Wednesday 2 December 2020

தமிழகநதிகள்,

 #தமிழகநதிகள்??  1.கடலூர் மாவட்டம்  a)தென்பெண்ணை, b)கெடிலம், c)வராகநதி, d)மலட்டாறு, e)பரவனாறு,                          f)வெள்ளாறு, g)கோமுகி ஆறு, h)மணிமுக்தாறு, i)ஓங்கூர்  2.விழுப்புரம் மாவட்டம்  a)கோமுகி ஆறு, b)மலட்டாறு, c)மணிமுத்தாறு  3.காஞ்சிபுரம் மாவட்டம்  a)அடையாறு, b)செய்யாறு, c)பாலாறு, d)வராகநதி, e)தென்பெண்ணை,                   f)பரவனாறு     4.திருவண்ணாமலை மாவட்டம்  a)தென்பெண்ணை, b)செய்யாறு, c)வராகநதி, e)வெள்ளாறு  5.திருவள்ளூர் மாவட்டம்  a)கூவம், b)கொஸ்தலையாறு, c)ஆரணியாறு, d)பாலாறு  6.கரூர் மாவட்டம்  a)அமராவதி, b)பொன்னை  7.திருச்சி மாவட்டம்  a)காவிரி, b)கொள்ளிடம், c)பொன்னை, d)பாம்பாறு  8.பெரம்பலூர் மாவட்டம்  a)கொள்ளிடம்  9.தஞ்சாவூர் மாவட்டம்  a)காவிரி, b)வெட்டாறு, c)வெண்ணாறு, d)கொள்ளிடம்,  e)அக்கினி ஆறு  10.சிவகங்கை மாவட்டம்  a)வைகையாறு, b)பாம்பாறு, c)குண்டாறு, d)கிருதமல் ஆறு,  11.திருவாரூர் மாவட்டம்  a)காவிரி, b)வெண்ணாறு, c)பாமணியாறு, d)குடமுருட்டி  12.நாகப்பட்டினம் மாவட்டம்  a)காவிரி, b)வெண்ணாறு  13.தூத்துக்குடி மாவட்டம்  a)ஜம்பு நதி, b)மணிமுத்தாறு, c)தாமிரபரணி, d)குண்டாறு,       e)கிருதமல் ஆறு, d)கல்லாறு, e)கோராம்பள்ளம் ஆறு  14.தேனி மாவட்டம்  a)வைகையாறு, b)சுருளியாறு, c)தேனி ஆறு, d)வரட்டாறு, e)வைரவனாறு  15.கோயம்புத்தூர் மாவட்டம்  a)சிறுவாணி, b)அமராவதி, c)பவானி, d)நொய்யலாறு, e)பாம்பாறு f)கெளசிகா நதி  16.திருநெல்வேலி மாவட்டம்  a)தாமிரபரணி, b)கடனா நதி, c)சிற்றாறு, d)இராமநதி, e)மணிமுத்தாறு, f)பச்சை ஆறு, g)கறுப்பா நதி, h)குண்டாறு, i)நம்பியாறு, k)கொடுமுடிஆறு,   l)அனுமாநதி, m)கருமேனியாறு, n)கரமணை ஆறு ~~~~~|~~~~~~~~ தாமிரபரணி துணை ஆறுகள் (சேர்வலாறு. மணிமுத்தாறு. கடனா ஆறு. பச்சையாறு. சிற்றாறு. பேயனாறு. நாகமலையாறு, காட்டாறு.சோம்பனாறு,கௌதலையாறு. உள்ளாறு.பாம்பனாறு. காரையாறு.நம்பியாறு கோதையாறு. கோம்பையாறு. குண்டாறு = இவை அனைத்தும் தாமிரபரணியின் ப்ரியமான துணையாறுகள் )  17.மதுரை மாவட்டம்  a)பெரியாறு, b)வைகையாறு, d)குண்டாறு, e)கிருதமல் ஆறு,   f)சுள்ளி ஆறு, g)வைரவனாறு, h)தேனியாறு, i)வாட்டாறு, j)நாகலாறு, k)வராகநதி, l)மஞ்சள் ஆறு, m)மருதாநதி, n)சிறுமலையாறு, o)சுத்தி ஆறு, p)உப்பு ஆறு  18.திண்டுக்கல் மாவட்டம்  a)பரப்பலாறு, b)வரதம்மா நதி, c)மருதா நதி, d)சண்முகாநதி e)நங்கட்சியாறு, f)குடகனாறு, g)குதிரையாறு, h)பாலாறு, i)புராந்தளையாறு,                      j)பொன்னை, k)பாம்பாறு, l)மஞ்சள் ஆறு  19.கன்னியாகுமரி மாவட்டம்  a)கோதையாறு, b)பறளியாறு, c)பழையாறு, d)நெய்யாறு, e)வள்ளியாறு  20.இராமநாதபுரம் மாவட்டம்  a)குண்டாறு, b)கிருதமல் ஆறு, C)வைகை, d)பாம்பாறு,          e)கோட்டகரையாறு, F)உத்திரகோசம் மங்கை ஆறு  21.தருமபுரி மாவட்டம்  a)காவிரி, b)தொப்பையாறு, c)தென்பெண்ணை    22.சேலம் மாவட்டம்  a)காவிரி, b)வசிட்டாநதி, c)வெள்ளாறு  23.விருதுநகர் மாவட்டம்  a)கௌசிகாறு, b)வைப்பாறு, c)குண்டாறு, d)அர்ஜுனா நதி, e)கிருதமல் ஆறு ~~மக்களால் காலகாலமாக பயன்பாட்டிவ் ப்ரியமான இருத்த மேற்கண்ட ஆறுகளில் தற்போது எவையெவை உள்ளன/இல்லை. என்பதை அந்தந்த மாவட்டத்தில் வசிப்போர்  அறிந்து கொள்ளவும்.. #ப்யாரீப்ரியன்.மீள் .. தொகுப்பு...

Sunday 23 August 2020

Love Dictionary

 அகராதி...

#பால்யகாதலில் - பக்குவமின்மை

#பள்ளிக்காதலில் - பருவமின்மை..

#பருவக்காதலில் - இனக்கவர்ச்சி..

#பார்த்தகாதல் - சுவாரசியம் குறைந்தும்..

#பார்க்காமலேகாதல் - பார்த்து உண்மையை புரியவைக்கும் வரையிலும்..

#சொல்லியகாதல் -நிறைவேறியும்

#சொல்லாதகாதல் -நிறைவேறாமலும்..

#ஊர்சுற்றும்காதலில் - ஊரார் தூற்றலிலும்

#உண்மைக்காதல் -அழியாமலும்

#உரிமையானகாதல் - உறவுகளை மேம்படவைப்பதிலும்.

#தைரியகாதல் - நிச்சயதிருமணத்திலும்

#தில்லாலங்கடிகாதல் - ஒருமுறை அடையும் வரையிலும்.

#திருட்டுகாதல் - அடுத்தவர் அறியும் வரையிலும்..

#இருட்டுகாதல் - காமம் அடங்கும் வரையிலும்..

#கடுதாசிகாதல் - பதில் கடிதம் வராத வரையிலும்..

#குறுஞ்செய்திக்காதல் - மற்றவர் பார்க்காத வரையிலும்..

#செல்போன்காதல் - அவரைவிட உயர்ந்தவர் கிடைக்கும் வரையிலும்..

#வலைதளகாதல் - புதிய அறிமுகம் கிடைக்கும் வரையிலும்..

#விலைமாதர் காதல் - பணம்தீரும் வரையிலும்..

#வேலைக்காரிக்காதல் - மனைவிக்கு தெரியாமலும்

#வேலைசெய்யுமிடக்காதல் - வேலையின் ஓய்வு நேரங்களிலும்..

#சினிமாகாதல் - கனவுலகின் ஆசையாலும்

#கவிதைகாதல் - கவிஞராகும் வரையிலும்..

#காவியக்காதல் - காதலில் வெற்றி பெறும் வரையிலும்..

#கல்யாணகாதல் - திருமணம் முடியும் வரையிலும்..

#கணவன்மனைவிகாதல் -கல்லறைக்கு போகும் வரையிலும்..

#ஒருதலைக்காதல் - மீண்டும் துணைக்கான வாய்ப்பு கிடைக்கும் வரையிலும்..

#காலம்கடந்தகாதல் - பயன்தந்து இனிக்கும் வரையிலும்..

#கடைசிகாலக்காதல் - உறவின் உன்னதத்தை எண்ணும் போதும்.

#கற்பனைக்காதல் - உண்மையாக மாறும் வரையிலும்.. 

#கண்மூடிக்காதல் - தகுதியை உணரும் வரையிலும்..

கண்டு...கண்ட பின் #அன்பினால் உண்மையாக உணர்வு பூர்வமாக உணருவதே..

#காதல்

அன்புடன்...

#ப்யாரீப்ரியன்...

Wednesday 19 August 2020

போர் நுணுக்கங்களை அறிவோம்..

 போர்நுணுக்கம்-2 .


வரலாற்றில் மன்னர்கள் தங்களுடன் போர்புரிய வரும் எதிரிநாட்டு வீரர்களை அழிக்க எவற்றை எல்லாம் எப்படியெல்லாம் ப்ரியமாக பயன்படுத்தி வந்தனர் என்பதை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இளைய தலைமுறையினரும் அறியவே இப்பதிவு

(இணையத்தொகுப்பு)...


#தூண்டில்/ பெருங்கொக்கு- கொக்கு போன்று இதன் நுனியில் ஒரு கொளுக்கி இருக்கும். இதன் மூலம் அகழியினுள் உள்ள எந்த பொருளையும் இலகுவாக வெளியில் தூக்கி வீசி விடலாம்.


#ஆண்டலையடுப்பு - 


இது ஆந்தையின் தலை போன்ற அமைப்புள்ள பாத்திரமாகும்.


→ காய்பொன் உலை- உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு, செப்புக் குழம்பு


→ பாகடு குழிசி- சூடான தேன் கொண்ட பாத்திரம்.


→ பரிவுறு வெந்நெய்- சூடான எண்ணெய் கொண்ட பாத்திரம்.


→ காடி/ மிடா - கீழே உள்ளதைப் போன்ற ஓர் பெரிய அடுப்பில்தான் மேலேயுள்ள மூன்றும் காச்சப்படும்.


#விதப்பு- இதிலிருந்துதான் எதிரி மீது எண்ணெய் போன்றவை ஊறப்படும்.


#கவண்/ இடங்கணிப்பொறி (இடம் + கணி + பொறி ) :


#கல்லிடுகூடை- எதிரிகள் மீது வீசுவதற்கு கோட்டை மதில் மேல் வைக்கப்பட்டிருக்கும் எறிகற்கள் கொண்ட கூடை.


#தொடக்கு/ நூக்கியெறி பொறி - இதன் நுனியில் ஒரு கயிறு/ சங்கிலி இருக்கும்.இதன் மூலம் எதிரி வீரனின் கழுத்தினுட் செருகி அவனைப் பிடித்து கழுத்தில் பிடித்து தூக்கி கொன்று வீசி விடலாம்.


#கவை/ நெருக்குமர நிலை- மதில் மீது ஏறுவோரை மறித்துத் தள்ளும் ஆயுதமிது. மிக நீண்ட கைப்பிடி கொண்டது.


#புதை- அம்புக்கட்டு


#ஏவறை/ சூட்டிஞ்சி - சிறுசிறு துளைப் பொந்துகள் போலிருக்கும் இவற்றிலிருந்து எதிரி நோக்கி அம்பு எய்யப்படும்.


#ஆரல்/ குருவித்தலை - மதிற்சுவரின் மேல் மறைப்பு


#ஞாயில்/ நாயில்/ ஞாஞ்சில்/ ஏப்புழை - கோட்டை சுவரில் உள்ள இரு குருவித்தலைகளுக்கு இடையிலான இடம். இங்கிருந்து எதிரி மீது தாக்குதல் தொடுப்பார்கள்.


#கைப்பெயர்ஊசி- எந்தப்பக்கம் குத்தினாலும் சங்குதான். கோட்டை மதிலின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அல்லது மதிலில் இருந்து எறியப்படும்…..ஒருவேளை எதிரிகள் மதில் மேல் எறி மதிலின் உச்சியைப்பிடிப்பவர் இதன் மேல் கை வைத்தால் இது அவர்களின் கையினைக் கிழித்துவிடும்.


#சென்றெறிசிரல்/ கையம்பு - இது கையால் எறியும் ஆயுதம்தான்.


#பணை- பருமையான மூங்கில்


#எழுவுஞ்சீப்பு - சிறைக் கதவு போன்று இரும்பால் செய்யப்பட்ட ஓர் வாயிற்கதவு. அவ்வளவு இலகுவில் இடித்து உடைக்க இயலாதது. ஐயவித்துலாம் கீழே இறக்கப்பட்டால் இது மேலே எழும்பும் ; ஐயவித்துலாம் மேலே தூக்கபட்டால் இது கீழே இறங்கும்.(கோட்டையின் பாதுகாப்பிற்காகத்தான்)


#கவர்தடி- இரு பக்கமும் கூரான எறிபடை… எறியவும் செய்யலாம்; குத்தவும் செய்யலாம்.


#கழு/ கழுக்கோல்/ யானைத்தடை -கோட்டைக்கு முன்னால் எதிரிப் படைகளின் மதிற்போர்க்கருவிகள், போரானைகள் உள்நுழையாமல் இருக்க வைக்கப்பட்டிருக்கும்.


#எந்திரவில் / வளைவிற்பொறி/ வேலுமிழ்ப் பொறி/ அம்புமிழ்ப் பொறி:

இதில் வைத்து எதிரி நோக்கி எய்யப்படும் எறிபடையின் பெயர் நாளிகம்


#ஐயவித்துலாம் /ஐயவி- கோட்டை வாயிலையும் அகழி தொடக்கத்தையும் இணைக்கும் ஓர் தூக்கு பாலம்.


#வல்லயம் - கோட்டையின் மதிலில் இருந்துகொண்டு கீழே உள்ள வீரரை குத்த பயன்படும் ஈட்டி. முனையில் கூரிய இரும்புள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஈட்டி ஆய்தம்.


#தாமணி-பொருட்களைக்கட்டி வைக்க உதவும் கயிறு.


#நாராசம் -இது ஒரு இரும்பால் ஆன அம்பு.& தீயம்பு..


#சலாகை - இது ஒரு இரும்பால் ஆன சிறு அம்பு.


#மிளை/ காவல்காடு - கோட்டை அகழிக்கு முன்னுள்ள செயற்கைக் காடு.


இங்கு தோட்டி எனப்படும் இரும்பு முட்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். காவல்காட்டினுள் வேலியாக நொச்சிமரங்களும் முள்வேலிகளும் அமைந்திருந்தன. இதனை வாழ்முள்வேலி,இடுமுள்வேலி எனப் பகுத்து காட்டரணைப் பலப்படுத்தியுள்ளனர்.


#வாழ்முள்வேலி - என்பது முள் செடிகளையும் மரங்களையும் வளர்த்து அவற்றால் ஆக்கிய வேலியைக் குறிப்பது. 


#இடுமுள்வேலி - முள்ளை வெட்டிக்கொண்டு வந்து பிற இடத்தில் இடப்படும் வேலி எனப்படும்.

காட்டரணை முற்றுகையிடும் பகைவர்களின் உயிரைக் கவரும் வகையில் பல நிறம் கொண்ட தவளை, பூராண், நண்டு, கம்பளிப்புழு, பல்லி, பூதிப்புழு, கவுதாரி ஆகியவற்றுடன் கீழாநெல்லியின் பட்டை, இலை, மலர், கனி, வேர், தண்ணீர்முட்டான் கிழங்கு, சேங்கொட்டை மரம், எருமையாட்டம் கொடிகளின் சாற்றுடன் சோர்த்துப் புகையை உருவாக்கினால் அப்புகை பகைவர்களின் திறனை அழித்து அவர்களின் கண்களைக் குரடாக்குவதுடன் பகைவர்களைக் கொல்லும் திறன் உள்ளது.—


அகழி/ கிடங்கு /உடுவை/ அகப்பா/ கயம்/ காடி/ உடு/ ஓடை/ இனைடயம் /உவளகம்/ நீரரண் / அகப்பா/ கிடங்கில்- (moat) கோட்டையைச் சுற்றியுள்ள நீரரண்.


எதிரிகள் அகழியில் உள்ள நீரை அருந்தும் பொழுது அவர்களை அழிக்கும் வகையில் அவர்கள் அறியாவண்ணம் சேங்கொட்டை, அரங்கன்,நாயுருவி, மருதமரம் ஆகியவற்றின் மலர்களுடன் ஏலமரம், தானிமரம், குங்கிலியம், ஆலாலம் ஆகியவற்றின் சாறும் செம்மறியாட்டின் குருதியுடன் மக்களின் குருதியையும் சேர்த்து நன்கு அரைத்து அதனைப் பிண்ணாக்குடன் நீரில் கலந்து விட்டால் இந்நிரை அருந்துபவனும் தொடுபவனும் உடனே இறந்துவிடுவான். 


#செய்கொள்ளி - கொல்லனால் காய்ச்சப்பட்ட செந்தீயான இரும்பு


#சுறட்டுக்கோல்/ தொரட்டி- இழுத்து விழுத்தும் கோல்.


#சுண்டுவில்


#கூர்ந்தரி நுண்ணூல்- தொட்ட கையை அறுக்கும் நுண்ணூல்= மாஞ்சா நூல்


#கற்பொறி - அவிழ்த்துவிட்டால் கீழே வந்து வீழ்ந்து எதிரியைத் தாக்கும்.. மீண்டும் இதனை சுழற்றி எடுத்துப் பயன்படுத்தலாம்.


#அடிப்பனை- கோட்டை மதிலில் இருந்து எதிரிகள் மீது இதனை எறிவார்கள்.


#விடுசகடம்- உருட்டி விடப் படும் தீச்சக்கரம


#முட்செடி- இக்கொடி கோட்டை மதில் மீது படரவிடப்பட்டிருக்கும்.


#நச்சுக்கொடி- இக்கொடி கோட்டை மதில் மீது படரவிடப்பட்டிருக்கும்.


#பதணம் /பரிகை /கற்பு / மதிலுண் மேடை/ அகப்பா /மஞ்சிவர் - கோட்டை மதிலில் நடக்கும்படி ஏற்படுத்தப்பட்ட மேடு.. இங்கு நிண்டபடி எதிரி மீது போர்புரிவார்கள்


#உக்கடம் - கோட்டை உயரத்திலிருந்து எதிரி இடராளிகளை காணும்படி உக்கடம் (watch tower) எனும் கட்டுமானம்.


#நிலவரண்


காட்டரணையும் நீரரணையும் கடந்து வெற்றி பெற்ற மன்னர்கள் அதனை அடுத்து தண்டை நிலப்பகுதியில் அமைந்துள்;ள நிலவரணை முற்றுகையிடுகின்றான். “நிலவரண் இருநிலைகளில் அமைந்திருக்கும். பகைவர்கள் புறமதிலைப் பற்றாமை பொருட்டு அதன் புறத்தேயுள்;ள வெள்ளிடை நிலமும் பகைவர் முற்றுகை நீடித்திருக்கும் போது அகத்தாருக்கு வேண்டும் உணவுப்பொருள்களைப் பயிர் செய்யும் வகையில் மதிலின் உட்புறமாக விடப்படும் தண்டை நிலம் நிலவரணாகும்


அகழிக்கும் மதிலுக்கும் இடைப்பட்ட இடமான புறநகரினை நிலவரண் என்பர். இங்கு காவல் வீரர்கள் தம் பாசறையை அமைத்துக் காவல் காட்டினையும் அகழியையும் அழித்துக்கொண்டு வரும் பகைவர்களின் படைகளை எதிர்த்துத் தடுத்து நிறுத்துவர். கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் தத்தம் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றும் கழிவுநீரும், மழைக்காலத்தில் கோட்டையில் இருந்து வெளியேறும் நீரும் அகழியைச் சென்று அடைவதற்கு முன்பாக இந்நிலவரணைக் கடந்து செல்கிறது. கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் இந்நீரை பயிர்செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்வர். இதனால் பகைவர்களின் நீண்ட நாள் முற்றுகையைச் சமாளிக்க இயலும். இத்தகைய சிறப்பிற்குரிய இவ்வரணைப் பாதுகாக்காவிடில் மக்கள் முற்றுகைக்காலங்களில் துயர்பட நேரிடும்.


#முடக்கறை- வாயிலுக்கு மேலுள்ள அம்பு வரும் துளைகள் .


#யாநகம் - ஒரு கயிற்றால் மதிலின் உச்சியில் இருந்து கீழ்நோக்கி இறக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கும். எதிரி வீரர்கள் வந்தால் அவர்கள் மீதிதை அவிழ்த்து விடுவார்கள்.


#சாலம்- தொடக்ககாலத்தில் கோட்டைகளை வெறுங்கல்லால் அன்றி, மரமுஞ் சேர்ந்தே கட்டினர்.


#அட்டாணி/ அட்டாலகம் / இதணம் / மேவறை / அலங்கம் - கோட்டை மதிலுக்கு மேலே ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் காவலரண். உள்ளே இருப்பவருக்கு வெளியே உள்ளவர்கள் தெரியக்கூடியவகையிலும் சிறு துளைகள் கொண்டு இருக்கும் போர்க் காலங்களில் இதன்மூலம் ஈட்டி, வில்லம்பு கொண்டு வெளியே உள்ளவர்களை தாக்க வசதியாக இருக்கும். வெளியில் இருப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்களைக் காண இயலாது என்ன செய்கிறார்கள் என்றும் அறிய இயலாது.


#அட்டாலை / இதண்/ பணவை - அட்டாலகத்தில் காவலுக்கு இருக்கும் வீரனை குறிக்கும் சொல்.


#வாயில் / கௌனி/ ஆத்தானம்/ அரிகூடம்/ கோட்டி- இது கோட்டைக்கான போக்குவரத்து வாசல்.


#ஒலிமுகவாயில்/ ஆசாரவாயில்/ தலைவாயில் - கோட்டையின் முக்கிய வாயில்.


நகரவாயிற் கதவை விட்டு புகும் வழி- புதவு/ புதவம்


நகரவாயிற்றிணையின் பெயர்- அளிந்தம்


நகரவாயிற் படிச்சுறுள்- அத்திகை


கவாடம் - கதவு

சிறுவாயில், பதவு, பூழை


#சுருங்கை/ கற்புழை/ மூடுவழி- கோட்டையிலிருந்து வெளியேறும் இரகசிய வழி.


#சிகரி / துருக்கம்/ அருப்பம்- மலைமேலுள்ள கோட்டை.


#கணையமரம் /துஞ்சுமரம் / தாழக்கோல் - மதிற்கதவுக்கு வலிமையாக உள்வாயிற்படியில் குறுக்கேயிடும் மரம்.


#புழை - புழை என்பது ஒரு கோட்டைக்கு பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு வழியாகும். இது முக்கிய நுழைவுவாயிலில் இருந்து வேறு ஒரு இடத்தில் இருக்கும்.


#பரிசை/ தட்டி - இடைவெளி இல்லாமல் வைரம் ஏறிய மரங்களால் அமைக்கப்பட்டு கோட்டை மதிலில் வைக்கப்பட்டிருக்கும். பகைவர் எய்யும் அம்புகளை இது தாங்கும்.


#நூற்றுவரைக்கொல்லி - ஒரே நேரத்தில் பல பேரை கைலாயம் காண வைக்கலாம்.


#நீர்வாளி- ஏற்பட்ட நெருப்பினை அணைக்க உதவும் நீர் கொண்ட வாளி.


#அரணி/ கடகம்/ பாவை/ பீலி/ புரிசை/ புறம்/ வண்சிறை/ வரணம்/ வரைபடி/ வாடம்/ வேணகை/ தூரியம்/ முத்தகம்/ பெருங்காரம்/ நொச்சி/ பாவை / ஆரம்/ வேலி / அரணம்/ வேதி/ சாலம்/ அல்/ அரணாம்பரம்/ ஓதை - மதில்


கடிமதில் - காவல் மிகுந்திருந்த மதில்

இறைப்புரிசை, நெடுமதில் - மிகவும் உயர்ந்த மதில்

மதிலரண் வகைகள்-


அகன் மதிலரண்

உயர் மதிலரண்

திண் மதிலரண்

அருமதிலரண்.

இவ்வாறு அமைந்த மதிலைப் புறமதில்,இடைமதில், அகமதில் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியிருந்தனர்.


இடைமதில் பகைவர்களின் முற்றுகை நீடித்து இருப்பினும் உள்ளே இருப்போர் உணவிற்கு எவ்விதக் குறையும் இல்லாமல் தமக்கு வேண்டிய உணவினை விளைவித்துக் கொண்டும் வாழும் வகையில் பரந்த நிலப்பரப்பினை உடையது.புறமதில் வளைந்த இடங்களை உடையதாகவும்

அகமதில் என்பதுதன் கடைசி மதிலாகும்

மதிலுக்குள் உள்ள நிலம்- காப்பு

கோட்டைக்குள் நகர்- அகநகர்

திண்ணம்- குறடு, அளிந்தம்

அடிமணை- நிலைக்களம்

மண்டபம்- களம் , தளம்

அரசர் வீதி- பூரியம்

அரசிருக்கை- அரியாசனம், அத்தாணி, வேந்தவை

சித்திரக்கூடம் - தெற்றியம்பலம்

அம்பலம்- மன்றம், பொது அவை, பொதி

அரசரில்லம்- சாலை, மாளிகை, குலம், அரண்மனை, பவனம், கோவில்.

வாரி - சுற்று மதில்

ஓதை/ ஆள்வாரி நிலம்- மதிலைக் காப்பாற்றும் படையினருக்கு மதிலையொட்டினாற் போல் உள்ளசாலை  

உவளகம்- கோட்டையின் உட்பக்கம்.

கோசம் - மதிலுறுப்பு

பெருகாரம்- இது கோட்டையினுள்ளே சுற்றிவரும் பெரியபாதை.

இஞ்சி - பெரும்பாலும் செம்பு புனைந்தியற்றியதாகவும் சிறுபான்மை அரைத்த சாந்திட்டமைத்ததாகவும் பகைவரால் எளிதில் தாக்க முடியாதவாறு திண்ணிதாகக் கட்டப்பட்ட மதில் ஏனை வகை மதில்களிலும் மிக இறுகியிருத்தல் பற்றி இஞ்சி எனப்பட்டது.


#பதப்பாடு - கோட்டையரணுக்கு பாதுக்காப்பாக வெளியே கட்டப்பட்டிருக்கும் மற்றோர் மதில்.


#கொத்தளம்/ தோணி/ குடிஞை - கொத்தளம் என்பது, கோட்டை மதில்களில் இருந்து வெளித் துருந்திக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு ஆகும்.


#கருவிரலூகம்/ குரங்கு- கோடை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் . பெரும்பாலும் தாட்டான் வகை குரங்குளே அங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும். இவை மேலே வரும் எதிரியினைக் கடித்துக் குதறும்.


#கோண்மா - புலி , சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள் கோட்டை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மதிலை தொடுவோரை இவை கவனித்துக் கொள்ளும்.


#முதலை, காராம், விடங்கர்- இவை எல்லாம் அகழிக்குள் இருந்தன.


#கழுகு&கூகை -போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்ல  பயன்படுத்தப்பட்டன


#குடப்பாம்பு/ கத நாகம்- எதிரி வீரர்கள் மீது எறிய குடத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் பாம்புகள்.


#பாவை- உண்மையான வீரர்கள் போன்று செய்யப்பட்ட பொம்மை பொய் வீரர்


#கரும்பொன்னியல் பன்றி: - இரும்பு நிறம் கொண்ட பன்றி- காட்டுப்பன்றி.


இவற்றினை கோட்டைக் கொத்தளங்களில் கட்டி வைத்திருப்பதால் இவை எழுப்பும் ஒலியினைக் கேட்டு எதிரியின் யானைப் படை திணறி ஓடும்.. மேலும் இவற்றிற்கு மேலே எண்ணெய் பூசி நெருப்பினை வைத்து எதிரியினை நோக்கி ஓட விடுவதால் அவை எதிரியினைக் குழப்புவதோடு மட்டுமல்லாமல் அவனின் யானைப்படையினை மிரள வைக்கும். இவ்வாறு பல போர்கள் வரலாற்றில் நடைபெற்றுள்ளன.


#தோற்றமுறு_பேய்களிறு - அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட யானை -

இவ்யானைகளானது மதிலின் பின் புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவை மதிலை கடந்து வருபவர்களை சிதறடிக்கும்.


#துற்றுபெரும் பாம்பு - மலைப்பாம்பு


இது எதிரிகளை அச்சமுறுத்தவும் சில வேளைகளில் அவர்களை விழுங்கவும் செய்திருக்கும்.


#ப்யாரீப்ரியன்...இணையத்தொகுப்பு..

Saturday 15 August 2020

பழந்தமிழரின் போர் ஆயுதங்கள் சில..

 பழந்தமிழரின் போராயுதங்களில் சில:


வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்தகைய போராயுதங்களைப் ப்ரியமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாகவே அமைந்துள்ளது .


தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும்.


கைக்கொள்படை/ கைப்படை: - (hand hold weapons)

கைவிடுபடை/ எறிபடை

கைவிடாப்படை

கைக்கொள்ளாப்படை: - ( siege & defense tools)


தோய்த்தல் - ஆயுதங்களைக் காய்ச்சி நனைத்தல்

துவைச்சல் (படைக்கருவி) - tempering (weapons)

பணைத்தல் - AIM MISS

இலக்கு, மச்சை - target

ஆயுதப்பயிற்சி செய்யுமிடம் - சரம்புச்சாலை, பயிற்சிப்பாசறை

சரம்பு - ஆயுதப்பயிற்சி

பணிக்கன் - படைக்கலம் பயிற்றுவிப்போன்.

சலகுபிடித்தல் - படைப் பயிற்சி எடுத்தல் (to practice drill)

ஆயுதங்கள் வைத்திருக்குமிடம் - ஆயுதசாலை, படைவீடு, ஆயுதக்களஞ்சியம், தில்லெரி.

எஃகம் / துப்பு / படைக்கலம் / ஆய்தம்/ ஏதி/ தானை/ கடுமுள்/ துழுமுள் / படை/ கூர்த்திகை/ அரி -ஆயுதப்பொது

ஆய்தம் என்பது தமிழே. இச்சொல்லே பிற்காலத்தில் 'ஆயுதம்' என்று சமற்கிருததில் திரிந்தது 


எஃகம் - எஃகில் இருந்து செய்யப்பட்டதே எஃகம் .

ஆய்தங்களின் கூர்மையின் பெயர் - வல், வள், வசி , வை, அள், பூ, ஆர் (sharpness, pointedness)

ஆயுதத்தின் நுனி - முனை (tip of a weapon)

அலகு - ஆயுதத்தின் கொல்லும் கூர்மை கொண்ட பகுதி (blade of a weapon or instrument)

ஆயுதத்தின்பல்- கரு

கழி - ஆயுதப்பிடி

அடைப்பம்- போர்க் கருவிகள் வைக்கும் பை/ பேழை.

தடறு- ஆயுதவுறை / படையுறை/ கருவிப்புட்டில்

காரோடன் - ஆயுதவுறை செய்வோன்.

வாளுறை - புட்கரம்/ வாளலகு /கட்காதாரம்/வள் / இடங்கம்

வாண்முட்டி - வாளின் பிடி (handle or hilt of a sword)

கிண்ணி- வாளின் கைப்பிடி உறை (cover of the hilt of the sword)

வாண்முகம் - வாளின் வாய் (edge of the sword)

சொருகுவாள் - உறையினுள் வைக்கப்பட்ட வாள்

ஆணி - வாளின் அலகு (blade of sword)

கத்திப் பிட்டல் - கத்திக் கூடு

தாங்கு - வேல் / ஈட்டியின் பிடி (The staff of the spear)

பிடங்கு - வேல் / ஈட்டியின் பிடியானது இலையுடன் சேருமிடம் (The part of a lance to which steel is fixed.)

தரங்கு - வேல் / ஈட்டியின் நுனி {The point of in spear (end tip)}

இலை - வேல் / ஈட்டியின் அலகு (blade of a spear or lance or javelin)

காம்பு - கோடாரிகளின் அலகு (blade of the battle axe)

தலை - செண்டு அ கரளாக்கட்டை போன்றவற்றின் தலைப்பகுதி (head part of a mace or club)


தமிழ் அகராதிகளில் முத்தலைச்சூலம்/ முக்குடுமி (பெரியபு. உருத்திர. 10) என்னும் வித்தியாசமான சூலத்தைக் குறிக்கும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சூலம் என்றால் நாம் அறிந்தது..

இரண்டு பெயர்களும் தலையினையே குறிக்கின்றன. மேலும் இந்த ஆய்தத்தினை தலையில் மணிமுடி போல தாங்கியபடி ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற ஓர் முத்திரையானது சிந்துசமவெளி ஆய்வில் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றது.

ஆகவே இவை ஏதேனிலும் ஒன்று அதற்கான பெயராக இருக்கலாம் என்பது பதிவரின் கருத்து.


#சூலம் / காளம் / மும்முனை/ நல்வசி/ சூல் - இதில் பல வகையுண்டு.

எரிமுத்தலை - நெருப்பினைக் கொண்ட சூலம்

சத்தி - சிறு சூலம்

"தாமேற் றழுத்திய சத்தி வாங்கி" (பெருங். மகத. 20, 63)

"ஊனக மாமழுச் சூலம் பாடி"(திருவாச. 9:17)


#முக்கவராய்தம் / முக்கவர்தடி / முக்கப்பு / முக்கவர்சூலம்/ முத்தலைக் கழு - இதன் குத்தும் பகுதியானது சூலத்தின் குத்தும் பகுதியைக் காட்டிலும் நீளமாக இருக்கும். இது வேட்டைக்குப் பயன்படும் ஓர் ஆய்தம். தேவைப்பட்டால் களத்திலும் சுழலும்.


#முத்தலைக்கழு - கழு போன்ற நீண்ட குத்தும் அலகூகளைக் கொண்ட சூலம்.

"பருமுக் கப்பினரே"(தக்கயாகப். 98)

"முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில்மிகும் காராரிந்த மேனி"


"கழு முள் மூவிலை வேல் முத்தலை கழு…சூலப் படை என வழங்கும்" (நிக.தி:7:2)


#சூலவேல்/ மூவிலைச்சூலம் / இலைத்தலைச் சூலம்- மூன்று வேலின் இலை போன்ற முனைகளைத் அலகாகக் கொண்ட சூலம்.


#மூவிலைவேல் / முத்தலைவேல் - வேல் என்பது ஓரிலை போன்றது. மூவிலை வேல் என்பது மூன்று இலைகளால் ஆனது. 

முருகனின் கையில் இவ்வாய்தம் உண்டு.


#வேல்/ உடம்பிடி/ ஞாங்கர்/ விட்டேறு : முக்கோண இலைவடிவ கூரிய முனை கொண்ட ஆய்தம். இதனை கையில் வைத்தே சண்டையிடுவர்... கூடியவரை எறிவதில்லை!

வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! வேலின் கீழ் நுனி வட்டமாக முடியும்!

வடிவேல் - மிகவும் கூர்மையான வேல்


#சிறியிலை எஃகம் - சிறிய ஒடுங்கிய இலையினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்..


#ஏந்திலை/ முகட்டுவேல் - இலை நீளமாக இருப்பது போன்ற வடிவினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!

ஏ → ஏந்து = உயரம்

இலை - இலை

ஏந்திலை = நெடிய இலை


#தூரியம் - தூரிகை போன்ற ஒரு வகையான வேல் . இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!


#முத்தகம் - முத்தக இலை போன்ற அமைப்பினை உடைய வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும். கூடியவரை எறிவதில்லை!


#அயில்/ அயில்வேல் - கோரைப்புல் போன்று கொஞ்சமாக அகண்டு மிகவும் நீண்டிருக்கும் ஓரு வகையான வேல்.


#சங்கு / சங்கம்- இலையானது ஒரு பக்கம் வளைந்து இருக்குமான ஆய்தம். கூடியவரை எறிவதில்லை!

சுல்- சல்- சழி - சருக்கு- சக்கு- சங்கு- சங்கம


#பூந்தலைக்குந்தம் -  இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை.


#சவளம் :- சவண்ட வாள் போன்ற தோற்றம் உடைய ஆய்தம். கூடியவரை எறிவதில்லை! இதில் இரு வகை உண்டு:

சுவள்→ சவள் → சவளம்

சிறுசவளம் - சிறிய சவளம்

பெருஞ்சவளம்/பீலி - நன்கு சவண்ட பெரிய சவளம்.


#உழவாரம் - அலகானது கொஞ்சம் பார்பதற்கு நேராக்கி நிறுத்திய மண்வெட்டி போல இருக்கும். முன்பக்கம் மட்டுமே சப்பையாக்கப்பட்டு கூராக இருக்கும்!


#சல்லியம்- ஆணி/ முள் போன்ற அலகினை உடைய எறிபடை !

சுல் = குத்தற்கருத்து வேர்.

சுல் → சல் = கூரிய முனையுள்ளது, குத்தும் கருவி.

சல் + இயம் = சல்லியம் → ஆணி/ முள் போன்ற கூரிய முனை

கீழ்க்கண்ட சல்லியமானது தென்தமிழ்நாட்டு அரசர் ஒருவரால் பிரித்தானிய பேரரசர் ஒருவருக்கு ப்ரியமான அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதாகும்


#அரணம் - அரணத்தின் வடிவினை ஒத்த இலையினைக் கொண்ட வேல் .

இதே பொருள் கொண்ட செருப்பு மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றினதும் வடிவத்தினைக் காண்க. அனைத்தும் ஒரே வடிவமே!


#வல்லயம் / குத்துவல்லயம் - இது அதிநீளமான ஓர் ஆய்தமாகும்; முனையில் கூரிய கூர்மையுள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஆய்தம். எட்டத்தில் நின்றபடியே எதிரியை குத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. இதனைக் கூடுதலாக யானைமேல் உள்ளவர்கள் பயன்படுத்துவார்கள்!


#கழுக்கடை -குச்சியில் நீளமான கூர்மையான முனையினைக் கொண்ட ஈட்டி.


#நேரிசம்- நீண்ட முள்போன்ற மெல்லிய தலையினைக் கொண்ட ஈட்டி. இது எறிபடை வகையே.

நேர்- நேரான

இல்>இளி>இசி - முள் / குத்துவது

அம் -விகுதி


#திருகுதடி- திருகுவது போல இருக்கும் ஈட்டி அலகு. இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. இது எறிபடை வகையே.


#தோமரம்/ கைவேல்/ கப்பம்/ கப்பணம்/ கற்பணம் - சிறிய படை.. இது பார்ப்பதற்கு சிறிய வேல் போன்று இருக்கும்.. இதே போன்ற சிலதினை முதுகில் ஓர் தூணி போன்று ஒன்றினை அமைத்து அதனுள் வைத்து செருக்களம் நோக்கி எடுத்துச் செல்வர். தேவைப்படும் போது எதிரி நோக்கி விட்டெறிவர் இல்லையேல் கையில் வைத்து சண்டையிடுவர்..

இப்படை வீரர்களை அக்காலத்தில் தோமரவலத்தார் என்றழைத்தனர்.


#கவர்தடி- இருபக்கமும் கூரான எறியாய்தம்.


#பொத்திரம் -

பொள்- துளையிடுவது போன்ற

திரம்- தகரைச்செடியின் கொத்துப் பூப்போல குண்டாக இருக்கும் கூர்மையான அலகு.


#இட்டி / ஈட்டி/ எறியீட்டி/ வண்டம்/ தரங்கம்/ குந்தம்- எறிபடை …

ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும் ; ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்.

இல் > இள் > ஈட்டு > ஈட்டி

துளங்கு → தளங்கு → தரங்கு → தரங்கம்

குல் > குன் > குந்து > குந்தம்

வண் - மிகுதி

வண்டம் - மிகுதியாக இருக்கும் ஆய்தம்.. (வேலினை விட ஈட்டி / குந்தம் தானே போர்க்களத்தில் அதிகமாக இருக்கும்!)


#இரட்டைக்கருவீட்டி- நீண்ட கைபிடி காணப்படும்.


#பட்டிசம் - இது சிங்களத்தில் பட்டிச்தான என்றுள்ளது


#சாக்கத்தி


#கணுவாளி- முள்கொண்ட முட்டி


#வயிரமுட்டி - இடிப்பதற்கான முளைகளை உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆயுதம்.


#இடிக்கட்டை - மாட்டுக்கொம்பால் செய்த கையில் வைத்து சண்டையிடும் ஆய்தம்.


#குத்துக்கட்டை - குத்துவதற்கான கூர்களையும் இடிப்பதற்கான முளைகளையும் உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆயுதம்.


#வில்லம்பு -

வில் என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள்- சிலை/ சாபம்/ குணி/ கேகயம்/ வேணு/ சிந்துவாரம்/ முனி/ தவர்/ தடி/ தண்டாரம்

வில்வட்டம் - archery

வில்லை தயாரிப்பவர்- வில்செய்வோன்

வில்லில் நாண் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வில் குலைவில் எனப்படும்.

வில்லின் நாணோசை - இடங்காரம்

குலை - வில்லின் குதை (notch in a bow to keep the string in check.)


 நாண் என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள் - பூரி , தொடை, ஆவம், பூட்டு, சிஞ்சினி, நரம்பு, நாரி, வடம், குணம், கப்பம்.


#அம்பு: (இதில் பல வகையுண்டு)

அம்புகளை தயாரிப்பபவர்- அம்பன்

→ அம்பு என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள் - கதிரம், கலி, சாயகம், பீலு, சாரகம், பூதை, சிரி, சிருகம், வண்டு, சாசம், சிலீமுகம், தொடை, தோணியம், அங்கூடம், அத்திரி, வணகம், விக்கம், ஈ,விடூசி, வேந்திரம், ஐமை, சாயகம், பகழி, சரம், வாளி, கோ, அரி, ஏ, காண்டம், அப்பு, வாசம், வாணி


இரும்பினால் செய்யப்பட்ட அம்பு - நாராசம், சலாகை

அம்பின் வகைகள்

கோரை

பாரை

ப்ரியம்

கங்கபத்திரம்

தாமரைத் தலை

வச்சிரப் பகழி

முச்சிரப் பகழி

அஞ்சலி

குஞ்சரக்கன்னம்

எரிமுகப் பகழி

உரும் இனப் பகழி

நெருக்கி மற்று அனந்த கோடி

முருக்கின் உற்று அனந்த கோடி

பல்லம்

பிறைமுகவாளி

சூகம் ,சூபம்

விசிகம்

கத்திவாளி அம்பு

.மொட்டம்பு - உதண்

அம்புக்கட்டு - புதை, கட்டு, கற்றை (sheaf of arrows)

அம்பின் நுனி - குதை, பகழி (pointed end of an arrow)

அம்புத் திரள் கட்டுங் கயிற்றின் பெயர்- பற்றாக்கை

அம்பு விடும் போது கையில் போடும் உறை- காழகம்

அம்புக்கொண்டை - உடு, புழுகு, குப்பி (head part of an arrow)

அம்பின் ஈர்க்கு- உடுவம், கோல் (shaft of an arrow)

அம்புத்தலை - புங்கம் (butt end of an arrow)

கைப்புடை- அம்பு பிடித்து இழுத்து விடும் இடம் (சிறகிற்கு பின்னால் இருக்கும் அந்தச் சிறிய இடம்)

அம்பின் சிறகு - பக்கம் (feather of an arrow)

உடுவும் உடுவமும் இணையும் இடம் - குழைச்சு (joining area of head and shaft of an arrow)


படிமப்புரவு : சொந்தமாக உருவாக்கியது'


→ அம்பு வைக்குமிடம் - (quiver) அம்பறாத்தூணி/ அம்புறைத்தூணி/ இடுதி/ புட்டில்/ கோக்குஞ்சம்/ கலாமிடம்/ அம்புக்கூடு/ தூணீரம்/ ஆவநாழி/ ஆவம் /அம்புறை/ புழுகு /கலாபம்/ வட்டில்/ அம்புயம்


#வரிவில்-வரிபோன்றமைந்த வில்

வலுவான வளைந்த மரக்கிளையின் கொம்பால் ஆகிய வில்- கொடுமரம்


#கார்முக வில் / அமைவில் - மூங்கிலால் செய்யப்பட்ட கார்காலமேகத்தில் தோன்றும் வானவில் போன்ற வில்.


#வாங்குவில் - நடுவில் நன்கு வளைந்திருக்கும் வில்.

இத்தகைய போராயுதங்களைப் ப்ரியமாக பயன்படுத்தி சிறப்பாக வீரத்துடன் வாழ்ந்தது நமக்கு பெருமையே... 

~~#ப்யாரீப்ரியன்...

இணையத்தொகுப்பு..

Saturday 8 August 2020

சங்கேதமொழி

 #நுஷுமொழி..

சீனப்பெண்களின் சங்கேத மொழி'.-

மனித நாகரிக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்களை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெண்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். இதை புரிந்து கொண்ட பெண்கள் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண்கள் போல் நடிக்கத் தொடங்கினார்கள்.


சீனப் பெண்கள் ஒருபடி மேலே போய் தங்களுக்கு எழுதப் படிக்கக் கூட தெரியாது என்பது போல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல. பல நூற்றாண்டுகள் இந்த நடிப்பு தொடர்ந்தது. அப்போது பெண்கள் தங்களுக்கு என்று தனி எழுத்து வடிவம் பயன்படுத்த தொடங்கினார்கள்.

பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள். நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று அர்த்தம்.p.p

தங்கள் பெண்கள் இப்படி எழுத்துரு கொண்ட மொழியை பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்பதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் சொன்னார்கள் பெண்களால் ரகசியத்தை காப்பாற்றமுடியாது என்று.

சீன மொழி எழுத்துக்கள் பெரிதாகவும் கம்பீரமாகவும் இருக்கும். 'நுஷு' எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடு கிறுக்கியது போல் இருக்கும். ஓவியங்களிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம். பார்டர் போல் எழுத்துக்களை பயன்படுத்தி தகவலை சொல்லிவிடுவார்கள்.

பெண்கள் ஆண்களின் கண்ணில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போன பெண்கள் அங்கு தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாக தெரிவித்தார்கள்.

ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும் பேத்திக்கும் கற்று தந்து வழிவழியாக காப்பாற்றி வந்தார்கள். பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களை கூசாமல் பேசிய மொழி இது.

தற்போது நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை என்பது வேதனையான ஒன்று. யாங் ஹுஅன்ய் என்ற 98 வயது பெண் 2004-ம் ஆண்டு இறந்த போது நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழி தெரிந்த கடைசி பெண்.

பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட திகட்ட சொன்ன ஒரு மொழி இன்று உயிர்ப்போடு இல்லை. நூற்றாண்டுகள் கடந்து ரகசியமாக வளர்ந்த மொழியை இப்படி சாக விட்டுவிட முடியுமா..! அதற்காகத்தான் சீன அரசு நுஷு மொழியை பாரம்பரிய மொழியாக அறிவித்து அதற்காக ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.

ஏகப்பட்ட கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் இருக்கும் இன்றைய பெண்கள் கூட இப்படி ஒன்றை உருவாக்கமுடியுமா என்பது சந்தேகமே! 

#ப்யாரீப்ரியன்... மீள்...

Friday 7 August 2020

படை அளவீடுகள்

 

#படைகள்..
மன்னர்கள் காலத்தில் இருந்த படை வகைகள்..
படை அளவுகள்..

தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, ஆகிய நாற்படைகள்.

#பதாதி .
ஒரு யானையும், ஒரு தேரும், மூன்று குதிரையும், ஐந்துகாலாட்களும் கொண்ட சேனைத்தொகுதி பதாதி என குறிப்பிடப்படுகிறது.

பதாதி  மும்மடி (மூன்று மடங்கு) கொண்டது  - சேனா முகம் எனவும்

சேனா முகம் மும்மடி கொண்டது - குமுதம் எனவும்

குமுதம் மும்மடி கொண்டது - கணகம் எனவும்

கணகம் மும்மடி கொண்டது - வாகினி எனவும்

வாகினி மும்மடி கொண்டது பிரளயம் எனவும்

பிரளயம் மும்மடி கொண்டது சங்கம் எனவும்

சங்கம் மும்மடி கொண்டது -சமுத்திரம் எனவும்

சமுத்திரம்  மும்மடி கொண்டது -சங்கமம் எனவும்

சங்கமம் மும்மடி கொண்டது - அநிகம் எனவும்

அநிகம் மும்மடி கொண்டது- அக்குரோணி எனவும் அளவீடு கொண்டதாக  அறியப்படுகிறது.

ஒரு அக்குரோணி என்பது
21,870 தேர்கள்,
21,870 யானைகள்,
65,610 குதிரைகள்,
1,,09,350 காலாட்படை வீரர்கள் கொண்ட படையாகும்.

இதுபோன்று கௌரவர்
அணியில் 11 அக்குரோணி படைகளும்,
பாண்டவர் அணியில் 7 அக்குரோணி படைகளும் இருந்தன்.
இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.

பாரதப்போரில்  பயன்படுத்திய பாண்டவர் அணி மற்றும் கௌரவர்கள் அணி கொடி சின்னங்கள்

#பாண்டவர்கள்

தருமன் - கிரகங்கள் சூழ்ந்த சந்திரன்

அர்ஜுனன் - குரங்கு

பீமன் - சிங்கம்

நகுலன் - தங்கத்திலான முதுகையுடைய சரபம்

சகாதேவன் - அன்னம்

அபிமன்யு - சாரங்கப் பறவை

பீமனின் மகன் கடோத்கஜன் - கழுகு

கண்ணன் - கருடன்

பிரத்யும்னன் - மகரம்

#கௌரவர்கள்

பீஷ்மர் - ஐந்து நட்சத்திரங்களுடன் கூடிய தாலக்கொடி (தாலம் பனை)

துரியோதனன் - சர்ப்பம்

துரோணர் - பீடத்தின் மீது மான் தோல் பொருத்தப்பட்டு அதன்மேல் வில்லும், கமண்டலம்

கிருபாச்சார்யர் எருது காளை)

அஸ்வத்தாமன் சிங்கவால்

கர்ணன்- யானை கட்டும் கயிறு

ஜெயத்ரதன் - கரடி

சல்லியன் - கலப்பை

கடோத்கஜன் - கழுகு இரத்தம் தோய்ந்த நிலை..
________________________________

மூவேந்தர்களுக்கும்  உரிய சின்னங்கள்

1 யானை
2 காளை
3சேவல்
4 குரங்கு
5 சிங்கம்
6 யாளி
7 கருடன்
8 பன்றி
9 சேல் ( மீன்)
10 மகரம்
11 புலி( வேங்கை)
12 அரவம் ( யரவம் பாம்பு)
13 ஒட்டகமும்
14 சங்கு (வலம்புரி)
15 கப்பல்
16 சிப்பி
17 கிளி
18 அன்னம் ( பறவை)
19 தொனி முரசு
20 மயில் ( தங்கமயில்)
21 கொடிய தாலம் மரம் ( தாலம் பனை)

இவை அனைத்தையும்  அறிந்து தங்களுக்குரிய பல நன்மை திண்மைகளை வென்று இந்த முத்திரைகளை விருதாக கொண்ட விருத்த பாடலை
தேடி அறிந்து ப்ரியமாக தகவல் அளித்தவர்..
#ஜான்_மில்டன்_பர்னாந்த் ஐயா அவர்கள்...

"திங்கள்வம் மிசதிகை பரதகுல பாண்டியர் தம்
ஜெயவிடால் #மூவேழ்வகை
செப்பிவாம் விவரமா யானையுங் காளையுஞ்
சேவலோடனு மந்தனனும்
சிங்கமும் யாளியுங் கருடனொடு பன்றியுஞ்
சேல் மகரம் வேங்கை யரவம்
திகழ் கனகமகனுடன் சங்கமுங் கப்பலுஞ்
சிப்பியங் கிளியன்னமும்
மங்கலாகார தொனி முரசு பைம்பொன்னுரூப
மயிலோடு கொடியதாலம்
மரமுமாகிய  விவைகளாகுமிவைகளையிவர்கள்
மகிமையோடுலகறியவே
தங்களுக்குரிய பல நன்மை தின் மைக்கெலாந்
தனி விருதென நடாத்திக்
கார்தலத்தேப பவனி வர தன்மாபழமையாய்ச்
சாற்றுவார் போற்றுவாரே"

உலக அளவில் அனைத்து அரசர்களை விடவும், மூவேந்தர்களான சேர, சோழ,பாண்டிய மன்னர்களில் அதிகப்படியான படைபலத்தை பெற்றவராக 1000 வருடத்திற்கு முன்பே உலகின் பெரும்பகுதிகளை வசமாக்கிய இராஜேந்திர
சோழனது போர் படையில் சற்றேறக்குறைய
12 -14 லட்சம் வீரர்கள்,
லட்சத்திற்கும் மேற்பட்ட
குதிரைகள்,
50,000 க்கும் மேற்பட்ட
யானைகள் இருந்துள்ளதாக
அறியப்படுகிறது.
#ப்யாரீப்ரியன்...
~~இணையத்தொகுப்பு.
https://m.facebook.com/story.php?story_fbid=3244038485679133&id=100002190405617

Sunday 2 August 2020

இதுதான் எங்கள் தமிழ்

இது தான் #தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம் 
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா 
5. திருப்பாவை 
6. திருவெம்பாவை 
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி 
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 
5.முல்லைப்பாட்டு 
6.மதுரைக்காஞ்சி 
7.நெடுநல்வாடை 
8.குறிஞ்சிப் பாட்டு 
9.பட்டினப்பாலை 
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 
2.நாலடியார் 
3.நான்மணிக்கடிகை 
4.இன்னாநாற்பது 
5.இனியவை நாற்பது 
6.கார் நாற்பது 
7.களவழி நாற்பது 
8.ஐந்திணை ஐம்பது 
9.திணைமொழி ஐம்பது 
10.ஐந்திணை எழுபது 
11.திணைமாலை       நூற்றைம்பது 
12.திரிகடுகம் 
13.ஆசாரக்கோவை 
14.பழமொழி 
15.சிறுபஞ்சமூலம் 
16.முதுமொழிக் காஞ்சி 
17.ஏலாதி 
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 
2.மணிமேகலை 
3.சீவக சிந்தாமணி 
4. வளையாபதி 
5. குண்டலகேசி 
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம்  
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 
4.நன்னூல் 
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம் 
2.முக்கூடற்பள்ளு 
3.நந்திக்கலம்பகம் 
4.கலிங்கத்துப்பரணி 
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 
3.பொதுமைப் பண்புகள் 
4.நடுவுநிலைமை 
5.தாய்மைத் தன்மை 
6.கலை பண்பாட்டுத் தன்மை 
7.தனித்து இயங்கும் தன்மை 
8.இலக்கிய இலக்கண வளம் 
9.கலை இலக்கியத் தன்மை 
10.உயர் சிந்தனை 
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

சமய குரவர்கள்
----------------------------

1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்

12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்   
2. இராமதேவர் 
3. கும்பமுனி 
4. இடைக்காடர்
5. தன்வந்திரி  
6. வான்மீகி
7. கமலமுனி 
8. போகநாதர் 
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி, 
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல்.  

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி 
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40. நவநாதர் 
(அ. சத்ய நாதர்,  
ஆ. சதோக நாதர்,  
இ. ஆதி நாதர், 
ஈ. அனாதி நாதர், 
உ. வகுளி நாதர்,  
ஊ. மதங்க நாதர்,  
எ. மச்சேந்திர நாதர், 
ஏ. கஜேந்திர நாதர், 
ஐ. கோரக்க நாதர்)
41. அஷ்ட வசுக்கள்
42. சப்த ரிஷிகள்.

இப்படிச் சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...
பெருமை கொள்வோம் தமிழரென்று.. 
~தொகுப்பு.
#ப்யாரீப்ரியன்...