Friday 7 August 2020

படை அளவீடுகள்

 

#படைகள்..
மன்னர்கள் காலத்தில் இருந்த படை வகைகள்..
படை அளவுகள்..

தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, ஆகிய நாற்படைகள்.

#பதாதி .
ஒரு யானையும், ஒரு தேரும், மூன்று குதிரையும், ஐந்துகாலாட்களும் கொண்ட சேனைத்தொகுதி பதாதி என குறிப்பிடப்படுகிறது.

பதாதி  மும்மடி (மூன்று மடங்கு) கொண்டது  - சேனா முகம் எனவும்

சேனா முகம் மும்மடி கொண்டது - குமுதம் எனவும்

குமுதம் மும்மடி கொண்டது - கணகம் எனவும்

கணகம் மும்மடி கொண்டது - வாகினி எனவும்

வாகினி மும்மடி கொண்டது பிரளயம் எனவும்

பிரளயம் மும்மடி கொண்டது சங்கம் எனவும்

சங்கம் மும்மடி கொண்டது -சமுத்திரம் எனவும்

சமுத்திரம்  மும்மடி கொண்டது -சங்கமம் எனவும்

சங்கமம் மும்மடி கொண்டது - அநிகம் எனவும்

அநிகம் மும்மடி கொண்டது- அக்குரோணி எனவும் அளவீடு கொண்டதாக  அறியப்படுகிறது.

ஒரு அக்குரோணி என்பது
21,870 தேர்கள்,
21,870 யானைகள்,
65,610 குதிரைகள்,
1,,09,350 காலாட்படை வீரர்கள் கொண்ட படையாகும்.

இதுபோன்று கௌரவர்
அணியில் 11 அக்குரோணி படைகளும்,
பாண்டவர் அணியில் 7 அக்குரோணி படைகளும் இருந்தன்.
இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.

பாரதப்போரில்  பயன்படுத்திய பாண்டவர் அணி மற்றும் கௌரவர்கள் அணி கொடி சின்னங்கள்

#பாண்டவர்கள்

தருமன் - கிரகங்கள் சூழ்ந்த சந்திரன்

அர்ஜுனன் - குரங்கு

பீமன் - சிங்கம்

நகுலன் - தங்கத்திலான முதுகையுடைய சரபம்

சகாதேவன் - அன்னம்

அபிமன்யு - சாரங்கப் பறவை

பீமனின் மகன் கடோத்கஜன் - கழுகு

கண்ணன் - கருடன்

பிரத்யும்னன் - மகரம்

#கௌரவர்கள்

பீஷ்மர் - ஐந்து நட்சத்திரங்களுடன் கூடிய தாலக்கொடி (தாலம் பனை)

துரியோதனன் - சர்ப்பம்

துரோணர் - பீடத்தின் மீது மான் தோல் பொருத்தப்பட்டு அதன்மேல் வில்லும், கமண்டலம்

கிருபாச்சார்யர் எருது காளை)

அஸ்வத்தாமன் சிங்கவால்

கர்ணன்- யானை கட்டும் கயிறு

ஜெயத்ரதன் - கரடி

சல்லியன் - கலப்பை

கடோத்கஜன் - கழுகு இரத்தம் தோய்ந்த நிலை..
________________________________

மூவேந்தர்களுக்கும்  உரிய சின்னங்கள்

1 யானை
2 காளை
3சேவல்
4 குரங்கு
5 சிங்கம்
6 யாளி
7 கருடன்
8 பன்றி
9 சேல் ( மீன்)
10 மகரம்
11 புலி( வேங்கை)
12 அரவம் ( யரவம் பாம்பு)
13 ஒட்டகமும்
14 சங்கு (வலம்புரி)
15 கப்பல்
16 சிப்பி
17 கிளி
18 அன்னம் ( பறவை)
19 தொனி முரசு
20 மயில் ( தங்கமயில்)
21 கொடிய தாலம் மரம் ( தாலம் பனை)

இவை அனைத்தையும்  அறிந்து தங்களுக்குரிய பல நன்மை திண்மைகளை வென்று இந்த முத்திரைகளை விருதாக கொண்ட விருத்த பாடலை
தேடி அறிந்து ப்ரியமாக தகவல் அளித்தவர்..
#ஜான்_மில்டன்_பர்னாந்த் ஐயா அவர்கள்...

"திங்கள்வம் மிசதிகை பரதகுல பாண்டியர் தம்
ஜெயவிடால் #மூவேழ்வகை
செப்பிவாம் விவரமா யானையுங் காளையுஞ்
சேவலோடனு மந்தனனும்
சிங்கமும் யாளியுங் கருடனொடு பன்றியுஞ்
சேல் மகரம் வேங்கை யரவம்
திகழ் கனகமகனுடன் சங்கமுங் கப்பலுஞ்
சிப்பியங் கிளியன்னமும்
மங்கலாகார தொனி முரசு பைம்பொன்னுரூப
மயிலோடு கொடியதாலம்
மரமுமாகிய  விவைகளாகுமிவைகளையிவர்கள்
மகிமையோடுலகறியவே
தங்களுக்குரிய பல நன்மை தின் மைக்கெலாந்
தனி விருதென நடாத்திக்
கார்தலத்தேப பவனி வர தன்மாபழமையாய்ச்
சாற்றுவார் போற்றுவாரே"

உலக அளவில் அனைத்து அரசர்களை விடவும், மூவேந்தர்களான சேர, சோழ,பாண்டிய மன்னர்களில் அதிகப்படியான படைபலத்தை பெற்றவராக 1000 வருடத்திற்கு முன்பே உலகின் பெரும்பகுதிகளை வசமாக்கிய இராஜேந்திர
சோழனது போர் படையில் சற்றேறக்குறைய
12 -14 லட்சம் வீரர்கள்,
லட்சத்திற்கும் மேற்பட்ட
குதிரைகள்,
50,000 க்கும் மேற்பட்ட
யானைகள் இருந்துள்ளதாக
அறியப்படுகிறது.
#ப்யாரீப்ரியன்...
~~இணையத்தொகுப்பு.
https://m.facebook.com/story.php?story_fbid=3244038485679133&id=100002190405617

No comments:

Post a Comment