Monday 11 July 2016

இசைத்தூண்கள்...

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத
அதிசயமான
நெல்லையப்பர் கோவிலின் இசைத்தூண்கள்..!.

ப்யாரீப்ரியனின் கலைத்தொகுப்பிலிருந்து...

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர்.

இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது.

சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது.

இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும், அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.

ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும்.

இதைத் தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை.

உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதைத் தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.
நம் முன்னோர்களின் கலைத்திறமைகளை போற்றி பாதுகாப்பது இளைய தலைமுறையினரின் கடமை...
கடமையுடன்
#ப்யாரீப்ரியன்

1 comment:

  1. பார்த்து வியப்படைந்த இடங்களுள் ஒன்று இந்த இசை தூண்கள்.

    ReplyDelete