Saturday 31 October 2015

புலிச்சின்ன கல்வெட்டு

சோழர்களின் புலி சின்னம்
வாணகோ அரையரின் மகளும்
மூன்றாம் இராசராச சோழனுடைய (1216-1256)
பட்டத்தரசியும்மான சோழனை முழுதுடையாள்
கூத்தாடும் தேவர் நாச்சியார் என்பவரின் பெயருக்கு முன்னால் இந்த புலி சின்னம் கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரன் கோயிலின் கருவறையின் வடக்கு புறம் நான்முகனின் கீழ் குமுதப்பட்டையில் உள்ளது.
தமிழ் நாட்டில் வேறு எங்கேனும் சோழர்களின் புலி இலாஞ்சனை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா?
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீ வாணகோவரையர் மகளார் கூத்தாடுந்தேவர் னாச்சியார்
சோழனை முழுதுமுடை
யார் பெண்னை நாயனாற்கு திரிநுந்தா விளக்குக்கு குடுத்த
பசு பத்து ரிஷப க..."
கல்வெட்டு விளக்கம்
கல்வெட்டின் துவக்கத்தில் சோழர்களின் புலி சின்னம்
பொறிக்கப்பட்டுள்ளன .வாணகோவரையரின் மகளும்
சோழனை முழுதும் உடையவருமான கூத்தாடுந் தேவர் நாச்சியார் பெண்னை நாயனாற்கு ஓரு நுந்தா விளக்குக்கு
எரிக்க பத்து பசுவும், ஓரு எருதும் தானமாக கொடுத்துள்ளார்.
இக்கோயிலில் மூன்றாம் இராசராச சோழனுடைய(1216-1256)
கல்வெட்டுகளும்
மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய (1178-1218) கல்வெட்டுகளும் நிறைய காணப்படுகின்றன.
ஆதலால் இது மூன்றாம் இராசராசனின் பட்டத்தரசியாகதான் இருக்க முடியும். அதுவும் சோழனை முழுதுடையாள் என்ற வாசகம் வருவதால் கண்டிப்பாக இராசராசனின் பட்டத்தரசிதான்.
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment