Wednesday, 9 July 2025

இரும்பு - மனிதன்

 “தமிழர் உருவாக்கிய இரும்புக் காலம் (Iron Age)“

நன்றி - ராஜ்சிவா

'இரும்பு' உலோகத்தை, 'Iron' என்று ஆங்கிலத்தில் அழைத்தாலும், அறிவியலில் ‘Fe’ என்றே அது அறியப்படுகிறது. இலத்தீன் மொழியில் ‘Ferrum’ என்பார்கள்.  அதனடிப்படையில், ‘Fe’ என்னும் ஈரெழுத்துக் குறியீடு, இரும்புக்கு உரியதானது. புவியில் கிடைக்கப்பெறும் தனிமங்களை, எழுத்துகளால் அடையாளப்படுத்தும் முறையை ‘ஜோன் டால்டன்’ (John Dalton) என்னும் வேதியலாளர் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதை மறுசீரமைத்து, ஒற்றை, இரட்டை எழுத்துகளில்  குறிப்பிட்டவர், ‘ஜோன்ஸ் ஜேக்கப் பெர்சீலியஸ்’ (Jöns Jacop Berzelius). இவரே இலத்தீன், கிரேக்க மொழிகளின் சொற்களிலிருந்து தனிமங்களுக்குப் பெயரிட்டார். இலத்தீனில் இரும்பு, ‘Ferrum’ (Fe ) என்பதுபோலத் தங்கம், ‘Aurum’ (Au). வெள்ளி, ‘Argentum’ (Ag). செப்பு, ‘Cuprum’ (Cu). இந்தப் பெயரிடுதல்கள் 18ஆம் நூற்றாண்டுகளில் நடந்தவை. 

இரும்பு, 3500 ஆண்டுகளுக்கு முன்னரே புழக்கத்திற்கு வந்துவிட்டது. இன்றையத் துருக்கியான, அன்றைய ‘ஹிட்டைட் பேரரசில்’ (The Hittiite Dynasty), கி.மு.1400 முதல் கு.மு.1200 வரையான காலங்களில், இரும்பு முதன்முதலாக அறிமுகமாகியது என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. அதன் பின்னர், கி.மு.1000 ஆண்டளவில் இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு இரும்பின் பயன்பாடு பரவியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பனிக்காலம் (Ice Age), கற்காலம் (Stone Age) கடந்து, கி.மு.1200 களில், ஆதிமனிதனின் இரும்புக்காலம் (Iron Age) ஆரம்பமாகியது என்று, மனித வரலாற்றின் வளர்ச்சிப் படிகளைக் கணித்திருக்கிறார்கள்.  அதுவே உண்மையென்றும் உலகம் நம்பிவந்தது.  ஆனால், “இவை எல்லாமே தப்பு” என்று  சத்தமான குரல் எழுந்திருக்கிறது. குரல் எழுந்த இடம், தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர். 

முவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், யாராலோ முதன்முதலாகப் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட இரும்பை, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

“ஒரு தனிமத்தைக் கண்டுபிடிப்பதில் பெருமைகொள்வதற்கு அதில் என்ன சிறப்பு இருக்கிறது? அதற்கு ஏன் இந்தளவு உணர்ச்சிவசப்பட வேண்டும்?” இது எத்துனை முக்கியமானது, சிறப்பானது என்பதை அறிவியலே நமக்கு உணர்த்துகிறது.

ஏனைய உலோகங்கள்போல், மனிதனால் இரும்பைச் சுலபமாகக் கண்டுபிடித்திருக்க முடியாது. அத்துடன் தமிமனிதனாலும் அது சாத்தியமில்லை. ஒரு சமுதாயத்தின் ஒன்றுசேர்ந்த உழைப்பின் மூலம்தான் இரும்பைக் கண்டுபிடித்திருக்க முடியும். அதற்கு, அறிவியல் வளர்ச்சியையும் அச்சமூகம் பெற்றிருக்க வேண்டும். 

தங்கமோ, வெள்ளியோ, துத்தநாகமோ, காரீயமோ, வேறு எந்த உலோகமானாலும், இயற்கையிலிருக்கும் தாதுமணலிலிருந்து நேரடியாக அவற்றைப் பிரித்தெடுக்கலாம். தாதுமணலிலிருந்து பிரித்தெடுப்பதில் தனித்துவமாக எதுவுமில்லை. அறிவியலும் அதற்குப் பெரிதாகத் தேவையில்லை. ஆனால், இரும்பை அப்படி நேரடியாகப் பிரித்தெடுத்துப் பெற்றுக்கொள்ள முடியாது. இயற்கைத் தாதுமணலில் தூய இரும்பு நேரடியாகக் கலந்திருப்பதில்லை. தூய்மையான இரும்பு (Fe), மிகச்சுலபமாக உயிர்வளியுடன் (Oxygen) வினைபுரிந்து, ‘இரும்பு ஆக்சைட்’ (Ferric oxide) ஆகிவிடும். அதனால், மனிதன் பெற்றுக்கொள்ளும் வகையில், தூய இரும்பு, இயற்கையில் இருக்காது. இரும்பு ஆக்சைட் மட்டுமே இயற்கைத் தாது மணலில் (Iron Ore) கலந்திருக்கும்.

மூன்று வகையில் இரும்பு ஆக்சைட் இருக்கின்றன.  முதலாவது, ‘FeO’.  இது மிகவும் அரிதானது. திடமற்றது. இரண்டாவது, ‘Fe2O3‘. இது ‘ஹெமடைட்’ (Hematite) என்னும் இரும்புத் தாதுவாக இயற்கையில் காணப்படுகிறது. மூன்றாவது, ‘Fe3O4’.  இது, ‘மக்னடைட்’ (Magnetite) என்னும் இன்னொருவகை இயற்கையில் கிடைக்கும் இரும்புத் தாது. 

இந்த மூன்று வகைகளில், முதல் வகை இரும்பு ஆக்சைட் (FeO), இயற்கையில் நிலையாக இருப்பதில்லை. இதுவும் உயிர்வளியுடன் (O2) சுலபமாக வினைபுரிந்து, ‘Fe2O3’ என்னும் அடுத்தவகை இரும்பு ஆக்சைட்டாக மாறிவிடுகிறது. அதனால், முதல் வகை மிகவும் அரிதானது. ஆனால், மற்ற இரண்டு ஆக்சைட்டுகளும், தாதுமணலாகத் தாராளமாகவே கிடைக்கின்றன. சிவப்பு, பழுப்பு, கருப்புச் சேர்ந்த மண்போன்று அவை காணப்படும். உலோக இரும்பின் எந்தச் சாயலையும் அதில் காணமுடியாது. ஹெமடைட், மக்னடைட் ஆகிய இரண்டு தாதுக்களிலிருந்துதான் தூய இரும்பு பெற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனாலும், ஏனைய உலோகங்கள்போல, அதைச் சுலபமாகப் பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கு, அறிவியலின் பெருந்துணை இருக்க வேண்டும். சொல்லப் போனால், 5000 ஆண்டுகளுக்கு முன்னர், அப்படியான ஒன்றை நினைத்துப் பார்க்கவே முடியாது. முடியாததை நம் மூத்த தமிழர்கள் முடித்துக் காட்டியிருக்கிறார்கள். 

மீண்டும் சொல்கிறேன், தமிழ் தமிழ் என்று சற்று மிகைப்படுத்தலுடன் இவற்றைச் சொல்கிறேன் என்று நினைத்துவிட வேண்டாம். நீங்கள் அப்படி நினைக்கலாம் என்பதற்காக, ஆதித் தமிழரின் அறிவியல் சாதனைகளை மேம்போக்காகச் சொல்லிவிட்டும் என்னால் நகர முடியாது. இரும்பைப் பெற்றுக் கொள்வதில், எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில், அதைக் கையகப்படுத்தியதும், அதன்மூலம் கருவிகளை உருவாக்கியதும் எவ்வளவு பெரிய விசயம் என்பதைத் தொடர்ந்து படிக்கும்போது, நீங்களே புரிந்துகொள்வீர்கள். 

சாதாரண மண்ணைவிட நிறத்திலும், எடையிலும்  இரும்புத்தாது மண் (Iron Ore) வேறுபட்டிருக்கும். அதை, ஆதித் தமிழர்கள் ஏதோ வகையில் தற்செயலாகவோ, தனித்துவமாகவோ  தெரிந்திருந்தார்கள். அந்த மண்ணை வெப்பமாக்குவதால், அதிலிருந்து தனியாக ஒரு உலோகம் பிரிந்துவருவதை எப்படியோ அறிந்து கொண்டார்கள். அதுகூடப் பெரிய விசயமில்லை. காட்டுத் தீயில் அல்லது வேறு வகையில், குறிப்பிட்ட வகை மண் அகப்பட்டு, அதிலிருந்து ஒரு உலோகம் பிரிந்து வந்ததை தற்செயலாக அவர்கள் அவதானித்திருக்கலாம்.  தமிழர்களின் அறிவில் அதுவரை எந்தச் சிறப்பும் இல்லை. தற்செயலாக நடந்த அச்செயலிலிருந்து கிடைத்த உலோகத்தை, நான் செதற்கையாகப் பெறவேண்டும் என்று நினைத்து, அதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கியதில்தான் அவர்களின் சிறப்பு வெளிப்பட்டது. 

தாது மணலை வெப்பமாக்கினால், இரும்பைப் பிரித்துப் பெறலாம் என்று தெரிந்ததும், மரங்களை அடுக்கி, அதன்மேல் அம்மணலைக் கொட்டிச் சூடாக்கினார்கள். மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்த்தார்கள். ம்ஹூம்…! எந்த உலோகமும் அதிலிருந்து பிரிந்து வரவில்லை. 

“என்ன தவறு செய்கிறோம்?”

அதற்கு மிகவும் அதிகமான வெப்பம் தேவை என்பது மெல்லப் புரிந்தது. பெருமளவான மரங்களை அடுக்கி, அதிக நெருப்பை உருவாக்கி மணலைச் சூடாக்கினார்கள். வெப்பநிலை அதிகரித்தது.  அப்போதும் எதுவும் நடக்கவில்லை. தேமே என்றிருந்தது மண். 

“இதைவிட மேலதிகமாக வெப்பமாக்க வேண்டுமோ?”. சிந்தித்தார்கள். 

தாது மணலிலிருந்து இரும்பு பிரிவதற்கு எவ்வளவு வெப்பம் தேவை தெரியுமா? கிட்டத்தட்ட 1200 சதம பாகை (1200°C) வெப்பம் தேவைப்படும். அதற்கு அவர்கள் எங்கே போவார்கள்? வெளியான இடத்தில், எத்தனை மரங்களை அடுக்கி எரித்தாலும் அத்தனை வெப்பநிலையை அடைய முடியவில்லை. காற்று வெளிகளில் வெப்ப இழப்பு, அதிகமாக இருக்கும். மூடப்பட்ட வடிவமைப்பில் எரிப்பதால் மட்டுமே அவ்வுயர் வெப்பநிலையை அடையலாம். மனித வரலாற்றிலேயே முதல்முறையாகக் இரும்பிற்கான காற்று அனல் உலை ((Bloomery Furnace) தமிழர்களால் உருவாக்கப்பட்டது. 

இரும்பைப் பிரித்தெடுப்பதற்காகவே மனிதன் முதன்முதலாக அனல் உலைகளை உருவாக்கினான் என்னும் வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. ஆபிரிக்க நாடான பழைய சூடான் (Nubia)) நாட்டில், கி.மு.700 களில் களிமண்ணினால் உருவாக்கப்பட்ட அனல் உலைகள் (Bloomery Furnaces) பயன்படுத்தியிருக்கும் பதிவுகள் இருக்கின்றன. அனல் உலைகள் அங்குதான் முதன்முதலாக உருவாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடிக்கும்போது அதை உருவாக்கியிருக்கிறார்கள். 

“உலையைப் பயன்படுத்துவதெல்லாம் ஒரு விசயமா என்ன?”

அப்படிக் கேட்டுவிட்டுச் சென்றுவிட முடியாது. இது நடந்தது இன்றோ, நேற்றோ அல்ல. எந்த வசதியும், அறிவியலும் இல்லாத 5000 ஆண்டுகளுக்கு முன்னரான காலத்தில்,  நினைத்தே பார்க்க முடியாத அறிவியல் கண்டுபிடிப்பு அவை. காற்றை ஊதி ஊதி நெருப்பை விரிவாக்கும் பொறிமுறையுடனான இரும்பைப்பெறும் அனல் உலையைத் தமிழர்களே முதலில் உருவாக்கியிருக்க வேண்டும். சூளைகள் (kilns), ஆதிமனிதனால் பயன்படுற்றப்பட்டிருக்கலாம். ஆனால் இரும்பைக் கண்டுபிடிக்கும் நோக்கம், அனல் உலையின் பாதையில் அவர்களை நகர்த்தியிருக்கிறது. 

அனல் உலையும் உருவாக்கப்பட்டது. வெப்பநிலையும் படிப்படியாக உயர்ந்தது. ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில், கடற்பாசி போன்று மென்மையான உலோகம்,  தாதுமணலிலிருந்து தனியாகப் பிரிந்து வந்தது. இரும்பைப் பிரித்தெடுப்பதில் தமிழர்கள் வெற்றி கண்டார்கள். கிடைத்த தூய இரும்பை வைத்து என்ன செய்வது? திகைத்துப் போய் நின்றான். தட்டையான, ஒழுங்கற்ற, மென்மையான அந்த உலோகத்தைக் கற்களால் அடித்தும், நெளித்தும் ஒருசில அணிகளைச் செய்யலாம். விரும்பிய வடிவத்தில், விரும்பிய அளவுகளில் அதைக்கொண்டு எதையுமே உருவாக்க முடியவில்லை. என்ன செய்வது?

தூய இரும்பு மிகவும் மென்மையானது. அதைக்கொண்டு உபகரணங்களோ, கருவிகளோ, ஆயுதங்களோ செய்ய முடியாது. இரும்பைக் கடினமாக்கினால் மட்டுமே அவற்றை உருவாக்கலாம். அதைக் கடினமாக்குவதற்கு, முதலில் அதை உருக்க வேண்டும் (அதனாலேயே, இரும்புக்கு ‘உருக்கு’ என்னும் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது). உருக்கிய பின், எஃகு (Steel) ஆக மாற்ற வேண்டும். இரும்பின் கடினமான வடிவமே ‘எஃகு’ எனப்படுகிறது. அதன் கடினம், தரம், துருப்பிடிக்காத தன்மையைப் பொறுத்துப் பல விதங்களில் எஃகுக்கள் இருக்கின்றன. நவீன கால மேம்படுத்தப்பட்ட எஃகுதான் Stainless Steel. இரும்பை எஃகு ஆக்குவதற்கு அதனுடன் கார்பன் (C) கலக்கப்படும். 0.002% இலிருந்து 2% வரையான கார்பன் இதில் கலக்கப்படுகிறது. அதற்குமேல் கலந்தால் இரும்பை அது தரமற்றதாக்கிவிடும். இந்தக் கலவைக்கேற்ப அதன் தரமும், வலிமையும் மாறுபடும். 

ஆதிச்சநல்லூரில் தமிழர்கள் உருவாக்கிய இரும்பில் 1% இலிருந்து 2% வரையான கார்பன் கலக்கப்பட்டிருக்கிறது. அவை ‘வூட்ஷ் எஃகு’ (Wootz Steel) வகையானவை. இன்று ‘டமாஸ்கஸ் வாள்கள்’ என்று சொல்லப்படும் கடினமான தரமான கத்திகள்கூட, வூட்ஷ் எஃகுவில்தான் உருவாக்கப்படுகின்றன. வூட்ஸ் எஃகு முதன்முதலில் கி.மு.300 ஆண்டுகளில் இந்தியாவிலும், இலங்கையிலும் பயன்படுத்தப்பட்டதற்கான, சான்றுகள் ஏற்கனவே உள்ளன. இப்போது ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டவை, மேலும் அதிக காலத்திற்கு முன் கொண்டு சென்றிருக்கிறது. 

எல்லாமே சரிதான். இரும்பை உருக்குவதோ, அதில் கார்பன் கலப்பதோ சாதாரண செயல்முறையே கிடையாது. இன்றிருப்பதுபோல், நவீனக் கலப்புலோகத் தொழில்நுட்பம் இல்லாவிட்டாலும், அறிவியல் மேன்மை இருந்தால் மட்டுமே அவற்றைச் செய்ய முடியும். இரும்பைத் தாது மணலிலிருந்து பிரித்தெடுத்த தமிழர்கள், மேலும் மேலும் வெப்பநிலையை அதிகரித்து, உருக்காக மாற்றிக் கொண்டார்கள். அதற்குக் கிட்டத்தட்ட 1538°C அளவு வெப்பநிலை வேண்டும். அந்த வெப்பநிலையையும் அனல் உலைகள்மூலம் அடைந்தார்கள். அதன் முடிவு, கத்தி, வாள், அணிகள் எனப் பல இரும்புக் கருவிகள் உருவாக்கப்பட்டன. சமீபத்தில், தமிழகத்தில் நடந்த  அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கருவிகளைப் பார்த்து, அறிவியல் உலகமே வியந்து போயிருக்கிறது.  தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் நடைபெறாத நிலையில், அடுத்தடுத்த ஆராய்ச்சிகளில் மேலும் என்னவிதமான இரும்புக் பொருட்கள் வெளிவருமோ என்று காத்திருக்கிறார்கள். அவை கிடைத்தால், தமிழர்களின் அறிவியல் வளர்ச்சி, யாருமே தொட்டுவிட முடியாத உயரத்தை அடையும். வரலாறு புதிதாகத் திருத்தி எழுதப்படும். அதைப் பலர் விரும்பவில்லை. அதனால், அகழ்வாராய்ச்சிகளின் அடுத்த கட்ட நகர்வுகள் தடுக்கப்படுகின்றன. தாமதப்படுத்தப்படுகின்றன. காரணம் பயம். 

இரும்பின் ‘உருகுநிலை’ (Melting point) 1538°C. அந்த வெப்பநிலைக்குச் சூடேற்றினால் மட்டுமே இரும்பு உருக ஆரம்பிக்கும். உருகிய இரும்புடன் மரங்களின் கரியைச் சேர்த்து எஃகுவாக மாற்றியிருக்கிறார்கள். அந்தளவு வெப்பநிலையைப் பெறுவதற்கான, எந்த உபகரணமும் ஆதி மனிதர்களிடம் இருந்திருக்கச் சாத்தியமே இல்லை. ஆனாலும், நம் தமிழ் மூதாதையர்கள் அதைச் செய்திருக்கிறார்கள் என்பது பலரைப் பயமுறுத்துகிறது. 

இன்று அறிவியல் எங்கோ போய்விட்டது. யாரும், எதையும் சாதிக்க முடியும் என்றாகிவிட்டது. ஒரு மூலையில் அமர்ந்தபடியே, உலகத்தைப் புரட்டிப்போடும் சாதனைகளைத் தனிமனிதனாலேயே செய்ய முடியும். அதனால், 5500 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட மிகப்பெரிய அறிவியல் சாதனை, தமிழர்களான நமக்குப் பெரிதாகத் தெரியவில்லை. எதையும் கண்டுகொள்ளாமல் விலகிச் செல்கிறோம். 

1200°C என்னும் அதியுயர் வெப்பநிலையை, மேலும் அதிகமாக்கி, 1538°C க்கு உயர்த்த வேண்டுமென்றால், காற்றை ஊதி நெருப்பைப் பெரிதாக்க வேண்டும். காற்றூதியின் அளவையும் பெரிதாக்க வேண்டும். உயர் வெப்பநிலையைத் தாங்கும் உலையமைப்பும் வேண்டும். எல்லாமே கணிக்கப்பட்டுச் செய்திருந்தால் மட்டுமே இரும்பை உருக்க முடியும். கருவிகளை உருவாக்க முடியும். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கருவிகள் இவை அனைத்துக்கும் முன்னுதாரணம். புராணங்களிலும், இதிகாசங்களிலும் சொல்லப்பட்ட ஆயுதங்களோ, கருவிகளோ அல்ல அவை. ஊனும் உயிருமாய்த் தமிழர்கள் உருகி உருகிச் செய்த உண்மைக் கருவிகள். கண்முன்னே காட்சிதரும் மாறாச் சாட்சிகள்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ‘ஆதிச்சநல்லூர்’ மற்றும் ‘சிவகளை’ ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த இரும்புப் பொருட்களும், ஏனைய பொருட்களும், கி.மு.3345  அதாவது, கிட்டத்தட்ட 5350 ஆண்டுகளுக்கு முன்வரை பழமையானவை என அறிவியல் ரீதியான காலக்கணிப்பு முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புனேயில் உள்ள ‘பீர்பால் சகானி தொல்லாராய்ச்சி அறிவியல் நிறுவனம்’, ‘அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்’, ‘அமெரிக்கா பீட்டா ஆய்வகம்’ ஆகியவற்றில் அவை முறையாகப் பரிசோதிக்கப்பட்டன. ஏற்கனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறையில், 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், இரும்புப் பொருட்களுடன் கிடைத்த ஏனைய பொருட்களை, AMS (Accelerator Mass Spectrometry) முறையில் ஆய்வு செய்தபோது, கி.மு.2172 அதாவது, 4200 ஆண்டுகள் பழமையானவையெனக்  கணிக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் கிடைத்த பண்பாட்டு எச்சங்கள், காலத்தில் அதைவிடப் பழமையானவையாக இருக்கலாம் என்னும் முடிவுக்கும் கொண்டுவந்திருக்கிறது. இந்த ஆய்வுகளில் கிடைத்த கருப்பு, செந்நிற மட்பாண்டங்கள், முன்னைய இரும்புக் காலத்துடன் தொடர்புடையவை எனவும் கருதப்படுகிறது. 

தமிழர்கள், இரும்பைக் கண்டுபிடித்த அதே சமகாலங்களில், எகிப்து நாகரீக மக்களிடமும் இரும்பினால் செய்த சிறிய பொருட்கள் பாவனையில் இருந்திருக்கின்றன. சிறிய மணிகள், தலைவனுக்கான சிறு கத்தி போன்றவை இரும்பினால் செய்யப்பட்டிருந்ததும் தெரிந்தது. ஆனாலும், தமிழனின் இரும்புப் பயன்பாடுதான் முதன்மையானது என்ற முடிவுக்கே அகழ்வாராய்சி அறிஞர்கள் வந்திருக்கிறார்கள். காரணம், எகிப்தியர்கள் இரும்பைக் கண்டுபிடிக்கவில்லை. மாறாகக் கண்டெடுத்தார்கள். தமிழர்களோ, இரும்பைக் கணபிடித்திருக்கிறார்கள். “கண்டெடுத்தார்களா? இதென்ன புதுக் கதை?” என்னும் வியப்பு உங்களுக்குத் தோன்றலாம். 

விண்வெளியிலிருந்து புவிக்குள் நுழையும் சிறியளவான விண்கற்கள் (meteorite), பெரும்பாலும் இரும்பும், நிக்கலும் கலந்து, ஒரு கலவை உலோகமாக இருக்கும். இதை siderite என்பார்கள். இந்த இரும்பைக் (Meteoritic iron) கண்டெடுத்த மனிதர்கள், அதிலிருந்து மணிகளையும், சிறு கத்திகளையும் உருவாக்கித் தங்கள் தலைவனுக்குப் பரிசளித்திருக்கிறார்கள். அது கண்டுபிடிக்கப்பட்ட தனி இரும்பு அல்ல. கண்டெடுக்கப்பட்ட இரும்பு. பூமியின் மையக் கோளும் (Earth‘s Core), இரும்பும், நிக்கலும் சேர்ந்த கலவையால் உருவானதுதான். 

தூய இரும்பை, இன்று வரையான வரலாற்றுச் சாட்சியங்களின்படி, தமிழரே முதன்முதலில் கண்டுபிடித்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அத்துடன், 3200 ஆண்டுகளில் ஆரம்பித்ததாகச் சொல்லப்படும், ‘இரும்புக் காலம்’ (Iron Age), 6000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதித் தமிழர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது. 

Wednesday, 2 December 2020

தமிழகநதிகள்,

 #தமிழகநதிகள்??  1.கடலூர் மாவட்டம்  a)தென்பெண்ணை, b)கெடிலம், c)வராகநதி, d)மலட்டாறு, e)பரவனாறு,                          f)வெள்ளாறு, g)கோமுகி ஆறு, h)மணிமுக்தாறு, i)ஓங்கூர்  2.விழுப்புரம் மாவட்டம்  a)கோமுகி ஆறு, b)மலட்டாறு, c)மணிமுத்தாறு  3.காஞ்சிபுரம் மாவட்டம்  a)அடையாறு, b)செய்யாறு, c)பாலாறு, d)வராகநதி, e)தென்பெண்ணை,                   f)பரவனாறு     4.திருவண்ணாமலை மாவட்டம்  a)தென்பெண்ணை, b)செய்யாறு, c)வராகநதி, e)வெள்ளாறு  5.திருவள்ளூர் மாவட்டம்  a)கூவம், b)கொஸ்தலையாறு, c)ஆரணியாறு, d)பாலாறு  6.கரூர் மாவட்டம்  a)அமராவதி, b)பொன்னை  7.திருச்சி மாவட்டம்  a)காவிரி, b)கொள்ளிடம், c)பொன்னை, d)பாம்பாறு  8.பெரம்பலூர் மாவட்டம்  a)கொள்ளிடம்  9.தஞ்சாவூர் மாவட்டம்  a)காவிரி, b)வெட்டாறு, c)வெண்ணாறு, d)கொள்ளிடம்,  e)அக்கினி ஆறு  10.சிவகங்கை மாவட்டம்  a)வைகையாறு, b)பாம்பாறு, c)குண்டாறு, d)கிருதமல் ஆறு,  11.திருவாரூர் மாவட்டம்  a)காவிரி, b)வெண்ணாறு, c)பாமணியாறு, d)குடமுருட்டி  12.நாகப்பட்டினம் மாவட்டம்  a)காவிரி, b)வெண்ணாறு  13.தூத்துக்குடி மாவட்டம்  a)ஜம்பு நதி, b)மணிமுத்தாறு, c)தாமிரபரணி, d)குண்டாறு,       e)கிருதமல் ஆறு, d)கல்லாறு, e)கோராம்பள்ளம் ஆறு  14.தேனி மாவட்டம்  a)வைகையாறு, b)சுருளியாறு, c)தேனி ஆறு, d)வரட்டாறு, e)வைரவனாறு  15.கோயம்புத்தூர் மாவட்டம்  a)சிறுவாணி, b)அமராவதி, c)பவானி, d)நொய்யலாறு, e)பாம்பாறு f)கெளசிகா நதி  16.திருநெல்வேலி மாவட்டம்  a)தாமிரபரணி, b)கடனா நதி, c)சிற்றாறு, d)இராமநதி, e)மணிமுத்தாறு, f)பச்சை ஆறு, g)கறுப்பா நதி, h)குண்டாறு, i)நம்பியாறு, k)கொடுமுடிஆறு,   l)அனுமாநதி, m)கருமேனியாறு, n)கரமணை ஆறு ~~~~~|~~~~~~~~ தாமிரபரணி துணை ஆறுகள் (சேர்வலாறு. மணிமுத்தாறு. கடனா ஆறு. பச்சையாறு. சிற்றாறு. பேயனாறு. நாகமலையாறு, காட்டாறு.சோம்பனாறு,கௌதலையாறு. உள்ளாறு.பாம்பனாறு. காரையாறு.நம்பியாறு கோதையாறு. கோம்பையாறு. குண்டாறு = இவை அனைத்தும் தாமிரபரணியின் ப்ரியமான துணையாறுகள் )  17.மதுரை மாவட்டம்  a)பெரியாறு, b)வைகையாறு, d)குண்டாறு, e)கிருதமல் ஆறு,   f)சுள்ளி ஆறு, g)வைரவனாறு, h)தேனியாறு, i)வாட்டாறு, j)நாகலாறு, k)வராகநதி, l)மஞ்சள் ஆறு, m)மருதாநதி, n)சிறுமலையாறு, o)சுத்தி ஆறு, p)உப்பு ஆறு  18.திண்டுக்கல் மாவட்டம்  a)பரப்பலாறு, b)வரதம்மா நதி, c)மருதா நதி, d)சண்முகாநதி e)நங்கட்சியாறு, f)குடகனாறு, g)குதிரையாறு, h)பாலாறு, i)புராந்தளையாறு,                      j)பொன்னை, k)பாம்பாறு, l)மஞ்சள் ஆறு  19.கன்னியாகுமரி மாவட்டம்  a)கோதையாறு, b)பறளியாறு, c)பழையாறு, d)நெய்யாறு, e)வள்ளியாறு  20.இராமநாதபுரம் மாவட்டம்  a)குண்டாறு, b)கிருதமல் ஆறு, C)வைகை, d)பாம்பாறு,          e)கோட்டகரையாறு, F)உத்திரகோசம் மங்கை ஆறு  21.தருமபுரி மாவட்டம்  a)காவிரி, b)தொப்பையாறு, c)தென்பெண்ணை    22.சேலம் மாவட்டம்  a)காவிரி, b)வசிட்டாநதி, c)வெள்ளாறு  23.விருதுநகர் மாவட்டம்  a)கௌசிகாறு, b)வைப்பாறு, c)குண்டாறு, d)அர்ஜுனா நதி, e)கிருதமல் ஆறு ~~மக்களால் காலகாலமாக பயன்பாட்டிவ் ப்ரியமான இருத்த மேற்கண்ட ஆறுகளில் தற்போது எவையெவை உள்ளன/இல்லை. என்பதை அந்தந்த மாவட்டத்தில் வசிப்போர்  அறிந்து கொள்ளவும்.. #ப்யாரீப்ரியன்.மீள் .. தொகுப்பு...

Sunday, 23 August 2020

Love Dictionary

 அகராதி...

#பால்யகாதலில் - பக்குவமின்மை

#பள்ளிக்காதலில் - பருவமின்மை..

#பருவக்காதலில் - இனக்கவர்ச்சி..

#பார்த்தகாதல் - சுவாரசியம் குறைந்தும்..

#பார்க்காமலேகாதல் - பார்த்து உண்மையை புரியவைக்கும் வரையிலும்..

#சொல்லியகாதல் -நிறைவேறியும்

#சொல்லாதகாதல் -நிறைவேறாமலும்..

#ஊர்சுற்றும்காதலில் - ஊரார் தூற்றலிலும்

#உண்மைக்காதல் -அழியாமலும்

#உரிமையானகாதல் - உறவுகளை மேம்படவைப்பதிலும்.

#தைரியகாதல் - நிச்சயதிருமணத்திலும்

#தில்லாலங்கடிகாதல் - ஒருமுறை அடையும் வரையிலும்.

#திருட்டுகாதல் - அடுத்தவர் அறியும் வரையிலும்..

#இருட்டுகாதல் - காமம் அடங்கும் வரையிலும்..

#கடுதாசிகாதல் - பதில் கடிதம் வராத வரையிலும்..

#குறுஞ்செய்திக்காதல் - மற்றவர் பார்க்காத வரையிலும்..

#செல்போன்காதல் - அவரைவிட உயர்ந்தவர் கிடைக்கும் வரையிலும்..

#வலைதளகாதல் - புதிய அறிமுகம் கிடைக்கும் வரையிலும்..

#விலைமாதர் காதல் - பணம்தீரும் வரையிலும்..

#வேலைக்காரிக்காதல் - மனைவிக்கு தெரியாமலும்

#வேலைசெய்யுமிடக்காதல் - வேலையின் ஓய்வு நேரங்களிலும்..

#சினிமாகாதல் - கனவுலகின் ஆசையாலும்

#கவிதைகாதல் - கவிஞராகும் வரையிலும்..

#காவியக்காதல் - காதலில் வெற்றி பெறும் வரையிலும்..

#கல்யாணகாதல் - திருமணம் முடியும் வரையிலும்..

#கணவன்மனைவிகாதல் -கல்லறைக்கு போகும் வரையிலும்..

#ஒருதலைக்காதல் - மீண்டும் துணைக்கான வாய்ப்பு கிடைக்கும் வரையிலும்..

#காலம்கடந்தகாதல் - பயன்தந்து இனிக்கும் வரையிலும்..

#கடைசிகாலக்காதல் - உறவின் உன்னதத்தை எண்ணும் போதும்.

#கற்பனைக்காதல் - உண்மையாக மாறும் வரையிலும்.. 

#கண்மூடிக்காதல் - தகுதியை உணரும் வரையிலும்..

கண்டு...கண்ட பின் #அன்பினால் உண்மையாக உணர்வு பூர்வமாக உணருவதே..

#காதல்

அன்புடன்...

#ப்யாரீப்ரியன்...

Wednesday, 19 August 2020

போர் நுணுக்கங்களை அறிவோம்..

 போர்நுணுக்கம்-2 .


வரலாற்றில் மன்னர்கள் தங்களுடன் போர்புரிய வரும் எதிரிநாட்டு வீரர்களை அழிக்க எவற்றை எல்லாம் எப்படியெல்லாம் ப்ரியமாக பயன்படுத்தி வந்தனர் என்பதை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இளைய தலைமுறையினரும் அறியவே இப்பதிவு

(இணையத்தொகுப்பு)...


#தூண்டில்/ பெருங்கொக்கு- கொக்கு போன்று இதன் நுனியில் ஒரு கொளுக்கி இருக்கும். இதன் மூலம் அகழியினுள் உள்ள எந்த பொருளையும் இலகுவாக வெளியில் தூக்கி வீசி விடலாம்.


#ஆண்டலையடுப்பு - 


இது ஆந்தையின் தலை போன்ற அமைப்புள்ள பாத்திரமாகும்.


→ காய்பொன் உலை- உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு, செப்புக் குழம்பு


→ பாகடு குழிசி- சூடான தேன் கொண்ட பாத்திரம்.


→ பரிவுறு வெந்நெய்- சூடான எண்ணெய் கொண்ட பாத்திரம்.


→ காடி/ மிடா - கீழே உள்ளதைப் போன்ற ஓர் பெரிய அடுப்பில்தான் மேலேயுள்ள மூன்றும் காச்சப்படும்.


#விதப்பு- இதிலிருந்துதான் எதிரி மீது எண்ணெய் போன்றவை ஊறப்படும்.


#கவண்/ இடங்கணிப்பொறி (இடம் + கணி + பொறி ) :


#கல்லிடுகூடை- எதிரிகள் மீது வீசுவதற்கு கோட்டை மதில் மேல் வைக்கப்பட்டிருக்கும் எறிகற்கள் கொண்ட கூடை.


#தொடக்கு/ நூக்கியெறி பொறி - இதன் நுனியில் ஒரு கயிறு/ சங்கிலி இருக்கும்.இதன் மூலம் எதிரி வீரனின் கழுத்தினுட் செருகி அவனைப் பிடித்து கழுத்தில் பிடித்து தூக்கி கொன்று வீசி விடலாம்.


#கவை/ நெருக்குமர நிலை- மதில் மீது ஏறுவோரை மறித்துத் தள்ளும் ஆயுதமிது. மிக நீண்ட கைப்பிடி கொண்டது.


#புதை- அம்புக்கட்டு


#ஏவறை/ சூட்டிஞ்சி - சிறுசிறு துளைப் பொந்துகள் போலிருக்கும் இவற்றிலிருந்து எதிரி நோக்கி அம்பு எய்யப்படும்.


#ஆரல்/ குருவித்தலை - மதிற்சுவரின் மேல் மறைப்பு


#ஞாயில்/ நாயில்/ ஞாஞ்சில்/ ஏப்புழை - கோட்டை சுவரில் உள்ள இரு குருவித்தலைகளுக்கு இடையிலான இடம். இங்கிருந்து எதிரி மீது தாக்குதல் தொடுப்பார்கள்.


#கைப்பெயர்ஊசி- எந்தப்பக்கம் குத்தினாலும் சங்குதான். கோட்டை மதிலின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அல்லது மதிலில் இருந்து எறியப்படும்…..ஒருவேளை எதிரிகள் மதில் மேல் எறி மதிலின் உச்சியைப்பிடிப்பவர் இதன் மேல் கை வைத்தால் இது அவர்களின் கையினைக் கிழித்துவிடும்.


#சென்றெறிசிரல்/ கையம்பு - இது கையால் எறியும் ஆயுதம்தான்.


#பணை- பருமையான மூங்கில்


#எழுவுஞ்சீப்பு - சிறைக் கதவு போன்று இரும்பால் செய்யப்பட்ட ஓர் வாயிற்கதவு. அவ்வளவு இலகுவில் இடித்து உடைக்க இயலாதது. ஐயவித்துலாம் கீழே இறக்கப்பட்டால் இது மேலே எழும்பும் ; ஐயவித்துலாம் மேலே தூக்கபட்டால் இது கீழே இறங்கும்.(கோட்டையின் பாதுகாப்பிற்காகத்தான்)


#கவர்தடி- இரு பக்கமும் கூரான எறிபடை… எறியவும் செய்யலாம்; குத்தவும் செய்யலாம்.


#கழு/ கழுக்கோல்/ யானைத்தடை -கோட்டைக்கு முன்னால் எதிரிப் படைகளின் மதிற்போர்க்கருவிகள், போரானைகள் உள்நுழையாமல் இருக்க வைக்கப்பட்டிருக்கும்.


#எந்திரவில் / வளைவிற்பொறி/ வேலுமிழ்ப் பொறி/ அம்புமிழ்ப் பொறி:

இதில் வைத்து எதிரி நோக்கி எய்யப்படும் எறிபடையின் பெயர் நாளிகம்


#ஐயவித்துலாம் /ஐயவி- கோட்டை வாயிலையும் அகழி தொடக்கத்தையும் இணைக்கும் ஓர் தூக்கு பாலம்.


#வல்லயம் - கோட்டையின் மதிலில் இருந்துகொண்டு கீழே உள்ள வீரரை குத்த பயன்படும் ஈட்டி. முனையில் கூரிய இரும்புள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஈட்டி ஆய்தம்.


#தாமணி-பொருட்களைக்கட்டி வைக்க உதவும் கயிறு.


#நாராசம் -இது ஒரு இரும்பால் ஆன அம்பு.& தீயம்பு..


#சலாகை - இது ஒரு இரும்பால் ஆன சிறு அம்பு.


#மிளை/ காவல்காடு - கோட்டை அகழிக்கு முன்னுள்ள செயற்கைக் காடு.


இங்கு தோட்டி எனப்படும் இரும்பு முட்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். காவல்காட்டினுள் வேலியாக நொச்சிமரங்களும் முள்வேலிகளும் அமைந்திருந்தன. இதனை வாழ்முள்வேலி,இடுமுள்வேலி எனப் பகுத்து காட்டரணைப் பலப்படுத்தியுள்ளனர்.


#வாழ்முள்வேலி - என்பது முள் செடிகளையும் மரங்களையும் வளர்த்து அவற்றால் ஆக்கிய வேலியைக் குறிப்பது. 


#இடுமுள்வேலி - முள்ளை வெட்டிக்கொண்டு வந்து பிற இடத்தில் இடப்படும் வேலி எனப்படும்.

காட்டரணை முற்றுகையிடும் பகைவர்களின் உயிரைக் கவரும் வகையில் பல நிறம் கொண்ட தவளை, பூராண், நண்டு, கம்பளிப்புழு, பல்லி, பூதிப்புழு, கவுதாரி ஆகியவற்றுடன் கீழாநெல்லியின் பட்டை, இலை, மலர், கனி, வேர், தண்ணீர்முட்டான் கிழங்கு, சேங்கொட்டை மரம், எருமையாட்டம் கொடிகளின் சாற்றுடன் சோர்த்துப் புகையை உருவாக்கினால் அப்புகை பகைவர்களின் திறனை அழித்து அவர்களின் கண்களைக் குரடாக்குவதுடன் பகைவர்களைக் கொல்லும் திறன் உள்ளது.—


அகழி/ கிடங்கு /உடுவை/ அகப்பா/ கயம்/ காடி/ உடு/ ஓடை/ இனைடயம் /உவளகம்/ நீரரண் / அகப்பா/ கிடங்கில்- (moat) கோட்டையைச் சுற்றியுள்ள நீரரண்.


எதிரிகள் அகழியில் உள்ள நீரை அருந்தும் பொழுது அவர்களை அழிக்கும் வகையில் அவர்கள் அறியாவண்ணம் சேங்கொட்டை, அரங்கன்,நாயுருவி, மருதமரம் ஆகியவற்றின் மலர்களுடன் ஏலமரம், தானிமரம், குங்கிலியம், ஆலாலம் ஆகியவற்றின் சாறும் செம்மறியாட்டின் குருதியுடன் மக்களின் குருதியையும் சேர்த்து நன்கு அரைத்து அதனைப் பிண்ணாக்குடன் நீரில் கலந்து விட்டால் இந்நிரை அருந்துபவனும் தொடுபவனும் உடனே இறந்துவிடுவான். 


#செய்கொள்ளி - கொல்லனால் காய்ச்சப்பட்ட செந்தீயான இரும்பு


#சுறட்டுக்கோல்/ தொரட்டி- இழுத்து விழுத்தும் கோல்.


#சுண்டுவில்


#கூர்ந்தரி நுண்ணூல்- தொட்ட கையை அறுக்கும் நுண்ணூல்= மாஞ்சா நூல்


#கற்பொறி - அவிழ்த்துவிட்டால் கீழே வந்து வீழ்ந்து எதிரியைத் தாக்கும்.. மீண்டும் இதனை சுழற்றி எடுத்துப் பயன்படுத்தலாம்.


#அடிப்பனை- கோட்டை மதிலில் இருந்து எதிரிகள் மீது இதனை எறிவார்கள்.


#விடுசகடம்- உருட்டி விடப் படும் தீச்சக்கரம


#முட்செடி- இக்கொடி கோட்டை மதில் மீது படரவிடப்பட்டிருக்கும்.


#நச்சுக்கொடி- இக்கொடி கோட்டை மதில் மீது படரவிடப்பட்டிருக்கும்.


#பதணம் /பரிகை /கற்பு / மதிலுண் மேடை/ அகப்பா /மஞ்சிவர் - கோட்டை மதிலில் நடக்கும்படி ஏற்படுத்தப்பட்ட மேடு.. இங்கு நிண்டபடி எதிரி மீது போர்புரிவார்கள்


#உக்கடம் - கோட்டை உயரத்திலிருந்து எதிரி இடராளிகளை காணும்படி உக்கடம் (watch tower) எனும் கட்டுமானம்.


#நிலவரண்


காட்டரணையும் நீரரணையும் கடந்து வெற்றி பெற்ற மன்னர்கள் அதனை அடுத்து தண்டை நிலப்பகுதியில் அமைந்துள்;ள நிலவரணை முற்றுகையிடுகின்றான். “நிலவரண் இருநிலைகளில் அமைந்திருக்கும். பகைவர்கள் புறமதிலைப் பற்றாமை பொருட்டு அதன் புறத்தேயுள்;ள வெள்ளிடை நிலமும் பகைவர் முற்றுகை நீடித்திருக்கும் போது அகத்தாருக்கு வேண்டும் உணவுப்பொருள்களைப் பயிர் செய்யும் வகையில் மதிலின் உட்புறமாக விடப்படும் தண்டை நிலம் நிலவரணாகும்


அகழிக்கும் மதிலுக்கும் இடைப்பட்ட இடமான புறநகரினை நிலவரண் என்பர். இங்கு காவல் வீரர்கள் தம் பாசறையை அமைத்துக் காவல் காட்டினையும் அகழியையும் அழித்துக்கொண்டு வரும் பகைவர்களின் படைகளை எதிர்த்துத் தடுத்து நிறுத்துவர். கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் தத்தம் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றும் கழிவுநீரும், மழைக்காலத்தில் கோட்டையில் இருந்து வெளியேறும் நீரும் அகழியைச் சென்று அடைவதற்கு முன்பாக இந்நிலவரணைக் கடந்து செல்கிறது. கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் இந்நீரை பயிர்செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்வர். இதனால் பகைவர்களின் நீண்ட நாள் முற்றுகையைச் சமாளிக்க இயலும். இத்தகைய சிறப்பிற்குரிய இவ்வரணைப் பாதுகாக்காவிடில் மக்கள் முற்றுகைக்காலங்களில் துயர்பட நேரிடும்.


#முடக்கறை- வாயிலுக்கு மேலுள்ள அம்பு வரும் துளைகள் .


#யாநகம் - ஒரு கயிற்றால் மதிலின் உச்சியில் இருந்து கீழ்நோக்கி இறக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கும். எதிரி வீரர்கள் வந்தால் அவர்கள் மீதிதை அவிழ்த்து விடுவார்கள்.


#சாலம்- தொடக்ககாலத்தில் கோட்டைகளை வெறுங்கல்லால் அன்றி, மரமுஞ் சேர்ந்தே கட்டினர்.


#அட்டாணி/ அட்டாலகம் / இதணம் / மேவறை / அலங்கம் - கோட்டை மதிலுக்கு மேலே ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் காவலரண். உள்ளே இருப்பவருக்கு வெளியே உள்ளவர்கள் தெரியக்கூடியவகையிலும் சிறு துளைகள் கொண்டு இருக்கும் போர்க் காலங்களில் இதன்மூலம் ஈட்டி, வில்லம்பு கொண்டு வெளியே உள்ளவர்களை தாக்க வசதியாக இருக்கும். வெளியில் இருப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்களைக் காண இயலாது என்ன செய்கிறார்கள் என்றும் அறிய இயலாது.


#அட்டாலை / இதண்/ பணவை - அட்டாலகத்தில் காவலுக்கு இருக்கும் வீரனை குறிக்கும் சொல்.


#வாயில் / கௌனி/ ஆத்தானம்/ அரிகூடம்/ கோட்டி- இது கோட்டைக்கான போக்குவரத்து வாசல்.


#ஒலிமுகவாயில்/ ஆசாரவாயில்/ தலைவாயில் - கோட்டையின் முக்கிய வாயில்.


நகரவாயிற் கதவை விட்டு புகும் வழி- புதவு/ புதவம்


நகரவாயிற்றிணையின் பெயர்- அளிந்தம்


நகரவாயிற் படிச்சுறுள்- அத்திகை


கவாடம் - கதவு

சிறுவாயில், பதவு, பூழை


#சுருங்கை/ கற்புழை/ மூடுவழி- கோட்டையிலிருந்து வெளியேறும் இரகசிய வழி.


#சிகரி / துருக்கம்/ அருப்பம்- மலைமேலுள்ள கோட்டை.


#கணையமரம் /துஞ்சுமரம் / தாழக்கோல் - மதிற்கதவுக்கு வலிமையாக உள்வாயிற்படியில் குறுக்கேயிடும் மரம்.


#புழை - புழை என்பது ஒரு கோட்டைக்கு பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு வழியாகும். இது முக்கிய நுழைவுவாயிலில் இருந்து வேறு ஒரு இடத்தில் இருக்கும்.


#பரிசை/ தட்டி - இடைவெளி இல்லாமல் வைரம் ஏறிய மரங்களால் அமைக்கப்பட்டு கோட்டை மதிலில் வைக்கப்பட்டிருக்கும். பகைவர் எய்யும் அம்புகளை இது தாங்கும்.


#நூற்றுவரைக்கொல்லி - ஒரே நேரத்தில் பல பேரை கைலாயம் காண வைக்கலாம்.


#நீர்வாளி- ஏற்பட்ட நெருப்பினை அணைக்க உதவும் நீர் கொண்ட வாளி.


#அரணி/ கடகம்/ பாவை/ பீலி/ புரிசை/ புறம்/ வண்சிறை/ வரணம்/ வரைபடி/ வாடம்/ வேணகை/ தூரியம்/ முத்தகம்/ பெருங்காரம்/ நொச்சி/ பாவை / ஆரம்/ வேலி / அரணம்/ வேதி/ சாலம்/ அல்/ அரணாம்பரம்/ ஓதை - மதில்


கடிமதில் - காவல் மிகுந்திருந்த மதில்

இறைப்புரிசை, நெடுமதில் - மிகவும் உயர்ந்த மதில்

மதிலரண் வகைகள்-


அகன் மதிலரண்

உயர் மதிலரண்

திண் மதிலரண்

அருமதிலரண்.

இவ்வாறு அமைந்த மதிலைப் புறமதில்,இடைமதில், அகமதில் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியிருந்தனர்.


இடைமதில் பகைவர்களின் முற்றுகை நீடித்து இருப்பினும் உள்ளே இருப்போர் உணவிற்கு எவ்விதக் குறையும் இல்லாமல் தமக்கு வேண்டிய உணவினை விளைவித்துக் கொண்டும் வாழும் வகையில் பரந்த நிலப்பரப்பினை உடையது.புறமதில் வளைந்த இடங்களை உடையதாகவும்

அகமதில் என்பதுதன் கடைசி மதிலாகும்

மதிலுக்குள் உள்ள நிலம்- காப்பு

கோட்டைக்குள் நகர்- அகநகர்

திண்ணம்- குறடு, அளிந்தம்

அடிமணை- நிலைக்களம்

மண்டபம்- களம் , தளம்

அரசர் வீதி- பூரியம்

அரசிருக்கை- அரியாசனம், அத்தாணி, வேந்தவை

சித்திரக்கூடம் - தெற்றியம்பலம்

அம்பலம்- மன்றம், பொது அவை, பொதி

அரசரில்லம்- சாலை, மாளிகை, குலம், அரண்மனை, பவனம், கோவில்.

வாரி - சுற்று மதில்

ஓதை/ ஆள்வாரி நிலம்- மதிலைக் காப்பாற்றும் படையினருக்கு மதிலையொட்டினாற் போல் உள்ளசாலை  

உவளகம்- கோட்டையின் உட்பக்கம்.

கோசம் - மதிலுறுப்பு

பெருகாரம்- இது கோட்டையினுள்ளே சுற்றிவரும் பெரியபாதை.

இஞ்சி - பெரும்பாலும் செம்பு புனைந்தியற்றியதாகவும் சிறுபான்மை அரைத்த சாந்திட்டமைத்ததாகவும் பகைவரால் எளிதில் தாக்க முடியாதவாறு திண்ணிதாகக் கட்டப்பட்ட மதில் ஏனை வகை மதில்களிலும் மிக இறுகியிருத்தல் பற்றி இஞ்சி எனப்பட்டது.


#பதப்பாடு - கோட்டையரணுக்கு பாதுக்காப்பாக வெளியே கட்டப்பட்டிருக்கும் மற்றோர் மதில்.


#கொத்தளம்/ தோணி/ குடிஞை - கொத்தளம் என்பது, கோட்டை மதில்களில் இருந்து வெளித் துருந்திக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு ஆகும்.


#கருவிரலூகம்/ குரங்கு- கோடை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் . பெரும்பாலும் தாட்டான் வகை குரங்குளே அங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும். இவை மேலே வரும் எதிரியினைக் கடித்துக் குதறும்.


#கோண்மா - புலி , சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள் கோட்டை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மதிலை தொடுவோரை இவை கவனித்துக் கொள்ளும்.


#முதலை, காராம், விடங்கர்- இவை எல்லாம் அகழிக்குள் இருந்தன.


#கழுகு&கூகை -போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்ல  பயன்படுத்தப்பட்டன


#குடப்பாம்பு/ கத நாகம்- எதிரி வீரர்கள் மீது எறிய குடத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் பாம்புகள்.


#பாவை- உண்மையான வீரர்கள் போன்று செய்யப்பட்ட பொம்மை பொய் வீரர்


#கரும்பொன்னியல் பன்றி: - இரும்பு நிறம் கொண்ட பன்றி- காட்டுப்பன்றி.


இவற்றினை கோட்டைக் கொத்தளங்களில் கட்டி வைத்திருப்பதால் இவை எழுப்பும் ஒலியினைக் கேட்டு எதிரியின் யானைப் படை திணறி ஓடும்.. மேலும் இவற்றிற்கு மேலே எண்ணெய் பூசி நெருப்பினை வைத்து எதிரியினை நோக்கி ஓட விடுவதால் அவை எதிரியினைக் குழப்புவதோடு மட்டுமல்லாமல் அவனின் யானைப்படையினை மிரள வைக்கும். இவ்வாறு பல போர்கள் வரலாற்றில் நடைபெற்றுள்ளன.


#தோற்றமுறு_பேய்களிறு - அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட யானை -

இவ்யானைகளானது மதிலின் பின் புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவை மதிலை கடந்து வருபவர்களை சிதறடிக்கும்.


#துற்றுபெரும் பாம்பு - மலைப்பாம்பு


இது எதிரிகளை அச்சமுறுத்தவும் சில வேளைகளில் அவர்களை விழுங்கவும் செய்திருக்கும்.


#ப்யாரீப்ரியன்...இணையத்தொகுப்பு..

Saturday, 15 August 2020

பழந்தமிழரின் போர் ஆயுதங்கள் சில..

 பழந்தமிழரின் போராயுதங்களில் சில:


வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்தகைய போராயுதங்களைப் ப்ரியமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாகவே அமைந்துள்ளது .


தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும்.


கைக்கொள்படை/ கைப்படை: - (hand hold weapons)

கைவிடுபடை/ எறிபடை

கைவிடாப்படை

கைக்கொள்ளாப்படை: - ( siege & defense tools)


தோய்த்தல் - ஆயுதங்களைக் காய்ச்சி நனைத்தல்

துவைச்சல் (படைக்கருவி) - tempering (weapons)

பணைத்தல் - AIM MISS

இலக்கு, மச்சை - target

ஆயுதப்பயிற்சி செய்யுமிடம் - சரம்புச்சாலை, பயிற்சிப்பாசறை

சரம்பு - ஆயுதப்பயிற்சி

பணிக்கன் - படைக்கலம் பயிற்றுவிப்போன்.

சலகுபிடித்தல் - படைப் பயிற்சி எடுத்தல் (to practice drill)

ஆயுதங்கள் வைத்திருக்குமிடம் - ஆயுதசாலை, படைவீடு, ஆயுதக்களஞ்சியம், தில்லெரி.

எஃகம் / துப்பு / படைக்கலம் / ஆய்தம்/ ஏதி/ தானை/ கடுமுள்/ துழுமுள் / படை/ கூர்த்திகை/ அரி -ஆயுதப்பொது

ஆய்தம் என்பது தமிழே. இச்சொல்லே பிற்காலத்தில் 'ஆயுதம்' என்று சமற்கிருததில் திரிந்தது 


எஃகம் - எஃகில் இருந்து செய்யப்பட்டதே எஃகம் .

ஆய்தங்களின் கூர்மையின் பெயர் - வல், வள், வசி , வை, அள், பூ, ஆர் (sharpness, pointedness)

ஆயுதத்தின் நுனி - முனை (tip of a weapon)

அலகு - ஆயுதத்தின் கொல்லும் கூர்மை கொண்ட பகுதி (blade of a weapon or instrument)

ஆயுதத்தின்பல்- கரு

கழி - ஆயுதப்பிடி

அடைப்பம்- போர்க் கருவிகள் வைக்கும் பை/ பேழை.

தடறு- ஆயுதவுறை / படையுறை/ கருவிப்புட்டில்

காரோடன் - ஆயுதவுறை செய்வோன்.

வாளுறை - புட்கரம்/ வாளலகு /கட்காதாரம்/வள் / இடங்கம்

வாண்முட்டி - வாளின் பிடி (handle or hilt of a sword)

கிண்ணி- வாளின் கைப்பிடி உறை (cover of the hilt of the sword)

வாண்முகம் - வாளின் வாய் (edge of the sword)

சொருகுவாள் - உறையினுள் வைக்கப்பட்ட வாள்

ஆணி - வாளின் அலகு (blade of sword)

கத்திப் பிட்டல் - கத்திக் கூடு

தாங்கு - வேல் / ஈட்டியின் பிடி (The staff of the spear)

பிடங்கு - வேல் / ஈட்டியின் பிடியானது இலையுடன் சேருமிடம் (The part of a lance to which steel is fixed.)

தரங்கு - வேல் / ஈட்டியின் நுனி {The point of in spear (end tip)}

இலை - வேல் / ஈட்டியின் அலகு (blade of a spear or lance or javelin)

காம்பு - கோடாரிகளின் அலகு (blade of the battle axe)

தலை - செண்டு அ கரளாக்கட்டை போன்றவற்றின் தலைப்பகுதி (head part of a mace or club)


தமிழ் அகராதிகளில் முத்தலைச்சூலம்/ முக்குடுமி (பெரியபு. உருத்திர. 10) என்னும் வித்தியாசமான சூலத்தைக் குறிக்கும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சூலம் என்றால் நாம் அறிந்தது..

இரண்டு பெயர்களும் தலையினையே குறிக்கின்றன. மேலும் இந்த ஆய்தத்தினை தலையில் மணிமுடி போல தாங்கியபடி ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற ஓர் முத்திரையானது சிந்துசமவெளி ஆய்வில் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றது.

ஆகவே இவை ஏதேனிலும் ஒன்று அதற்கான பெயராக இருக்கலாம் என்பது பதிவரின் கருத்து.


#சூலம் / காளம் / மும்முனை/ நல்வசி/ சூல் - இதில் பல வகையுண்டு.

எரிமுத்தலை - நெருப்பினைக் கொண்ட சூலம்

சத்தி - சிறு சூலம்

"தாமேற் றழுத்திய சத்தி வாங்கி" (பெருங். மகத. 20, 63)

"ஊனக மாமழுச் சூலம் பாடி"(திருவாச. 9:17)


#முக்கவராய்தம் / முக்கவர்தடி / முக்கப்பு / முக்கவர்சூலம்/ முத்தலைக் கழு - இதன் குத்தும் பகுதியானது சூலத்தின் குத்தும் பகுதியைக் காட்டிலும் நீளமாக இருக்கும். இது வேட்டைக்குப் பயன்படும் ஓர் ஆய்தம். தேவைப்பட்டால் களத்திலும் சுழலும்.


#முத்தலைக்கழு - கழு போன்ற நீண்ட குத்தும் அலகூகளைக் கொண்ட சூலம்.

"பருமுக் கப்பினரே"(தக்கயாகப். 98)

"முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில்மிகும் காராரிந்த மேனி"


"கழு முள் மூவிலை வேல் முத்தலை கழு…சூலப் படை என வழங்கும்" (நிக.தி:7:2)


#சூலவேல்/ மூவிலைச்சூலம் / இலைத்தலைச் சூலம்- மூன்று வேலின் இலை போன்ற முனைகளைத் அலகாகக் கொண்ட சூலம்.


#மூவிலைவேல் / முத்தலைவேல் - வேல் என்பது ஓரிலை போன்றது. மூவிலை வேல் என்பது மூன்று இலைகளால் ஆனது. 

முருகனின் கையில் இவ்வாய்தம் உண்டு.


#வேல்/ உடம்பிடி/ ஞாங்கர்/ விட்டேறு : முக்கோண இலைவடிவ கூரிய முனை கொண்ட ஆய்தம். இதனை கையில் வைத்தே சண்டையிடுவர்... கூடியவரை எறிவதில்லை!

வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! வேலின் கீழ் நுனி வட்டமாக முடியும்!

வடிவேல் - மிகவும் கூர்மையான வேல்


#சிறியிலை எஃகம் - சிறிய ஒடுங்கிய இலையினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்..


#ஏந்திலை/ முகட்டுவேல் - இலை நீளமாக இருப்பது போன்ற வடிவினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!

ஏ → ஏந்து = உயரம்

இலை - இலை

ஏந்திலை = நெடிய இலை


#தூரியம் - தூரிகை போன்ற ஒரு வகையான வேல் . இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!


#முத்தகம் - முத்தக இலை போன்ற அமைப்பினை உடைய வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும். கூடியவரை எறிவதில்லை!


#அயில்/ அயில்வேல் - கோரைப்புல் போன்று கொஞ்சமாக அகண்டு மிகவும் நீண்டிருக்கும் ஓரு வகையான வேல்.


#சங்கு / சங்கம்- இலையானது ஒரு பக்கம் வளைந்து இருக்குமான ஆய்தம். கூடியவரை எறிவதில்லை!

சுல்- சல்- சழி - சருக்கு- சக்கு- சங்கு- சங்கம


#பூந்தலைக்குந்தம் -  இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை.


#சவளம் :- சவண்ட வாள் போன்ற தோற்றம் உடைய ஆய்தம். கூடியவரை எறிவதில்லை! இதில் இரு வகை உண்டு:

சுவள்→ சவள் → சவளம்

சிறுசவளம் - சிறிய சவளம்

பெருஞ்சவளம்/பீலி - நன்கு சவண்ட பெரிய சவளம்.


#உழவாரம் - அலகானது கொஞ்சம் பார்பதற்கு நேராக்கி நிறுத்திய மண்வெட்டி போல இருக்கும். முன்பக்கம் மட்டுமே சப்பையாக்கப்பட்டு கூராக இருக்கும்!


#சல்லியம்- ஆணி/ முள் போன்ற அலகினை உடைய எறிபடை !

சுல் = குத்தற்கருத்து வேர்.

சுல் → சல் = கூரிய முனையுள்ளது, குத்தும் கருவி.

சல் + இயம் = சல்லியம் → ஆணி/ முள் போன்ற கூரிய முனை

கீழ்க்கண்ட சல்லியமானது தென்தமிழ்நாட்டு அரசர் ஒருவரால் பிரித்தானிய பேரரசர் ஒருவருக்கு ப்ரியமான அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதாகும்


#அரணம் - அரணத்தின் வடிவினை ஒத்த இலையினைக் கொண்ட வேல் .

இதே பொருள் கொண்ட செருப்பு மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றினதும் வடிவத்தினைக் காண்க. அனைத்தும் ஒரே வடிவமே!


#வல்லயம் / குத்துவல்லயம் - இது அதிநீளமான ஓர் ஆய்தமாகும்; முனையில் கூரிய கூர்மையுள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஆய்தம். எட்டத்தில் நின்றபடியே எதிரியை குத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. இதனைக் கூடுதலாக யானைமேல் உள்ளவர்கள் பயன்படுத்துவார்கள்!


#கழுக்கடை -குச்சியில் நீளமான கூர்மையான முனையினைக் கொண்ட ஈட்டி.


#நேரிசம்- நீண்ட முள்போன்ற மெல்லிய தலையினைக் கொண்ட ஈட்டி. இது எறிபடை வகையே.

நேர்- நேரான

இல்>இளி>இசி - முள் / குத்துவது

அம் -விகுதி


#திருகுதடி- திருகுவது போல இருக்கும் ஈட்டி அலகு. இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. இது எறிபடை வகையே.


#தோமரம்/ கைவேல்/ கப்பம்/ கப்பணம்/ கற்பணம் - சிறிய படை.. இது பார்ப்பதற்கு சிறிய வேல் போன்று இருக்கும்.. இதே போன்ற சிலதினை முதுகில் ஓர் தூணி போன்று ஒன்றினை அமைத்து அதனுள் வைத்து செருக்களம் நோக்கி எடுத்துச் செல்வர். தேவைப்படும் போது எதிரி நோக்கி விட்டெறிவர் இல்லையேல் கையில் வைத்து சண்டையிடுவர்..

இப்படை வீரர்களை அக்காலத்தில் தோமரவலத்தார் என்றழைத்தனர்.


#கவர்தடி- இருபக்கமும் கூரான எறியாய்தம்.


#பொத்திரம் -

பொள்- துளையிடுவது போன்ற

திரம்- தகரைச்செடியின் கொத்துப் பூப்போல குண்டாக இருக்கும் கூர்மையான அலகு.


#இட்டி / ஈட்டி/ எறியீட்டி/ வண்டம்/ தரங்கம்/ குந்தம்- எறிபடை …

ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும் ; ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்.

இல் > இள் > ஈட்டு > ஈட்டி

துளங்கு → தளங்கு → தரங்கு → தரங்கம்

குல் > குன் > குந்து > குந்தம்

வண் - மிகுதி

வண்டம் - மிகுதியாக இருக்கும் ஆய்தம்.. (வேலினை விட ஈட்டி / குந்தம் தானே போர்க்களத்தில் அதிகமாக இருக்கும்!)


#இரட்டைக்கருவீட்டி- நீண்ட கைபிடி காணப்படும்.


#பட்டிசம் - இது சிங்களத்தில் பட்டிச்தான என்றுள்ளது


#சாக்கத்தி


#கணுவாளி- முள்கொண்ட முட்டி


#வயிரமுட்டி - இடிப்பதற்கான முளைகளை உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆயுதம்.


#இடிக்கட்டை - மாட்டுக்கொம்பால் செய்த கையில் வைத்து சண்டையிடும் ஆய்தம்.


#குத்துக்கட்டை - குத்துவதற்கான கூர்களையும் இடிப்பதற்கான முளைகளையும் உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆயுதம்.


#வில்லம்பு -

வில் என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள்- சிலை/ சாபம்/ குணி/ கேகயம்/ வேணு/ சிந்துவாரம்/ முனி/ தவர்/ தடி/ தண்டாரம்

வில்வட்டம் - archery

வில்லை தயாரிப்பவர்- வில்செய்வோன்

வில்லில் நாண் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வில் குலைவில் எனப்படும்.

வில்லின் நாணோசை - இடங்காரம்

குலை - வில்லின் குதை (notch in a bow to keep the string in check.)


 நாண் என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள் - பூரி , தொடை, ஆவம், பூட்டு, சிஞ்சினி, நரம்பு, நாரி, வடம், குணம், கப்பம்.


#அம்பு: (இதில் பல வகையுண்டு)

அம்புகளை தயாரிப்பபவர்- அம்பன்

→ அம்பு என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள் - கதிரம், கலி, சாயகம், பீலு, சாரகம், பூதை, சிரி, சிருகம், வண்டு, சாசம், சிலீமுகம், தொடை, தோணியம், அங்கூடம், அத்திரி, வணகம், விக்கம், ஈ,விடூசி, வேந்திரம், ஐமை, சாயகம், பகழி, சரம், வாளி, கோ, அரி, ஏ, காண்டம், அப்பு, வாசம், வாணி


இரும்பினால் செய்யப்பட்ட அம்பு - நாராசம், சலாகை

அம்பின் வகைகள்

கோரை

பாரை

ப்ரியம்

கங்கபத்திரம்

தாமரைத் தலை

வச்சிரப் பகழி

முச்சிரப் பகழி

அஞ்சலி

குஞ்சரக்கன்னம்

எரிமுகப் பகழி

உரும் இனப் பகழி

நெருக்கி மற்று அனந்த கோடி

முருக்கின் உற்று அனந்த கோடி

பல்லம்

பிறைமுகவாளி

சூகம் ,சூபம்

விசிகம்

கத்திவாளி அம்பு

.மொட்டம்பு - உதண்

அம்புக்கட்டு - புதை, கட்டு, கற்றை (sheaf of arrows)

அம்பின் நுனி - குதை, பகழி (pointed end of an arrow)

அம்புத் திரள் கட்டுங் கயிற்றின் பெயர்- பற்றாக்கை

அம்பு விடும் போது கையில் போடும் உறை- காழகம்

அம்புக்கொண்டை - உடு, புழுகு, குப்பி (head part of an arrow)

அம்பின் ஈர்க்கு- உடுவம், கோல் (shaft of an arrow)

அம்புத்தலை - புங்கம் (butt end of an arrow)

கைப்புடை- அம்பு பிடித்து இழுத்து விடும் இடம் (சிறகிற்கு பின்னால் இருக்கும் அந்தச் சிறிய இடம்)

அம்பின் சிறகு - பக்கம் (feather of an arrow)

உடுவும் உடுவமும் இணையும் இடம் - குழைச்சு (joining area of head and shaft of an arrow)


படிமப்புரவு : சொந்தமாக உருவாக்கியது'


→ அம்பு வைக்குமிடம் - (quiver) அம்பறாத்தூணி/ அம்புறைத்தூணி/ இடுதி/ புட்டில்/ கோக்குஞ்சம்/ கலாமிடம்/ அம்புக்கூடு/ தூணீரம்/ ஆவநாழி/ ஆவம் /அம்புறை/ புழுகு /கலாபம்/ வட்டில்/ அம்புயம்


#வரிவில்-வரிபோன்றமைந்த வில்

வலுவான வளைந்த மரக்கிளையின் கொம்பால் ஆகிய வில்- கொடுமரம்


#கார்முக வில் / அமைவில் - மூங்கிலால் செய்யப்பட்ட கார்காலமேகத்தில் தோன்றும் வானவில் போன்ற வில்.


#வாங்குவில் - நடுவில் நன்கு வளைந்திருக்கும் வில்.

இத்தகைய போராயுதங்களைப் ப்ரியமாக பயன்படுத்தி சிறப்பாக வீரத்துடன் வாழ்ந்தது நமக்கு பெருமையே... 

~~#ப்யாரீப்ரியன்...

இணையத்தொகுப்பு..

Saturday, 8 August 2020

சங்கேதமொழி

 #நுஷுமொழி..

சீனப்பெண்களின் சங்கேத மொழி'.-

மனித நாகரிக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்களை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெண்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். இதை புரிந்து கொண்ட பெண்கள் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண்கள் போல் நடிக்கத் தொடங்கினார்கள்.


சீனப் பெண்கள் ஒருபடி மேலே போய் தங்களுக்கு எழுதப் படிக்கக் கூட தெரியாது என்பது போல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல. பல நூற்றாண்டுகள் இந்த நடிப்பு தொடர்ந்தது. அப்போது பெண்கள் தங்களுக்கு என்று தனி எழுத்து வடிவம் பயன்படுத்த தொடங்கினார்கள்.

பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள். நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று அர்த்தம்.p.p

தங்கள் பெண்கள் இப்படி எழுத்துரு கொண்ட மொழியை பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்பதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் சொன்னார்கள் பெண்களால் ரகசியத்தை காப்பாற்றமுடியாது என்று.

சீன மொழி எழுத்துக்கள் பெரிதாகவும் கம்பீரமாகவும் இருக்கும். 'நுஷு' எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடு கிறுக்கியது போல் இருக்கும். ஓவியங்களிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம். பார்டர் போல் எழுத்துக்களை பயன்படுத்தி தகவலை சொல்லிவிடுவார்கள்.

பெண்கள் ஆண்களின் கண்ணில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போன பெண்கள் அங்கு தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாக தெரிவித்தார்கள்.

ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும் பேத்திக்கும் கற்று தந்து வழிவழியாக காப்பாற்றி வந்தார்கள். பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களை கூசாமல் பேசிய மொழி இது.

தற்போது நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை என்பது வேதனையான ஒன்று. யாங் ஹுஅன்ய் என்ற 98 வயது பெண் 2004-ம் ஆண்டு இறந்த போது நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழி தெரிந்த கடைசி பெண்.

பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட திகட்ட சொன்ன ஒரு மொழி இன்று உயிர்ப்போடு இல்லை. நூற்றாண்டுகள் கடந்து ரகசியமாக வளர்ந்த மொழியை இப்படி சாக விட்டுவிட முடியுமா..! அதற்காகத்தான் சீன அரசு நுஷு மொழியை பாரம்பரிய மொழியாக அறிவித்து அதற்காக ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.

ஏகப்பட்ட கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் இருக்கும் இன்றைய பெண்கள் கூட இப்படி ஒன்றை உருவாக்கமுடியுமா என்பது சந்தேகமே! 

#ப்யாரீப்ரியன்... மீள்...

Friday, 7 August 2020

படை அளவீடுகள்

 

#படைகள்..
மன்னர்கள் காலத்தில் இருந்த படை வகைகள்..
படை அளவுகள்..

தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, ஆகிய நாற்படைகள்.

#பதாதி .
ஒரு யானையும், ஒரு தேரும், மூன்று குதிரையும், ஐந்துகாலாட்களும் கொண்ட சேனைத்தொகுதி பதாதி என குறிப்பிடப்படுகிறது.

பதாதி  மும்மடி (மூன்று மடங்கு) கொண்டது  - சேனா முகம் எனவும்

சேனா முகம் மும்மடி கொண்டது - குமுதம் எனவும்

குமுதம் மும்மடி கொண்டது - கணகம் எனவும்

கணகம் மும்மடி கொண்டது - வாகினி எனவும்

வாகினி மும்மடி கொண்டது பிரளயம் எனவும்

பிரளயம் மும்மடி கொண்டது சங்கம் எனவும்

சங்கம் மும்மடி கொண்டது -சமுத்திரம் எனவும்

சமுத்திரம்  மும்மடி கொண்டது -சங்கமம் எனவும்

சங்கமம் மும்மடி கொண்டது - அநிகம் எனவும்

அநிகம் மும்மடி கொண்டது- அக்குரோணி எனவும் அளவீடு கொண்டதாக  அறியப்படுகிறது.

ஒரு அக்குரோணி என்பது
21,870 தேர்கள்,
21,870 யானைகள்,
65,610 குதிரைகள்,
1,,09,350 காலாட்படை வீரர்கள் கொண்ட படையாகும்.

இதுபோன்று கௌரவர்
அணியில் 11 அக்குரோணி படைகளும்,
பாண்டவர் அணியில் 7 அக்குரோணி படைகளும் இருந்தன்.
இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.

பாரதப்போரில்  பயன்படுத்திய பாண்டவர் அணி மற்றும் கௌரவர்கள் அணி கொடி சின்னங்கள்

#பாண்டவர்கள்

தருமன் - கிரகங்கள் சூழ்ந்த சந்திரன்

அர்ஜுனன் - குரங்கு

பீமன் - சிங்கம்

நகுலன் - தங்கத்திலான முதுகையுடைய சரபம்

சகாதேவன் - அன்னம்

அபிமன்யு - சாரங்கப் பறவை

பீமனின் மகன் கடோத்கஜன் - கழுகு

கண்ணன் - கருடன்

பிரத்யும்னன் - மகரம்

#கௌரவர்கள்

பீஷ்மர் - ஐந்து நட்சத்திரங்களுடன் கூடிய தாலக்கொடி (தாலம் பனை)

துரியோதனன் - சர்ப்பம்

துரோணர் - பீடத்தின் மீது மான் தோல் பொருத்தப்பட்டு அதன்மேல் வில்லும், கமண்டலம்

கிருபாச்சார்யர் எருது காளை)

அஸ்வத்தாமன் சிங்கவால்

கர்ணன்- யானை கட்டும் கயிறு

ஜெயத்ரதன் - கரடி

சல்லியன் - கலப்பை

கடோத்கஜன் - கழுகு இரத்தம் தோய்ந்த நிலை..
________________________________

மூவேந்தர்களுக்கும்  உரிய சின்னங்கள்

1 யானை
2 காளை
3சேவல்
4 குரங்கு
5 சிங்கம்
6 யாளி
7 கருடன்
8 பன்றி
9 சேல் ( மீன்)
10 மகரம்
11 புலி( வேங்கை)
12 அரவம் ( யரவம் பாம்பு)
13 ஒட்டகமும்
14 சங்கு (வலம்புரி)
15 கப்பல்
16 சிப்பி
17 கிளி
18 அன்னம் ( பறவை)
19 தொனி முரசு
20 மயில் ( தங்கமயில்)
21 கொடிய தாலம் மரம் ( தாலம் பனை)

இவை அனைத்தையும்  அறிந்து தங்களுக்குரிய பல நன்மை திண்மைகளை வென்று இந்த முத்திரைகளை விருதாக கொண்ட விருத்த பாடலை
தேடி அறிந்து ப்ரியமாக தகவல் அளித்தவர்..
#ஜான்_மில்டன்_பர்னாந்த் ஐயா அவர்கள்...

"திங்கள்வம் மிசதிகை பரதகுல பாண்டியர் தம்
ஜெயவிடால் #மூவேழ்வகை
செப்பிவாம் விவரமா யானையுங் காளையுஞ்
சேவலோடனு மந்தனனும்
சிங்கமும் யாளியுங் கருடனொடு பன்றியுஞ்
சேல் மகரம் வேங்கை யரவம்
திகழ் கனகமகனுடன் சங்கமுங் கப்பலுஞ்
சிப்பியங் கிளியன்னமும்
மங்கலாகார தொனி முரசு பைம்பொன்னுரூப
மயிலோடு கொடியதாலம்
மரமுமாகிய  விவைகளாகுமிவைகளையிவர்கள்
மகிமையோடுலகறியவே
தங்களுக்குரிய பல நன்மை தின் மைக்கெலாந்
தனி விருதென நடாத்திக்
கார்தலத்தேப பவனி வர தன்மாபழமையாய்ச்
சாற்றுவார் போற்றுவாரே"

உலக அளவில் அனைத்து அரசர்களை விடவும், மூவேந்தர்களான சேர, சோழ,பாண்டிய மன்னர்களில் அதிகப்படியான படைபலத்தை பெற்றவராக 1000 வருடத்திற்கு முன்பே உலகின் பெரும்பகுதிகளை வசமாக்கிய இராஜேந்திர
சோழனது போர் படையில் சற்றேறக்குறைய
12 -14 லட்சம் வீரர்கள்,
லட்சத்திற்கும் மேற்பட்ட
குதிரைகள்,
50,000 க்கும் மேற்பட்ட
யானைகள் இருந்துள்ளதாக
அறியப்படுகிறது.
#ப்யாரீப்ரியன்...
~~இணையத்தொகுப்பு.
https://m.facebook.com/story.php?story_fbid=3244038485679133&id=100002190405617