Monday 22 April 2019

எலும்புக் குறியீடு....

#உலக_புத்தகதினம் (23-04-2019).
உலகின் முதல் பதிவு.#எலும்பில்.!

குகைகளில் எழுதத் தொடங்கு முன்பே, எலும்புகளில் பதிவு செய்துவிட்டனர்.
 முதன் முதலில் குரங்கின் கை எலும்பில்  பெண்கள், மாதத்தின் நாட்களை, குறியீடாக அந்த எலும்பில் தனது #மாதவிடாயை, கருக்காலத்தைக் கணக்கில் கொள்ள, வானில் நிலவு வந்து போகும் காலக் கெடுவுடன் தொடர்புடையதாக பிரியமாககுறித்து வைத்துள்ளனர். ஆப்பிரிக்காவின் "#லேபோம்பா" (Lebombaஅ) எண்ற இடத்தில் அந்த குறியீடு செய்துள்ள எலும்பு கிடைத்தது. எனவே அதன் பெயரிலே லேபோம்பா எலும்பு என்றே அழைக்கப்பட்டது. அதன் வயது என்ன தெரியுமா? சுமார் 37,000 ஆண்டுகள்.! இந்த எலும்பில் 29 கோடுகள்/பட்டைகள் உள்ளன.

அதுபோலவே, இஷாங்கோ என்ற இடத்தில் கிடைத்த எலும்பின் பெயர் "இஷாங்கோ எலும்பு". எலும்பின் நுனியில் அதனை எழுதப் பயன்படுத்திய படிகக் குச்சியும்(crystal) உள்ளது. இதுவும் ஆப்பிரிக்க எரிமலைப்படிவுகளில் கிடைத்துதான். இதன் வயது 20,000 -25,000 ஆண்டுகள். இதில் 3 வரிசைகளில் எண்கள் பற்றி "டாலி( Tally )" குறியீட்டில் பதிவு செய்துள்ளனர் அக்கால பெண்கள்! இதில் 6 மாத சந்திர காலண்டர் பொறிக்கப்பட்டுள்ளது.

எலும்பில் எழுதிய மனிதன், மலையின் குகைகளில் எழுதினான். பிறகு பாப்பிரஸ் மரபட்டைகள், ஆடு மற்றும் கன்றுகுட்டியின் தோல்கள், மரபட்டைகள், களிமண், மண் ஓடுகள் மற்றும் பேப்பர்கள் என எழுத்தின் பதிவு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் பெற்றது. இன்று மின்னஞ்சலில், வலைதளத்தில், e-எழுத்தாக மாறியுள்ளது.

காலப்பதிவுகள்..
மனிதப்பரிணாமத்தில்

விலங்குகளின் எலும்பில் எழுத்து தொடங்கி ஓலைச்சுவடி ..தாள்களாகி இன்று மின்னூலாகி பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது வியப்பு??

ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு,
தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்பதும் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், புத்தகங்கள்
மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில்  அமைந்திருப்பதாகவும் கருதி யுனெஸ்கோ அமைப்பு
கடந்த 1995 ம் ஆண்டு முதல் ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது.
#ப்யாரீப்ரியன்...
இணையத்தொகுப்பு பதிவிலிருந்து....

No comments:

Post a Comment