிற்கு இருக்கும் பொது அதனையே தூக்கிசாப்பிடும் அளவில் இருக்கிறது அங்கு காணப்படும் மிக நீண்ட கோடுகள்.
நிறைய சந்தேகங்கள் நிறைந்த பதிவு இது.எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பதிந்துள்ளேன்.நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் முடிவு...