Monday 31 October 2016

நாய்கள் இனம் அழியும் அபாயம்...

நம் தாயகமான இந்தியாவில் 88 நாய் இனங்கள் இருந்தன, அதில் அதிகமான இன நாய்கள் #அழிந்து_விட்டன. இதில் தற்பொழுது மேலும் 11 நாய் இனங்களை அழிந்து வரும் இனத்தில் சேர்த்து உள்ளனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த #சிப்பிப்பாறை இனமும் அடக்கம்.
இங்கே என்னால் அனைத்து நாய் இனத்தின் புகைப்படங்களையும் தர இயலவில்லை, ஏன் என்றால் அந்த நாய் இனத்தின் புகை படங்கள் கூட தேடியும் கிடைக்கவில்லை. .
அவை #மலையேறி மற்றும் #குச்சிஇனம்.
நாம் வெளிநாட்டு இன நாய்களின் #மோகமும் ஒரு காரணம்.
இதை போலவே,
நமது நாட்டு #மாடுகளின் இனமும் அழியும் ...
ஜல்லிக்கட்டு போட்டிகளை கைவிட்டால்...
சிறிது காலங்களுக்கு முன்னாள் நாம் வளர்க்கும் நாய்களுக்கு வீட்டில் #சமைக்கும்_உணவையே அதற்கும் கொடுத்து கொண்டு வந்தோம்.
இதனால் #கார்பொரேட் நிறுவனங்களால் தொழில் பாதிப்பு சிறிது இருந்தது. பிறகு வந்தது தான் வெளிநாட்டு நாய்கள்,
அவைகள் நம் நாய்களை போல அல்ல. அவைகளுக்கு #பிரத்யேக நாய் #உணவுகள் என்று விற்கபடும் (எதை சொல்கிறேன் என்று புரிந்திருக்கும்) பொருட்களை தான் உண்ண முடியும்.
இதை போல தான் காளை மற்றும் பசு வளர்ப்பில் கார்பொரேட் நுழைந்தால், நமது நாய் இனங்களை போல காளை இனமும் #அழிவை_சந்திக்க நேரிடும்.
நம் நாட்டில் 88 இன நாய்களில் இப்போது மிகவும் அதிகமான இனம் அழிந்தே விட்டது. இதை பார்த்தாவது நாம் விழித்து கொள்ள வேண்டும்.
#ப்யாரீப்ரியன் பாரம்பரிய வாழ்வு தொகுப்பிலிருந்து...

1 comment:

  1. இந்த நாய் எந்த வகை????

    ReplyDelete