Monday 11 July 2016

ஓசூர் ராம்நகர் சோமேஸ்வரர் கும்பாபிஷேகம்

‪#‎ஓசூர்_1000ஆண்டு_பழமை_கோவில்_‬#கும்பாபிஷேகம்...
புகழ் வாய்ந்த, புராதன, ‪#‎வரலாற்றுசிறப்புமிக்கக்‬ கோயில்களுக்கு ‪#‎புத்துயிரூட்டி‬, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்
‪#‎ஓசூர்_சொர்ணாம்பிகை‬ சமேத ஸ்ரீ ‪#‎சோமேஸ்வரர்‬ திருக்கோயில் ‪#‎ஓசூர்_ராம்நகர்‬.
‪#‎பஞ்சபாண்டவர்கள்‬ தனித்தனியே லிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட புராதன கோயில் சமீபத்தில் நிலத்தை தோண்டிய போது ‪#‎பீமேஷ்வரர்‬, (பீமன் வழிபட்ட லிங்கம்) ‪#‎சோமேஷ்வரர்‬ (தர்மர் வழிபட்ட லிங்கம்) ‪#‎அர்ஜூனேஷ்வரர்‬ (அர்ஜூனன் வழிபட்ட லிங்கம்) ஆகிய மூன்று லிங்கங்கள் மட்டுமே வெளியே எடுத்துள்ளார்கள்.
நகுலன், சகாதேவன், வழிபட்ட லிங்கங்கள் வெளியே எடுக்காமல், குழியை மூடி மேலே பெரிய சிவன் உருவத்தையும், ஒரு சிவ லிங்கத்தையும் ஸ்தாபனம் செய்திருப்பதாக சிவாச்சாரியார் கூறினார்.
கும்பாபிஷேகம் நோக்கம்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டியதன் மூலம், கும்பாபிஷேகம் நேற்று 10 -07-2016 ஞாயிறன்று வெகு விமரிசையாக செய்யப்பட்டது..

‪#‎ப்யாரீப்ரியன்‬

No comments:

Post a Comment