Saturday 26 October 2019

கோலம்

#கோலம்..
வீட்டின் முன்பு இடும்
கோலமென்பது வெறும் அழகுக்காக மட்டுமில்லை.  சரியான முறையில் சரியான அளவில் உருவங்கள் ஒன்றிணையும் கோலம் தெய்வீக சக்தியை வரவைக்கும் யந்திரத்துக்கு ஒப்பானது.
அதனாலேதான், கோலங்கள் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் வரையப்படுகின்றது.
மேலும் மார்கழியில் அதிகாலையில் கோலமிடுவதால் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதால்  அதாவது டிசம்பர் மாதத்தில் பூமினுடைய சக்திநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த சக்தி மாற்றத்தின்போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல்.

நாள்தோறும் சூரிய உதயத்திற்குமுன் வாசலில் கோலமிடுவதால் நம் உடலுக்கு தேவையான முழுமையான பிராணவாயு சுவாசிக்க இயலும்... 
வீட்டை பெருக்கி சாணம் தெளிப்பதால் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அழிக்கப்படுகின்றன. குனிந்து நிமிர்ந்து புள்ளி வைத்து கோலம் போடும்போது இடுப்பெலும்பு வலுப்பெறுகிறது.

புள்ளியிட்டு கோலம் போடும்போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுகிறது.
கற்பனைத்திறன்,
மன அமைதி,
நேர மேலாண்மையும்,
தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.நம்முடையை சிந்தனை சிதறலையும் தடுக்கும் ஒருவித பயிற்சியாகிறது.

மேலும் புள்ளிக்கோலம் போடும்போது புள்ளிகளை உற்று நோக்கும்போது கண்பார்வை அதிகரிக்குது. (இதனாலதான் அந்தக் காலத்து பாட்டிகள் கண்ணாடி அணிந்ததில்லை)
அரிசி மாவினால் போடப்படும் கோலங்களால் எறும்புகளுக்கு உணவாகிறது.
முழுவதுமாக போட்டு முடித்த பிறகு மகிழ்ச்சி ஏற்படுவதும்,அண்டை வீட்டாரிடம் புகழும் கிடைக்கிறது..
கோலப்போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றால் பரிசும் கிடைக்கிறது..
#ப்யாரீப்ரியன்..

No comments:

Post a Comment